முபாரக் நிபந்தனையுடன் விடுதலை? “எதிரியின் எதிரி நண்பன்” என்பதா இந்த கணக்கு?
இஸ்ரேல் மீது அடுத்தடுத்து நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதை அடுத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு இஸ்ரேலிய வான் பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வான்பகுதியில் எந்தவொரு விமானமும் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல்மீது வந்து விழுந்த ராக்கெட்டுகள் தெற்கு லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக தெரியவருகிறது. வடக்கு இஸ்ரேலின் நஹரியா, அக்ரே, ஷொல்மி, கிர்யாட் ஷெமோனா நகரங்களை குறிவைத்து இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்ட உடனே, அதன் சிக்னல்கள் கிடைத்ததில், இந்த நகரங்களில் இருந்த அபாய சைரன்கள் அலறின. மக்கள் தரையடி பங்கர்களை நோக்கி ஓடி பாதுகாப்பான இடங்களில் மறைந்து கொண்டதால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ராக்கெட் ஏவப்பட்ட சிக்னல்கள் கிடைத்த உடனே இஸ்ரேலிய வடபகுதி நகர எல்லைகளில் உள்ள தானியங்கி ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் (Iron Dome) இயங்கின. ஆனால், தடுப்பு ஏவுகணைகளால் ஒரேயொரு ராக்கெட்டை மட்டுமே தடுத்து அடித்து வீழ்த்த முடிந்தது. மீதி மூன்று ஏவுகணைகளும் நகரத்தில் விழுந்து வெடித்தன.
இந்த தாக்குதலை அடுத்து, வடக்கு இஸ்ரேலிய வான் பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளதால், ஹைஃபா விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அங்கு வரவேண்டிய விமானங்கள் அனைத்தும் திசைதிருப்பி விடப்பட்டன.
0 comments: