எகிப்தில் இன்று இடம்பெற்ற ‘படுகொலை’ இஹ்வான்களையும் ஸலபிகளையும் ஒன்று படுத்துமா ?
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஜனாதிபதி முர்ஷியை சிறைப்படுத்தி வைத்திருக்கும் இராணுவ முகாம் என்று நம்பப்படும் முகாமுக்கு முன்பாக அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொழுதுகொண்டிருந்த போது இராணுவம் அவர்கள் மீது பயங்கரமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ‘படுகொலை’ தாக்குதலில் 35 பேர் சஹீதானதாகவும் 500 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைதுள்ளதாகவும் இஹ்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை சுபஹ் தொழுகையின்போது எந்தவிதமான எச்சரிக்கைகளும் இன்றி இராணுவம் தம்மீது துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டதாக அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்- நூர் கட்சி
அதேவேளை இராணுவத்தின் தாக்குதலை ‘ படுகொலை’ என்று வர்ணித்துள்ள எகிப்தின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியான அல்- நூர் இஸ்லாமிய கட்சி ‘ படுகொலை’ க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது .
அல்- நூர் கட்சி ஜனாதிபதி முர்ஷியை பதிவியிலிருந்து கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியை ஏற்றுகொண்டு இராணுவத்தின் திட்ட வரைபை ”ரோட் மெப்” ஆதரித்திருந்து அதில் கையொப்பமிட்ட முதலாவது பெரிய அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதல் பெரும் செல்வாக்கை பெற்ற பல்கூட்டணி (மதசார்பற்றோர் அடங்களாக) கட்சியான இஹ்வான்களின் அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்துக்குமான கட்சி விளங்கும் அதேவேளை அல்- நூர் கட்சி தனி ஸலபி இஸ்லாமிய வாதிகளை மட்டும் கொண்ட கட்சியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இன்று அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இராணுவம் தெரிவித்துள்ள செய்தியில் ‘பயங்கரவாதக் கும்பலொன்று’ முகாமின் பாதுகாப்பு தடுப்பு அரணை தகர்க்க முயன்றதாகவும் அதனால் தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவித்துள்ளது .
இணைப்பு:2
இந்த ‘படுகொலை’ தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 53 என்று சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகிறது 1000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைதுள்ளதாகவும். சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகிறது.
0 comments: