Facebook Twitter RSS

“சிரியாவில் இருந்து ஏவுகணை எந்த நிமிடமும் வந்து விழலாம்” இஸ்ரேலிய எச்சரிக்கை-viruviruppu


தமது நாட்டின்மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வது தொடர்பான முன்னேற்பாடுகளில் சீரியசாக இறங்கியுள்ளது இஸ்ரேல். இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு, போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் அவசர கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.
சிரியாவில் இருந்து எந்த நிமிடமும் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலை நோக்கி நடத்தப்படலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது எதைக் காட்டுகிறது என்றால், சிரியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் தாக்குதல் நிச்சயம் என்பதையே காட்டுகிறது. மேற்கு நாடுகள் சிரியா மீது தாக்கினால், சிரியா அவர்கள் மீது திருப்பித் தாக்குவதற்கு முன், இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தும் என்று ஊகிப்பது சுலபம்.
இன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு கூட்டிய கூட்டத்தில், சிரியாவில் இருந்து தொலைதூர ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் வரை ஏவப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேலதிக தாக்குதல்கள் லெபனான், மற்றும் காசா பகுதியில் இருந்தும் இடம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பதுபோல ஒருவேளை சிரியா மீதான தாக்குதல் இடுத்த சில தினங்களுக்குள் தொடங்கினால், அதன் பின் விளைவுகள் மிக மோசமானதாகவே இருக்கப்போகிறது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: