மீண்டும் மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான இன வன்முறைகள்...
கடந்த சனிக்கிழமை இரவு மீண்டும் இனவெறி கொண்ட பொளத்த பயங்கரவாதிகள் ரோஹீங்கிய முஸ்லிம்கள் மீது தங்கள் அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 38 வீடுகள், 09 கடைதொகுதிகள், அரிசி ஆலை என்பன இவர்களால் சனி இரவு எரியூட்டப்பட்டுள்ளன. இந்த தகவலை மியன்மாரின் பொலீஸார் இன்று உறுதி செய்துள்ளனர்.
Sagaing Kanbalu என்ற கிராமத்தில் புகுந்த முஸ்லிம் இளைஞன் என சந்தேகிக்கப்படும் ஒரு நபர் பொளத்த பெண்ணை பாலியல் வன்புணற்ச்சிக்கு உட்படுத்த முற்பட்டதன் விளைவாகவே இந்த கலவரங்கள் ஆத்திரம் கொண்டு வெகுண்டெழுந்த பௌத்தர்களால் நிகழ்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக, இந்த கலவரத்திற்கான நியாயாதிக்க காரணத்தையும் மியன்மாரிய பொலிஸார் சொல்லியுள்ளனர்.
150 நபர்கள் அளவில் திரண்டு பொலிஸ் நிலையத்திற்கு முன் நின்று தங்களிற்கு நடந்த அவமானத்திற்கு நீதி வேண்டி குரலெழுப்பியதாகவும், பொலிஸார் சட்ட வரையறைகளிற்குள் செயற்பட வேண்டிய நிலையுள்ளதால் ஆத்திரம் கொண்ட அவர்கள் கடைகளை எரிக்க ஆரம்பித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் இன்னமும் இந்த வன்முறையில் இறங்கியவர்கள் பொளத்தர்கள் தானா? என்பதை உறுதி படுத்த முடியாதுள்ளதாகவும், அதற்கான போதியவளவு ஆதாரங்கள் இதுவரை தங்களிற்கு கிடைக்கவில்லை எனவும் இதனை இனக்கலவரம் என பார்க்காமல் இரு கிராமங்களிற்கு இடையிலான பிரச்சனை என்ற கோணத்தில் அனுகுவதே சரியான பார்வை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலைகளிலும், கற்பழிப்புகளிலும், கொள்ளைகளிலும் ஈடுபடும் பயங்கரவாதிகளை காபாற்றுவதில் மியன்மாரின் பொலிஸார் கொண்டுள்ள அக்கறையை மேற்படி அவர்களது கூற்றுக்கள் வெளிக்காட்டுகின்றன.
பொளத்த மத துறவி “விதாரு” ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளும், ஆவேசமூட்டும் பேச்சுக்களும் தான் மியன்மாரிய முஸ்லிம்களின் இரத்தத்தை வங்கக்கடலில் கலக்க விட்டது. இப்போதும் அவன் தனது எழுத்துக்கள் மூலம் இனவாதத்தை கக்கிக்கொண்ட தான் இருக்கின்றார். ரோஹிங்கிய முஸ்லிம்கள் என்ற பதத்திற்கு பதிலாக அவன் அவர்களை இழிவு படுத்தும் நோக்குடன் "Kalar" என்ற சொல்லையே அவனது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் பரவலாக உபயோகிப்பான். இப்போதைய வன்முறைகளின் பின்னாலும் அவனது எழுத்துக்களே உள்ளன.
0 comments: