Facebook Twitter RSS

சிரியாவுக்குள் யுத்தம் புரியும் சுமார் 6,000 வெளிநாட்டு அல்-காய்தா உறுப்பினர்கள்!

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், ராணுவத்துக்கு
எதிராக யுத்தம் புரியும் போராளிப் படையினருடன், அல்-காய்தாவை
சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என்று கூறப்பட்டு வந்தது நிஜம்தான் 
என்று தெரியவருகிறது.


தற்போது உளவு வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களின் படி, சிரியா 
யுத்த முனைகளில் சுமார் 6,000 அல்-காய்தா உறுப்பினர்கள் சிரியா 
ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிகிறார்கள்! கிடைத்துள்ள மற்றொரு 
தகவலின்படி, இவர்களில் சுமார் 500 பேராவது, மேற்கு நாடுகளில் இருந்து
வந்தவர்கள். மற்றையவர்கள் அரபு நாடுகள் மற்றும் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து
இவர்கள் சிரியாவுக்குள் வந்து யுத்தம் புரிவதாக தெரியவருகிறது.
சிரியாவில் ராணுவத்துடன் யுத்தம் புரியும் ஆட்களில், உள்நாட்டவர்களை
விட வெளிநாட்டவர்களே அதிகம் உள்ளார்கள். சிரியாவில் போர் புரிய 
வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஆட்கள், முதலில் 
செல்வது துருக்கி நாட்டுக்கு!
 
துருக்கியில் உள்ள எல்லைப் பகுதிக்கு வந்து சேரும் இவர்களை 
அல்-காய்தாவினரும், வேறு சில போராளி அமைப்பினரும், எல்லை 
தாண்டி சிரியாவுக்குள் அழைத்துச் செல்கின்றனர். துருக்கி பாதுகாப்பு
படையினர், இந்த ‘எல்லை தாண்டல்’ விவகாரத்தை கண்டுகொள்வதில்லை.

இங்குள்ள மற்றொரு தமாஷ் என்னவென்றால், மேற்கு நாடுகளுக்கு
முதல் எதிரியாக சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத்! இதனால், 
அவருக்கு எதிராக யுத்தம் புரிய அல்-காய்தா உட்பட தீவிரவாத
அமைப்பினர் துருக்கி வழியாக செல்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தும், 
அமெரிக்க உளவுத்துறையும் கண்டும் காணாமலும் உள்ளது!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

என் இஸ்லாமிய சகோதரனுக்கு ! சிரியாவில் இருந்து ஒரு மடல் ...

சிரியாவில் இருந்து ஒரு மடல் ...

ன் இஸ்லாமிய சகோதரனுக்கு !
        அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ....

         "மேலும் ,நிராகரிப்பாளர்கள்
 அவர்களில் சிலர் சிலருக்கு 
பாதுகாவலர்களாவர். இதை
(முஸ்லீம்களாகிய )நீங்கள்
செய்யாது விட்டால் பூமியில்
பெரும் குழப்பமும் ,கலகமும்
                                                                           ஏற்பட்டு விடும் .                  
                                                           (அல் குர் ஆன் சூரா அல் அன்பால் : வசனம் 73)
       
                                     இது சத்திய இஸ்லாமிய கிலாபத்தின் மீள்
உதயத்தை இலக்காக்கி உலகெங்கும் அர்ப்பணித்துப் போராடிக்
கொண்டிருக்கும் முஸ்லீம் உம்மாவின் உதிரம் பேசும் இலட்சிய
வார்த்தைகள் .
 
                                                 இழப்புகள், சோதனைகள்  இந்த
உம்மாவுக்கு புதியவை அல்ல .  ஆனால் எதற்காக இழக்கிறோம்
யாருக்காக சோதனைகளை எதிர் கொள்கிறோம் என்பதில்
இருந்துதான் முஸ்லீம் உம்மாவின் உண்மையான வடிவம் வெளித் 
தெரிகின்றது .நாங்கள் யார் !? என்ற வினாவை நாம் எமக்குள் அடிக்கடி
கேட்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது .ஆனால் அதன் விடையை
தேடி உமர் (ரலி)யின் ஆட்சிக்காலத்தில் பாரசீக சாம்ராஜ்யத்தை
இஸ்லாத்தின் நிழலில் கொண்டுவர நிகழ்ந்த காதிஸீய யுத்த நேரம்
நிகழ்ந்த ஒரு பிரபல்யமான சம்பவம் மீட்டிப் பார்க்கப் பட வேண்டும் .

                                                   சம்பவம் இதுதான் அன்றைய பாரசீகத்தின்
இராணுவத் தளபதியாக இருந்த ருஸ்தூம் இந்த நீங்கள் யார்? என்ற
வினாவை ருபுஹா இப்னு ஆமிர் எனும் முஸ்லிமிடம் கேட்டபோது
ஒரு ஆச்சரியமான பதில் கிடைத்தது ! அது இதுதான் " மனிதன்
மனிதனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதை விட்டும் அல்லாஹ்வுக்கு
அடிமைப்பட்டு வாழ்வதற்காக வாழ வைப்பதற்காக அனுப்பப் பட்
சமூகம் " இந்த பதில் ஒரு முஸ்லிமின் வாழ்வு , மரணம் ,போராட்டம்
தொடர்பான நியாயமான வடிவத்தை எடுத்துக் காட்டி நிற்க இன்றைய
நிஜத்தில் நாம் எம்மைப் பற்றி சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம் .
                                                        சிரியாவின் இன்றைய போராட்டம்
பற்றி முஸ்லீம் உம்மா தப்புக்கணக்கு போடக்கூடாது . ஒரு 
தேசியத்தையோ , குடியரசையோ பற்றிய கனவுகளோடு எமது 
போராட்டம் எடுத்துச் செல்லப் படவில்லை . அல்லது பசர் அல் 
அசாதை அகற்றி விட்டு மேற்கு சொல்வது போல் இன்னொரு 
ஜனநாயக சாயல் கொண்ட  ஒரு முஸ்லீம் பெயர்தாங்கி
எஜமானனை எம் தலைவராக்கும் இன்னொரு பெருந்தவறை
செய்யும் போராட்டமும் அல்ல எமது போராட்டம் . 

                                                             நாங்கள் மேற்கொள்வது முழு
மனித சமூகத்துக்குமான போராட்டம் வெறும் ஆட்சி மாற்றம் அல்
நாம் எதிர்பார்ப்பது ஒரு தலை கீழான சித்தாந்த மாற்றம் . அது 
வஹியின் வழியில் அமைந்த இஸ்லாமிய கிலாபாவே எமது
உறுதியான இலக்கு . அதன் மூலமாக மட்டுமே இன்று உலகில்
நடக்கும் சகல அநீதிகளையும் அரசியல் இராஜ தந்திரப் பின்புலத்தோடு
தட்டிக் கேட்க முடியும் . அந்த கேடயம் இல்லாமல் சுயநலமும் ,
தான்தோன்றித் தனமும் மிக்க தாகூதிய அதிகாரங்கள் எம்மை எங்கும்
இஸ்லாத்தோடு வாழ விடாது . 

                                                         எனவேதான் அந்த மகத்தான
பொறுப்பை இறைவன் எங்கள் கைகளில் தந்துள்ளதாக கருதி 
பொறுப்பை சுமக்க உங்களையும் அழைக்கிறோம் . இந்த ரமலான்
மாதத்தில் நீங்கள் எங்களுக்காகவும் ,உங்களுக்காகவும் சத்திய
இஸ்லாத்தின் மீள் வருகைக்காக பிரார்த்தனையையும் ,ஆழமான
கருத்துப் பரிமாற்றத்தையும் குறைந்த பட்சம் நீங்கள் மேட்கொள்ளுங்கள் . 

                                                          சகோதரா ! சத்திய இஸ்லாத்தின் 
மீள் வரவிற்காய் மரணங்கள் தேவையென்றால் அவை எம்மை 
ஆரத்தழுவி முத்தம்  இடட்டும்  ! வாழ்ந்தால் இஸ்லாத்தின் நிழலில்
கண்ணியத்தோடு வாழுவோம் .வீழ்ந்தால் ஷகீத் களாக தான் வீழ்வோம் . 
 
                                                         வஸ்ஸலாம் 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

அமெரிக்கா இராணுவமயமாகிறது !!



மெரிக்க வாழ்க்கையில் பழகிப் போன ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கின்
நகர்ப்புற போர்ப் பயிற்சி” ஒத்திகை நடவடிக்கை வரிசைகளில் சமீபத்தியதாக
இந்த வாரத்தில் சிக்காகோவில் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள்நிறுத்தப்பட்டன.
மற்றெங்கிலும் போலவேஇந்த ஒத்திகையும் மக்களை திகைக்கச் செய்யும்வகையில் 
அறிவிப்பின்றி திடீரென்றே முளைத்ததுஇரகசியமாகநடத்தப்பட்ட இந்த 
ஒத்திகைகளின் - உள்ளூர் போலிஸ் முகமைகள் மற்றும்தேர்ந்தெடுக்கப்பட்ட 
அதிகாரிகள்ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக்கட்சியினர் ஆகிய 
அனைவரின் ஒத்துழைப்புடன் தான் இது நடந்திருக்கமுடியும் என்பது 
வெளிப்படை - நோக்கம் “நகர்ப்புற பகுதிகளிலான இராணுவநடவடிக்கைகள்” 
என்று பென்டகனின் சித்தாந்தம் விவரிக்கின்ற ஒன்றில்அமெரிக்க துருப்புகள் 
அனுபவம் பெறும் பொருட்டு தான் என்பதில்சந்தேகமில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க
இராணுவத்திற்கு வெகு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.ஆப்கானிஸ்தானிலும் 
ஈராக்கிலும் நாம் கண்ணுற்றதைப் போலஓரளவுக்குசக்தி குறைந்த 
நாடுகளை ஊடுருவதும் ஆக்கிரமிப்பதும் பின் அங்கிருக்கும்எதிர்ப்பு 
காட்டும் மக்களை பெரும்பாலும் நகர்ப்புற மையங்களில் வீடுவீடாகச்
 சென்று சண்டையிடுவதும் தான் கடந்த தசாப்தத்தில் அதன் பிரதானஇலக்காக 
இருந்திருக்கிறது.

     தென்மத்திய இண்டியானா பகுதியில் இராணுவம் 1,000 ஏக்கர் 
பரப்பில்நகர்ப்புற பயிற்சி மையம் ஒன்றை இயக்குகிறது. வீடுகள், 
பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் 
போன்றவற்றின் மாதிரிகளாகவடிவமைக்கப்பட்டுள்ள 1500“பயிற்சி 
கட்டமைப்புகள் இந்த மையத்தில்இருப்பதாக பெருமையடிக்கப்படுகிறது.



வெளிநாட்டு சூழல்கள் மற்றும்உள்நாட்டு சூழல்கள் இரண்டு வகை 
மாதிரிகளையும் இங்கு கச்சிதமாகஉருவாக்க முடியும் ” என்று 
இம்மையத்தின் வலைத் தளம் கூறுகிறது.
இந்த பரந்து விரிந்த பயிற்சி மையத்தின் மாதிரிக் கட்டிட 
அமைப்புகளின்மூலம் சாதிக்க முடியாத எது ஒன்றை சிக்காகோவின் 
குடியிருப்புகட்டிடங்களின் மீது தாழ்வாகப் பறக்கிற பிளாக்ஹாக் 
ஹெலிகாப்டர்களும்அல்லது செயிண்ட் லூயிஸ் வீதிகள் வழியே 
பவனி வரும் ஆயுதமேந்தியஇராணுவ வாகன வரிசைகளும் 
சாதிக்கவிருக்கின்றனசென்ற ஆண்டில்மட்டும்லாஸ் ஏஞ்சல்ஸ்
சிக்காகோமியாமிடாம்பாசெயிண்ட் லூயிஸ்,மினபோலிஸ்
வேர்ஜினியாவில் உள்ள கிரீட்ஸ் பகுதிகளில் உட்படகுறைந்தபட்சம் 
ஏழு இத்தகைய ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
அமெரிக்க நகரங்களில் துருப்புகள் செயல்படுவதை இயல்பு நடவடிக்கைபோல் 
ஆக்க வேண்டும்அத்துடன் உள்நாட்டிற்குள் அமெரிக்க 
இராணுவவலிமை பயன்படுத்தப்படுவதை அமெரிக்க மக்கள் இயல்பாக 
எடுத்துக்கொள்ளப் பழக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்க
முடியும்என்பது வெளிப்படை.
   இத்தகைய இராணுவ நிலைநிறுத்தல்களுக்கான தயாரிப்புகள்
 ஏற்கனவேமிகவும் முன்னேறிய மட்டங்களுக்குச் சென்று விட்டன 
கடந்த தசாப்தகாலத்தில்,“பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரை” 
தொடுப்பதானபேரில்அடுத்தடுத்த ஒடுக்குமுறை சட்டங்களை வாஷிங்டன் 
செயலாக்கிஇருக்கிறதுஅத்துடன் தாயகப் பாதுகாப்புத் துறையின் கீழ் 
அரசக்கட்டுப்பாட்டின் ஒரு புதிய பரந்த அதிகாரத்துவத்தையும் அது
உருவாக்கியிருக்கிறதுஒபாமா நிர்வாகத்தின் கீழ்அமெரிக்க மக்களின்
மீதான மின்னணுமுறை வேவுபார்ப்பு மிகப் பிரம்மாண்டமாய் விரிந்துசெல்கின்ற 
அதே நேரத்தில், அரச எதிரிகளை காலவரையற்ற இராணுவக்காவலுக்குள் 
தள்ளுவதற்கோ அல்லது அவர்களை ஆளில்லா விமானத்தாக்குதல்கள் 
மூலமாக அமெரிக்க மண்ணிலேயே கூட படுகொலைசெய்வதற்கோ 
வெள்ளைமாளிகை அதிகாரம் கோருகிறது.
இந்த நிகழ்முறையின் பகுதியாகவே அமெரிக்க இராணுவ அதிகாரத்தின்
இடைவிடாத வளர்ச்சியும் உள்நாட்டு விவகாரங்களிலும் கூட அதன்தலையீடு 
அதிகரிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது
2002 இல் அமெரிக்கவடக்குப் படைத்தலைமை உருவாக்கப்பட்டதானது 
முதன்முறையாகஅமெரிக்காவிற்குள்ளேயேயான நடவடிக்கைகளுக்கு ஒரு 
இராணுவத்தலைமையை அர்ப்பணித்திருக்கிறது.

உள்நாட்டிலான பிரச்சினைகளுக்கான பதிலிறுப்புகள் உட்பட குடிமை 
சட்டஅமலாக்க அதிகாரிகளுக்கு “உதவுகின்ற விதமாக அமெரிக்க 
மண்ணில்இயங்குகின்ற அமெரிக்க இராணுவப் படைகளுக்கான புதிய 
நடத்தை விதிகள்அமலுக்கு வருவதை சென்ற மே மாதத்தில் தான் 
பென்டகன் அறிவித்தது.
   இந்த ஆவணம் “அவசரநிலை அதிகாரம்” என்ற தலைப்பிலான ஒரு 
பிரிவின்கீழ் மிகப் பேரளவான வானளாவிய இராணுவ அதிகாரங்களை 
அறிவிக்கிறதுஜனாதிபதியிடம் முன்கூட்டிய அனுமதி பெறுவது 
சாத்தியமில்லாத,அரசியல்சட்டப்படியான உள்ளூர் அதிகாரிகள் 
நிலைமையைக்கட்டுப்படுத்துவது இயலாத அசாதாரணமான அவசரகால 
சூழ்நிலைகளில்,எதிர்பாராத வகையில் பெரிய அளவில் நடக்கக் கூடிய 
மக்கள்அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான 
நடவடிக்கைகளில்தற்காலிகமாக இறங்குவதற்கு ஒரு கூட்டரசின் 
இராணுவத் தளபதிக்குஇருக்கும் அதிகாரத்தை இந்த ஆவணம் திட்டவட்டமாக 
தெரிவிக்கிறது.வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பென்டகன் 
கூட்டமானது இராணுவச்சட்டத்தை வேண்டியபோது கையிலெடுப்பதற்கான 
அதிகாரத்திற்குஉரிமைகோருகிறது.
   இந்த அதிகாரங்கள் எல்லாம் ஏதோ அமெரிக்க மக்களை பயங்கரவாதத்தில்
இருந்து காப்பாற்றுவதற்கோ அல்லது சில கற்பனையான அவசரகாலநிலைகளை 
எதிர்கொள்வதற்காகவோ எல்லாம் நிலைநிறுத்தப்படவில்லை.அபாயம் எங்கே 
இருக்கிறது என்கிற விடயத்தை அமெரிக்க இராணுவத்தலைமை ரொம்பவே 
நனவுடன் புரிந்து வைத்திருக்கிறது.
   ஃபோர்ட் லீவன்வொர்த் தளபதிகள் மற்றும் படை ஊழியர்களுக்கான
கல்லூரியில் மூத்த விரிவுரையாளர் மற்றும் இராணுவத்தின் 
முன்னேறியஇராணுவ ஆய்வுகளுக்கான பள்ளியின் முன்னாள் இயக்குநரின் 
சமீபத்தியஒரு கட்டுரையில்இராணுவம் தலையீடு செய்யத்தக்க ஒரு 
சூழ்நிலைகுறித்து கூறியிருந்தார்.
     “இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தைய பெருமந்
தநிலையானதுஎவரொருவரும் கணித்திருந்ததை விடவும் நீண்டு கொண்டே
செல்கிறது

2012 இல் வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தில் ஒரு மாற்றம்
ஏற்பட்டிருப்பதன் பின்னர்ஆளும் கட்சியானது பொருளாதாரஊக்குவிப்புக்கோ 
அல்லது நிவாரணத்திற்கென்றோ ஒதுக்கப்பட்டிருந்தஅத்தனை நிதிகளையும் 
துண்டித்து வருகிறது. தசாப்தத்தின் பாதிக்கும்மேற்பட்ட காலத்திற்கு, 1990களில் ஜப்பான் இருந்ததைப் போல அமெரிக்கப்பொருளாதாரமானது 
தேங்கி விட்டிருக்கிறது.
 2016க்குள்ளாகபொருளாதாரம்மீண்டெழும் அறிகுறிகளைக் காட்டினாலும் 
கூடநடுத்தர வர்க்கம் மற்றும்கீழ் நடுத்தர வர்க்கங்கள் வேலையில் வளர்ச்சி 
என்பதையோ அல்லது ஊதியஉயர்வுகள் என்பதையோ இனிமேல் தான் காண 
வேண்டியிருக்கிறது.வேலைவாய்ப்பின்மையின் அளவு இரட்டை இலக்கங்களுக்கு 
நெருக்கமாகவேவட்டமிட்டுக் கொண்டிருக்கிறது...”
வேறு வார்த்தைகளில் சொல்வதானால்அமெரிக்காவில் இன்று நிலவக்கூடிய 
சூழலுக்கு அதிக வித்தியாசமில்லாத மேற்கூறிய நிலைமைகள்இராணுவ 
வலிமையால் மட்டுமே தணிக்கப்படத்தக்க சமூக எழுச்சிகளைஉருவாக்குகின்றன 
என்பதை பென்டகன் காண்கிறது.
குடிமைச் சட்ட அமலாக்கத்தில் இராணுவத்தின் பயன்பாட்டைத் தடைசெய்கிற 
பல நூற்றாண்டு கால அரசியல் கோட்பாடுகள் தான் திரைமறைவில்ஏறக்குறைய 
எந்த ஊடகமும் செய்தி வெளியிடாமல் அதிகமான பொதுவிவாதங்களும் இன்றி 
இல்லாதொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.சுதந்திரப் பிரகடனத்திலேயே கூட
ஜோர்ஜ் மன்னருக்கு எதிரான புரட்சியைநியாயப்படுத்தும் குற்றச்சாட்டில், ”அவர் மக்கள் அதிகாரத்தை விடஇராணுவம் சுயேச்சையானதாகவும் மேலதிகாரம் 
படைத்ததாகவும் இருக்கவழிவகுத்து பாதிப்பு ஏற்படுத்தினார்” என்ற குற்றச்சாட்டும்
இடம்பெற்றிருந்தது.

இராணுவத்தின் உள்நாட்டு அதிகாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றஅதே
வேளையில் குடிமை போலிசாக கருதப்பட்டு வந்ததும்இராணுவமயமாக்கப்பட்டு 
வருகிறதுசென்ற வார இறுதியில் “போர்த்திறபோலிசின் எழுச்சி”  (“The Rise of the WarriorCop”) என்ற தலைப்பில்வோல்ஸ்டிரீட் ஜேர்னலில் வெளியான ஒரு 
கட்டுரையில் இந்த நிகழ்முறைவிவரிக்கப்பட்டுள்ளது:
இராணுவ ஆவேசத்தினாலும் கத்திமுனைகள் மற்றும் எம்-16 துப்பாக்கிகள்
தொடங்கி ஆயுதமேந்திய வீரர்கள் சுமக்கும் வாகனங்கள் வரைஇராணுவ-பாணி சாதனங்கள் கிடைப்பதாலும் அமெரிக்க போலிஸ் படைகள்பல 
சமயங்களில் முன்னதாக போர்க்களத்திற்கென இருந்த ஒருமனோநிலையை 
ஏற்றுக் கொண்டிருக்கின்றனபோதை மருந்துகள் மீதானபோரும்மிக சமீபத்தில், 9/11க்குப் பிந்தைய பயங்கரவாத தடுப்புமுயற்சிகளும் அமெரிக்கக் காட்சியில் 
போர்த்திற போலிஸ் (warrior cop) என்றஒரு புதிய அவதாரத்தை 
உருவாக்கியிருக்கின்றன

 உடலெங்கும் கன ஆயுதம்தரித்திருக்கும் இவர்குறி வைக்கப்படும் 
தவறிழைப்போரையும் பழகியஅமெரிக்க சுதந்திரங்களுக்கு பெருகும் 
அச்சுறுத்தலையும் மிகக் கடுமையாகக்கையாளத் தயாராய் இருப்பார்.”
தாயகப் பாதுகாப்புத் துறையில் இருந்து சுமார் 35 பில்லியன் டாலர்அளவுக்கான 
நிதி உதவியுடன் ஏறக்குறைய அமெரிக்காவின் ஒவ்வொருநகரிலும் சிறப்பு 
ஆயுதங்கள் மற்றும் உத்திகள் பிரிவுகள் விரிந்துபரந்துள்ளதை இக்கட்டுரை 
விவரிக்கிறது.”இதில் பெரும்பான்மையான பணம்ஆயுதமேந்திய வீரர்களைச் 
சுமக்கும் பீரங்கி வாகனங்களை வாங்குவதற்குபயன்படுத்தப்படுகிறது.”

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரிய சண்டைகளை காரணம் காட்டி களம்புக தயாராகும் அமெரிக்கா



சிரியாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரில்,
 சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை கவிழ்ப்பதற்குநேரடி
 அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கான ஒரு பெரிய
 விரிவாக்கத்திற்கு திட்டமிடப்படுகிறது.

செனட்டின் ஆயுதப் படைகள் குழுவிற்கு தலைவரான ஜனநாயகக்
 கட்சியின் செனட்டர் கார்ட் லெவினுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
 ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே திட்டங்களை முன்வைத்து, சிரியாவில் 
பல அமெரிக்க தலையீட்டு திறன்களுக்கான செலவு மதிப்பீடுகளையும்
 கொடுத்துள்ளார். அவருடைய திட்டங்களில் சிரியாவில் எதிர்த்தரப்புப்
 போராளிகளுக்கு பயிற்சி அளித்தல், சிரிய இலக்குகளை ஏவுகணைகளை 
கொண்டு தாக்குதல், சிரியாவின் விமானப் படைகளை அழிக்க
 அல்லது தரையில் இருந்து புறப்படாமல் செய்ய “பறக்கக்
கூடாது பகுதியை நிறுவுதல், துருக்கி அல்லது ஜோர்டன் அருகே
சிரிய நிலப்பரப்பில் “இடைப்பட்ட பகுதிகளை கைப்பற்றுதல்,
இராசயன ஆயுதங்களை கைப்பற்ற சிறப்புப் படைகளை கொண்டு
 தாக்குதல் ஆகியவை அடங்கும்.
      பென்டகனுடைய திட்டங்களில் பெரிய அளவு நடவடிக்கைகள்
உள்ளன; குறைந்த பட்சம் பல பில்லியன் டாலர்கள் ஆண்டு
ஒன்றிற்கு என செலவாகும். டெம்ப்சேசிறப்புப் படைகள் தாக்குதல்
மாதம் ஒன்றிற்கு 1 பில்லியன் டாலருக்கு மேல் ஆகும் என்று
 கூறியுள்ளார்; ஏவுகணைத் தாக்குதல்களுக்கு, நூற்றுக்கணக்கான
விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்னும் பிற
உதவிப் பொருட்களும் தேவை, இவை “பில்லியன் கணக்கில்
 செலவைக் கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.
http://www.humanrightsfirst.org/wp-content/uploads/Syria-USA-Russia-Syria.png
டெம்ப்சேயின் கடிதத்தை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்கப்
பிரதிநிதிகள் மன்றத்திலும் செனட் உளவுத்துறைக் குழுக்களிலும்
 சிரியாவில் எதிர்த்தரப்பு சக்திகளுக்கு நேரடியாக ஆயுதம்
கொடுப்பது குறித்து வாக்கெடுப்பு நடந்தது. இதுவரை அவர்களுக்கு
அமெரிக்க நட்பு எண்ணெய் முடியரசுகளான கட்டார், சௌதி
அரேபியா போன்றவை நிதி கொடுத்தும் ஆயுதம் அளித்தும் வந்தன;
அமெரிக்கா நேரடியாகக் கொடுக்கவில்லை. இது இழிந்த முறையில் எதிர்த்தரப்பிற்குதான் பணம் கொடுக்கவில்லை எனக் கூற
வாஷிங்டனை அனுமதித்தது; அதே நேரத்தில் CIA, ஆயுதங்கள்
மற்றும் நிதிப் பாய்வை ஒருங்கிணைத்தது.
ஒபாமா நிர்வாகம் சிரியாவில் எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் அளிக்க
தீவிரமாக வாக்குகளுக்கு ஆதரவை நாடியது. துணை ஜனாதிபதி ஜோபிடென், CIAஇயக்குனர் ஜோன் பிரென்னன் மற்றும் வெளிவிவகாரச்
செயலர் ஜோன் கெர்ரி அனைவரும் காங்கிரஸ் உறுப்பினர்களை
அழைத்தனர் அல்லது சந்தித்துப் பேசினர்.
      சிரியப் போருக்கான ஆரம்ப நியாயப்படுத்துதல் —சிரிய
மக்களின் ஜனநாயக எழுச்சியைக் காக்க நடத்தப்படும் மனிதாபிமான
போராட்டம் என்பது— அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது,
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அதை மீண்டும்
கூட கூறுவதில்லை. பொறுப்பற்ற முறையில் ஆயுதங்கள்
வழங்கப்பட்டிருக்கும் அல்குவேடாவுடன் பிணைந்துள்ள அல் நுஸ்ரா
முன்னணி போன்ற படைகள், CIA உடைய “நிதானமான உறுதியான
சொத்துக்கள், ஆட்சி மாற்றத்திற்கு உதவுபவை எனக் கூறப்பட்டன;
அசாத்தை அகற்ற இது நம்பப்பட்டது. அதே நேரத்தில் சிரிய மக்கள்
அமெரிக்க ஆதரவுடைய கும்பல்கள், போராளிகள் இவற்றின் தாக்குதலை எதிர்கொண்டனர்; செய்தி ஊடகமும் முதலாளித்துவ “இடது
அமைப்புக்களும் இச்சக்திகளை ஜனநாயகத்திற்காக போராடும்
புரட்சிகர போராளிகள் எனப் பாராட்டின.
   இக் குற்றத்தன்மை வாய்ந்த கொள்கை இப்பொழுது நாசமுற்றுள்ளது. எதிர்த்தரப்புஅதன் மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தாலும்போர்
சர்வதேச அளவில் பரந்துவிட்டதாலும் தோல்வியை எதிர்நோக்குகிறது.
சமீபத்திய மாதங்களில் சுன்னி ஆதிக்கம் உடைய எதிர்த்தரப்பு
போராளிகளுடைய குழுக்களுக்கு எதிரான போர்களில்குறிப்பிட்ட
ஈரானிய படைகளும், லெபனிய ஷியைட் குழு ஹெஸ்போல்லாவில்
உள்ள போராளிகளும் அசாத்திற்கு உதவினர்.
    இதை வாஷிங்டன் எதிர்கொள்வது இன்னும் பெரிய குருதி
கொட்டுதலுக்கு தயாரிப்பு நடத்துவதாகும். ஆளும் வர்க்கத்தின்
சக்திவாய்ந்த பிரிவுகள் அசாத்தை அகற்றுவதற்கு பரந்த அமெரிக்கப்
போருக்கு அழுத்தம் கொடுக்கின்றனஅதையொட்டி அமெரிக்க
ஏகாதிபத்திய மேலாதிக்கம் மத்திய கிழக்கில் உறுதிப்படுத்தப்படும். 
CSIS எனப்படும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின்
செல்வாக்கு மிக்க மூலோபாயம் இயற்றுபவர் ஆன்டனி கோர்ட்ஸ்மன்
இத்தகைய போருக்கு நேற்று “சிரியாவின் நிலையற்ற விளைவு
என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை எழுதியுள்ளார். 
அவர்: “ஒரு பிளவுற்ற மத்திய கிழக்கில், சுன்னி என்றும் ஷியைட்
என்றும் பிரிந்திருக்கும் பகுதியில் எதிர்தரப்பை நசுக்குவதில் அசாத் வெற்றியடைந்தால், அல்லது எப்படியும் சிரியாவின் பெரும்பகுதி மீது
கட்டுப்பாட்டை கொண்டார் என்றால், ஈராக், சிரியா மற்றும் லெபனான்
மீது புதிய அளவு செல்வாக்கை மகத்தான முறையில் ஈரான் கொள்ளும்....   
இது இஸ்ரேலுக்குத் தீவிர இடர்களை அளிக்கும், ஜோர்டன், துருக்கியை வலுவிழக்கச் செய்யும், இன்னும் முக்கியமாக ஈரானுக்கு பேர்சிய
வளைகுடாவில் மிக அதிக செல்வாக்கைக் கொடுக்கும்; இதுதான்
உலகில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் 48%ஐக் கொண்டுள்ளது.
என எழுதினார்
      அமெரிக்க நடவடிக்கைகள் குறித்து கோர்ட்ஸ்மன் ஒரு தொகுப்பை
அளித்துள்ளார்; இதில் விமானத் தாக்குதல் எதிர்ப்புப் பிரிவுகளில் இருந்து
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வரை மேற்கத்தைய ஆதரவுடைய
போராளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும், அதுதான் பறக்கக்கூடாது
பகுதியை சுமத்தவும் நேரடி அமெரிக்கத் தலையீட்டை அனுமதிக்கவும்
செய்யும். “எழுச்சியாளர்கள் அத்தகைய ஆயுதங்களுடன் வெற்றிபெறுவதை
அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். —அதுதான் அசாத்
அரசாங்கத்தை பேச்சுக்கள் மூலம் அகற்ற வழிவகுக்கும், ஒரு புதிய தேசிய அரசாங்கத்தை நிறுவ வழிவகுக்கும்— அல்லது அமெரிக்கா அதனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து பறக்கக்கூடாது பகுதியை தோற்றுவிக்க வேண்டும்.
       கோர்ட்ஸ்மன்னுடைய திட்டம்பென்டகனும் அதன் நட்பு நாடுகளும்
வெகுஜன இறப்புக்களும் உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு விளைவுகளும் கொண்ட ஒரு பரந்த பிராந்தியஏன் உலகப் போர்களுக்கு கூட தயாராக
இருக்குமாறு கோரும் அழைப்பாகும்இது அமெரிக்காவைசிரியாவுடன்
மட்டும் இன்றி, ஹெஸ்போல்லா சக்திகள் மற்றும் அசாத் ஆட்சியின்
சர்வதேச ஆதரவாளர்கள்—கடந்த வாரம் கூடுதல் தடைகளை அமெரிக்கா சுமத்தியுள்ள ஈரான், மற்றும் ரஷ்யா, சீனாவுடன் கூட போரில்
ஈடுபடுத்தும்.
     அமெரிக்க இராணுவத்தின் அடுக்குகள் சில ஒரு விரைவான,
முழுப் போருக்கு எதிராக எச்சரித்துள்ளன; முக்கியமாக அத்தகையபோர்
எப்படி விரிவாகும் என அவர்கள் உறுதியாக எதிர்பார்கமுடியவில்லை.
எனவே லெவினுக்கு எழுதிய கடிதத்தில் டெம்ப்சே எழுதியதாகக் கூறப்படுவது:
“ஒரு நடவடிக்கையை தொடங்கிவிட்டால், அடுத்து வருவதற்கு நாம்
தயாராக இருக்க வேண்டும். ஆழ்ந்த ஈடுபாட்டை தவிர்ப்பது கடினம்.
ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் எதிர்த்தரப்பை வலுப்படுத்தி,நவகாலனித்துவ முறையில் நாட்டை பிரிக்கப் பயன்படும் நீண்டகால பினாமிப் போரை
சிரியாவில் நடத்தும் திட்டத்தை கொண்டுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் 
நேற்று வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜே கார்னரின் கூற்றை மேற்கோளிட்டு, அதாவது “அசாத் சிரியா முழுவதையும் மீண்டும்
ஆளமாட்டார், வாஷிங்டன் “ஒரு நீண்டகால உண்மை பிரிக்கப்படும்
சிரியாதான் என்பதற்கு தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்றும்
அசாத் ஒரு “எஞ்சிய பகுதியை மட்டுமே ஆள்வார் என்றும் எழுதியுள்ளது.
     மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத் தலையீட்டை விரிவாக்கும்
இத்திட்டங்கள் அனைத்தும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி
மற்றும் முறிவைப் பிரதிபலிக்கின்றன. மக்களுடைய கருத்துக்களுக்கு
இழிவு தரும் வகையில்,ஈராக்கின் மீது செல்வாக்கற்ற அமெரிக்க
படையெடுப்பு நடந்த பத்து ஆண்டுகளுக்குப்பின், ஏகாதிபத்திய
மூலோபாயம் இயற்றுபவர்கள் மற்றொரு நாசகரமான போருக்கான
திட்டங்களை முன்வைக்கின்றனர். மக்களில் 61% சிரியப் போரில்
அமெரிக்க ஈடுபாட்டை எதிர்க்கின்றனர் என சமீபத்தியQuinnipiac கருத்துக்
கணிப்பு கூறுகிறது.
     ஆளும் உயரடுக்கு போருக்கான தன் திட்டங்களை முன்னோக்கி
அழுத்தும் திறன்செய்தி ஊடகத்தின் ஆழ்ந்த பிற்போக்குப் பங்கையும்,
குட்டி முதலாளித்துவ இடது மக்கள் எதிர்ப்பு வெளிப்பட்டால் அதை நசுக்குவதையும்தான் காட்டுகிறது. குறிப்பாக போலி இடது குழுக்களான அமெரிக்காவின் ISO, ஜேர்மனியில் Die Linke, பிரான்ஸில் NPA ஆகியவற்றின்
பங்கு தெளிவானதாகும். இவை தொடர்ச்சியாக இழிந்த ஏகாதிபத்திய
போர்களை நடத்த ஊக்கம் கொடுத்துள்ளன, மத்தியதர வர்க்கத்தின்
இடது-தாராளவாத பிரிவுகளுடைய ஆதரவை “புரட்சிகளுக்கு அளிக்க முற்படுகின்றன.
       இக்கட்சிகள் அவற்றின் வெளியீடுகளில் போர்களுக்கு ஆதரவு
கொடுப்பது மட்டும் இல்லாமல், போரை ஏற்பாடு செய்யத் தேவையான
உளவுத்துறை நடவடிக்கைகளிலும் நேரடிப் பங்கைக் கொண்டுள்ளன.
    சிரியப் போரின் ஆரம்பத்தில், NPA உடைய Gilbert Achcar ஒரு இரகசிய
2011 அக்டோபர் மாநாட்டில், CIA ஆதரவு கொடுத்த சிரிய தேசியக் குழு
மாநாட்டில் கலந்து கொண்டு வெளிநாட்டுத் தலையீட்டின் செயற்பாடு
குறித்து ஆலோசனை வழங்கினார்.
     இக்கட்சிகள்இஸ்லாமியவாத எதிர்ப்புடன் சேர்ந்து உளவுத்துறைச்
சமூகத்தின் பல பிரிவுகளின் குரல்களாக செயல்பட்டுஅசாத்தை
ஏகாதிபத்திய முறையில் அகற்றுவதற்கு ஆதரவு கொடுக்கின்றன.
     இவ்வகையில், NPA உடைய முக்கிய சிரியா பற்றிய எழுத்தாளர் 
Gayath Naïssé,“சிரிய மக்களின் புரட்சியில் சுய அமைப்பு என்னும்
சமீபத்திய கட்டுரையில், சிரிய நகரமான டீர் எஸ் ஜோரைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் எதிர்த்தரப்பு போராளிகளைப்
பாராட்டியுள்ளார். “ஒரு ஜனநாயகக் கனவு டீர் எஸ் ஜோரில்
சாதிக்கப்பட்டுள்ளது என எழுதியுள்ளார். ஒரு சுதந்திர தேர்தல்
வழிவகை முதல் தடவையாக 40 ஆண்டுகளில் அமைக்கப்பட்டது
என்று அவர் பாராட்டுகிறார்; இப்படித்தான் எதிர்த்தரப்பின் உள்ளூர்க்குழு
உறுப்பினர் காதர் அதை விவரிக்கையில்அது ஞாயிறன்று உள்ளூர்
“விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது
என்றார்.
      இதுபல சிரிய நகரங்களை அமெரிக்க ஆதரவுடன் கைப்பற்றியுள்ள
மக்கள் மீது பயங்கரவாத ஆட்சியை சுமத்தியுள்ளஅல்குவேடா
பிணைப்புடைய தீவிர வலதின் அரசியல் சான்றைக் குறித்த
அப்பட்டமான பொய்கூறல் ஆகும். டீர் எஸ் ஜோரிலேயே அவை
மரணக் குழுக்கள் மூலம் செயல்படுகின்றன; இவர்களின் கொள்கைகளை
எதிர்க்கும் மக்களைக் கொலை செய்யும் காட்சிகள் பரந்த அளவில்
வெளிவந்துள்ளன. இன்னும் பரந்த அளவில், இஸ்லாமியவாத எதிர்ப்பு
போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கொள்ளை அடிக்கின்றனர்அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளில் இருந்து
தாங்கள் ஆயுதம் வாங்க நிதி பெறுவதற்காக குறிப்பாக அலெப்போவில்
ஆலைகளை அழிக்கின்றனர்.
ISO வின் சமீபத்திய சிரியா பற்றிய அறிக்கை— Michael Karadjis ஆல்
முதலில் ஆஸ்திரேலிய போலி இடது தளமான Links ல் வெளிவந்த
கட்டுரை—சிரிய எதிர்த்தரப்பிற்காக அமெரிக்க தலையீட்டிற்கு எத்தகைய எதிர்ப்பையும் தாக்குகிறது. “வெளிநாடுகளில் இருந்து இலகுரக
ஆயுதங்கள் குறித்த சோம்பேறித்தனப் பேச்சு, கண்டிக்கப்பட வேண்டும்;
ஏனெனில் சிரியாவில்பெரிய போர்’ நடைபெறுகிறது. இது அமெரிக்கத்
தலையீட்டை எதிர்ப்பவர்கள் “ஆயுதங்கள் தவறான மக்களை
அடைந்துவிடுமோ என்று பெரிதும் அச்சப்படுபவர்களால் எதிர்க்கப்படுகிறது.
     அறிக்கை மேலும் கூறுவது: “ஏகாதிபத்திய நாடுகளுக்குள்
இருக்கும் சோசலிஸ்ட்டுக்கள் நம் அரசாங்கங்கள் ஆயுதங்களை
வழங்கக்கூடாது என்று கூறமுடியாது; ஏனெனில் நம் அரசாங்கங்களின் நோக்கங்களை நாம் வேறுவிதமாக உணர்கிறோம்; அத்தகைய
ஆயுதங்களை வழங்குதல் எழுச்சியாளர்களிடம் இருந்து அரசியல்
விலையை எதிர்பார்க்கிறது... அமெரிக்கா அல்லது மற்ற ஏகாதிப்த்திய
நாடுகள் தங்கள் காரணங்களுக்காக ஆயுதங்களை கொடுக்க முடிவெடுத்தால், நாம் அதற்கு எதிராக இயந்திர கதியில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது.
    இப்பத்தி, ஏகாதிபத்தியம் மற்றும் போரைக் காப்பதற்கு எப்படி ISO  
மிக நனவாகச் செயல்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சிரிய எதிர்த்தரப்பில் அமெரிக்க அரசாங்கம் ஆயுதம் கொடுத்த பிரிவுகள்
உள்ளன என்பதை ஒப்புக்கொண்டு, அதையொட்டி அவை அதன் கூலிகள்
போல் செயல்படுகின்றன எனக்கூறும் இதுஇந்த அமெரிக்க சிரியக்
கைக்கூலிகள் நிறைய ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும், அத்தகைய பினாமிப்போருக்கு எதிர்ப்பு அமைக்கப்படக்கூடாது என்கிறது.
இத்தகைய சக்திகள்தான் சிரியாவை அழிப்பதில் உடந்தையாக
இருப்பவை; நடைபெறும் இன்னும் பரந்த குருதி கொட்டக்கூடிய
ஏகாதிபத்திய போர்களுக்கான தயாரிப்புக்களிலும் உடந்தையாக
இருப்பவை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: