சினாய் மீது தாக்குதல் நடாத்த தயாராகும் எகிப்திய இராணுவம்..
சினாயில் முஜாஹித்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்கவும், முஜாஹித்களை இல்லாதொழிக்கவும் எகிப்திய இராணுவம் பாரிய இராணுவ நடிவடிக்கைக்கு தயாராகி வருகிறது. இந்த தகவலை எகிப்திய இராணுவ அதிகாரியொருவர் நேற்றைய தினம் (07/07/2013) வெளியிட்டுள்ளார். பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் இந்த நடவடிக்கை மூலம் கொன்றொழிக்க போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.
எகிப்திய இராணுவத்தின் ஒரு ஆண்டிற்கான மொத்த செலவினத்தில் 30 விகிதம் அமெரிக்க அரசு வழங்கும் நிதி மூலமே கிடைக்கிறது. சினாய் யூத தேசமான இஸ்ரேலின் எல்லையில் உள்ளது. சினாயின் ஒரு பகுதியை அரபு யுத்தத்தின் போது இஸ்ரேல் கைப்பற்றியும் இருந்தது. சினாய் மீதான முஜாஹித்களின் ஆதிக்கம் இஸ்ரேலின் பாதுகாப்பினை கேள்விக்குட்படுத்தும். இப்போது எகிப்திய இராணுவம் அதனை தடுக்க சினாய் நோக்கி செல்லவிருக்கிறது.
ரபாவின் al-Barahmeh பகுதியில் உள்ள சுரங்கப் பாதைகளில் எகிப்திய இராணுவம் நேற்றைய தினம் வெடிமருந்துகள் அடங்கிய 07 பெட்டிகளை கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து கவச வாகனங்கள் ரபாவின் எல்லைகளில் ரோந்துகளை அதிகரித்துள்ளது.
சினாயை நோக்கி எகிப்திய துருப்புகாவி வாகனங்களும் டாங்கிகளும் நகர ஆரம்பித்துள்ளன. யூத தேச நலன்களிற்காக எகிப்திய இராணுவம் செயற்படும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே இந்த செய்தி.
0 comments: