Facebook Twitter RSS

விரியும் சினாயின் சண்டைகள்

விரியும் சினாயின் சண்டைகள் - போராளிகளை அழிக்க எகிப்துடன் இணையும் இஸ்ரேலிய பயங்கரவாதம்

manjainanban.tk
                     சினாய் வளைகுடாவில் துப்பாக்கிகள் வெடிக்கத் துவங்கியுள்ளன.
 (07/22/2013)முதல் இந்த தாக்குதல்கள் நிகழவாரம்பித்துள்ளன. கடைசியாக நடந்த 
தாக்குதலில் 06 எகிப்திய எல்லை காவல் படையினர் ஸ்தலத்தில்
 கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 11 இராணுவத்தினர் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். 



எகிப்திய புரட்சியின் பின்னர் இது வரை 10 தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
 பொலிஸ் நிலையங்கள், இராணுவ செக் போஸ்ட்கள், பெட்ரோல் (ரோந்து) 
வாகனங்கள் என கண்ட இடங்களில் எல்லாம் தாக்குதல்கள் தன்னிச்சையாக நிகழ ஆரம்பித்துள்ளன. 

இந்த தாக்குதல்கள் Sinai, Rafah மற்றும் El-Arish ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன
. இஸ்ரேல் மற்றும் காஸா வெளியிற்கு அருகாமையில் உள்ள எல்லைகளில் இவை நிகழ்ந்துள்ளன. 

எகிப்தின் இராணுவ புரட்சிக்கு பின்னர் தினமும் ஒரு தாக்குதல் முயற்ச்சி சினாய் 
மற்றும் ரபா பகுதிகளில் நிகழ்கின்றன. இதில் தோல்வியில் முடிந்த தாக்குதல்களு
ம் உண்டு. எகிப்திய இராணுவத்தில் நிகழ்த்தப்பட்ட இராணுவ புரட்சியை ஏற்றுக்
கொள்ளாத மனோநிலை கொண்ட இராணுவத்தினரும் அதிகாரிகளும் ஏராளம் உள்ளனர்.
 இதனை விட இஸ்லாமியவாதிகளை மானசீகமாக அதரிக்கும் இராணுவத்தினரும்
 உள்ளனர் பாகிஸ்தான் இராணுவத்தை போல.

எகிப்திய இராணுவம் தனது படைபலத்தை சினாய் பகுதியில் பெருக்கி வரும் அதே
 வேளை இஸ்ரேலும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என அறிவித்து இரண்டு
 பட்டாளியன் படையினரை சினாய் ரபா எல்லைகள் நோக்கி அனுப்பியுள்ளது. 
அவர்கள் பெரும் எடுப்பில் யுத்த டாங்கிகள் சகிதம் எல்லைகளை வந்தடைந்துள்ளனர். 

அமெரிக்க ஸ்டைலில் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என இஸ்ரேல் அனுப்பி 
வைத்துள்ள இராணுவம் எல்லை வந்தடைந்தது ஒரு புறம் இருக்கட்டும். 
பயங்கராவாதத்தை செய்வது யார் என்ற கேள்வி எழும் போது சாத்தான் வேதம்
 ஓதுகிறது எனும் பதில் அதனை பூர்த்தி செய்கிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: