Facebook Twitter RSS

சிரியாவுக்குள் யுத்தம் புரியும் சுமார் 6,000 வெளிநாட்டு அல்-காய்தா உறுப்பினர்கள்!

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், ராணுவத்துக்கு
எதிராக யுத்தம் புரியும் போராளிப் படையினருடன், அல்-காய்தாவை
சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என்று கூறப்பட்டு வந்தது நிஜம்தான் 
என்று தெரியவருகிறது.


தற்போது உளவு வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களின் படி, சிரியா 
யுத்த முனைகளில் சுமார் 6,000 அல்-காய்தா உறுப்பினர்கள் சிரியா 
ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிகிறார்கள்! கிடைத்துள்ள மற்றொரு 
தகவலின்படி, இவர்களில் சுமார் 500 பேராவது, மேற்கு நாடுகளில் இருந்து
வந்தவர்கள். மற்றையவர்கள் அரபு நாடுகள் மற்றும் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து
இவர்கள் சிரியாவுக்குள் வந்து யுத்தம் புரிவதாக தெரியவருகிறது.
சிரியாவில் ராணுவத்துடன் யுத்தம் புரியும் ஆட்களில், உள்நாட்டவர்களை
விட வெளிநாட்டவர்களே அதிகம் உள்ளார்கள். சிரியாவில் போர் புரிய 
வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஆட்கள், முதலில் 
செல்வது துருக்கி நாட்டுக்கு!
 
துருக்கியில் உள்ள எல்லைப் பகுதிக்கு வந்து சேரும் இவர்களை 
அல்-காய்தாவினரும், வேறு சில போராளி அமைப்பினரும், எல்லை 
தாண்டி சிரியாவுக்குள் அழைத்துச் செல்கின்றனர். துருக்கி பாதுகாப்பு
படையினர், இந்த ‘எல்லை தாண்டல்’ விவகாரத்தை கண்டுகொள்வதில்லை.

இங்குள்ள மற்றொரு தமாஷ் என்னவென்றால், மேற்கு நாடுகளுக்கு
முதல் எதிரியாக சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத்! இதனால், 
அவருக்கு எதிராக யுத்தம் புரிய அல்-காய்தா உட்பட தீவிரவாத
அமைப்பினர் துருக்கி வழியாக செல்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தும், 
அமெரிக்க உளவுத்துறையும் கண்டும் காணாமலும் உள்ளது!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: