Facebook Twitter RSS

தப்பி பிழைத்தான் பௌத்தத் தீவிரவாதி Wirathu !!

மியன்மாரின் 969 அமைபின் தலைவன் மீது குண்டு 

தாக்குதல் - தப்பி பிழைத்தான் Wirathu !!


நேற்றைய தினம் சர்ச்சைக்குரிய பொளத்த துறவி Wirathu 12 மீட்டர்கள்
 தொலைவில் வெடித்த குண்டில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளான்.
 மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலாயில் இந்த  தாக்குதல்
 நிகழ்த்தப்பட்டுள்ளனது. பொதுமக்கள் முன் நிகழ்ந்த ஒரு சடங்கின் போது
 இந்த குண்டு வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் 05 பேர் காயமுற்றுள்ளனர். 
பெரிய இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் 
சில செய்திகளை பௌத்த இனவாதிகளிற்கு சொல்லியுள்ளது.


Wirathu எனும் பெயர் கொண்ட இந்த பௌத்த துறவி மியன்மாரின் பொளத்த 
பயங்கரவாத அமைப்பான 969 இற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவன்.
 முஸ்லிம்களை கொலை செய்தது, அவர்கள் சொத்துக்களை சூறையாடியது,
 உடமைகளை தீயிட்டது, பெண்களை கற்பழித்தது போன்ற பல கொடுமைகள்
 மியன்மாரில் பௌத்த மத துறவிகளின் தலைமையிலும் மேற்பார்வையிலும்
 நிகழ்த்தப்பட்டன. 

இந்தோனேஷியாவில் பயிற்றப்பட்ட ரோஹிங்யா போராளிகள் அண்மையில்
 தான் ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ளனர். அதில் 25
 மியன்மாரின் ஜுண்டா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இப்போது பொளத்த 
பேரினவாதத்திற்கு எதிரான ரோஹீங்கிய முஸ்லிம்களின் எதிர்ப்பானது ஆயுதரீதியில் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. 

உள்ளுர் தயாரிப்பான குண்டொன்று காரினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில்
 வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக
 மியன்மாரின் பொலிஸார் தெரிவித்துள்னர். இந்த தாக்குதலிற்கான எந்தவித
 உரிமை கோரலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 

Wirathu தன்னை பர்மாவின் பின் லாடான் என அடிக்கடி சொல்லிக்கொள்வது உண்டு.
 மியன்மாரின் அமைதிக்கானதும் பௌத்த மக்களின் விடுதலைக்கானதும் என 
கூறிக்கொண்டு கடந்த வருடம் இவர் நிகழ்த்திய கோர தாண்டவம் மிகவும் பயங்கரானது. 
இந்த தாக்குதலின் எதிரொலியாக இனப்பதற்றமிக்க Rakhine யிலும் மத்திய நகரான
 Meikhtila விலும் முஸ்லிம்களிற்கு எதிராக மீண்டும் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

Wirathu விற்கு சில தினங்களிற்கு முன்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
 Radio Free Asia's Burmese service விற்கு அவன் வழங்கிய செவ்வியில் தனக்கு 
விடுக்கப்படட கொலை அச்சறுத்தல் பற்றிய ஒலி நாடா தன்னியடம் இருப்பதாகவும்
 அதில்  ஒரு முஸ்லிம் மதகுரு மியன்மார் முஸ்லிம்களிற்கு நிகழ்ந்த அநியாயங்களிற்கு 
பழிக்கு பழி வாங்கப்படும் என எச்சரித்து இருந்ததாகவும் Wirathu விற்கு மரணம் 
நிச்சயம் என எச்சரிக்கையும் விடுத்ததாகவும் சொல்லியிருந்தான்.

மியன்மாரிய அரசு இது தொடர்பாக தனது கருத்து எதனையும் வெளியிடவில்லை.
 இந்த தகவலை ரொய்டர் செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: