Facebook Twitter RSS

இதுதான் பா.ஜ.க வின் இலச்சணம் இவர்களை நாடாலவிட்டால் நாட்டுக்கே பெரிய  ஆபத்து செந்தியுங்கள்....................


பாஜக அலுவலகத்தில் ஒரு பெண்  பலாத்காரம்.. அடங்காமல் தொடரும் பாலியல் கொடூரம்


டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலைநர் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பரஸ்வாரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த 17-ம் தேதி மதியம் உள்ளூரில் உள்ள பரஸ்வாரா பகுதி பாஜக அலுவலகத்திற்கு நான் இன்டர்நெட் பார்க்க சென்றேன். அப்போது அங்கு வந்த எனது உறவினர் என்னை அங்கு உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டு என்னை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார். வெளியே சொன்னால் சமுதாயத்தில் அவமானமாகப் பார்ப்பார்கள் என்று நானும் மவுனமாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன் என்று கூறியுள்ளார். 3 பேரால் பலாத்காரம்.. 17 வயது பெண் தற்கொலை இதேபோல பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் 3 பேர் கொண்ட கும்பலால் 17 வயதுப் பெண் சீரழிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியால் அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் தினசரி இதுபோன்ற கொடூரங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

ஹிந்துத்துவா தீவிரவாதி சுனில் ஜோஷியை கொன்ற ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது.2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்ட ராஜேந்தர் சவுத்ரி என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க சுனில் ஜோஷியை ஹிந்துத்துவா சக்திகள் கொலைச் செய்துள்ளனர். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 பெப்ருவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2007 அக்டோபரில் அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு மலேகானிலும், மொடாஸாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றை சதித்திட்டம் தீட்டியதில் ஜோஷி முக்கிய பங்கு வகித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில் அஜ்மீர் தர்காவில் குண்டுவைப்பதற்கான திட்டம் வெற்றிப் பெற்றதில் ஜோஷிக்கும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் போலீசார், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்ததும், மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வளர்ந்ததும், ஜோஷிக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.தங்களின் பின்னால் புலனாய்வு ஏஜன்சிகள் வராததும், சதித்திட்டங்கள் தீட்டுவது, இயக்கத்தை வழி நடத்துவது ஆகியவற்றில் ஜோஷிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு காரியங்களை எளிதாக கையாளவும்வழிவகுத்தது.இதனைத்தொடர்ந்து பலரிடம் ரகசியங்களை ஜோஷி பகிர்ந்துகொண்டுள்ளான்.இதனை இயக்கத்தின் இதர தீவிரவாதிகள் அச்சுறுத்தலாககண்டனர். இதன் மூலம் ஜோஷியை கொலைச்செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மத்தியபிரதேச மாநிலம் மோவ் பிரதேசத்தில் ஜோஷி கொலைச்செய்யப்பட்டான்.இதைப்போலவே பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.இதனைக்குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், மலேகான் குண்டுவெடிப்புகளில் தனது பங்கினை ராஜேந்தர்சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளான்.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்டநான்கு குண்டுகளில் ஒன்றை வைத்தவன் ராஜேந்தர் சவுத்ரி ஆவான்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


மலேகானிலும் நாங்கள் தாம் குண்டுவைத்தோம்: ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம்!


2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்தது நாங்கள் தாம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளான். தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள். 300 பேருக்கு காயம் ஏற்பட்டது. துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் என அநியாயமாக குற்றம் சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்கு மூலம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகளான டான்சிங், ராம்ஜி கல்சங்கரா, அஸ்வினி சவுகான், ஆகியோருடன் நானும் சேர்ந்து மலேகானில் குண்டு வைத்ததாக அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரி ஒப்புக்கொண்டுள்ளான். இதில் டான்சிங், ராஜேந்தர் சவுதரி கைது செய்யப்பட்ட பின்னர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுதினமே கைது செய்யப்பட்டான். இவ்வழக்கில் இதர குற்றவாளிகளான ராம்ஜி மற்றும் அமித் என்ற அஸ்வினி சவுகான் ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் தாம் மலேகான் சென்று குண்டு வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷிக்கும், சந்தீப் டாங்கேவுக்கும் இத்தகவல் தெரிந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலேகானை குண்டுவைக்க தேர்வு செய்ததாக ராஜேந்தர் சவுதரி வாக்குமூலம் அளித்துள்ளான். வெடிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது? என்பதை குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து ராஜேந்தர் சவுதரி மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்படுவான்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அரச பயங்கரவாதம் :படைத்தவனே இந்த உலகில் எந்தத் தாய்க்கும் எந்தத் தந்தைக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது


எதற்காக எங்கள் மகனை இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள்? அவன் குற்றவாளிதான் என்றால் தாராளாமாகத் தண்டியுங்கள். ஆனால் குற்றம் நிரூபனமாகும் வரை ஜாமீன்கூட மறுக்கப்படுவது காட்டு நீதியல்லவா?' இப்படிக் கேட்பவர்கள் அப்துந் நாஸர் மஅதனியின் தந்தை டி.எ. அப்துஸ்ஸமது மாஸ்டரும் அவருடைய மனைவி அஸ்மாபீவியும் தான். "கோவையில் விசாரணைக் கைதியாக எங்கள் மகனை ஒன்பதே கால் வருடம் சிறையில் அடைத்திருந்தார்கள். இறுதியில் குற்றவாளியல்ல என்று தீர்ப்பளித்து நீதினம்றன் அவனை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் பெங்களூரு போலீஸ் வந்து அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டது. பிணையில் கூட விடுவிக்காமல் அவனை ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள்? படைத்தவனே இந்த உலகில் எந்தத் தாய்க்கும் எந்தத் தந்தைக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது." எழுபத்து இரண்டு ஸமத் மாஸ்டரும் அஸ்மாபீவியும் மனம் உடைந்து அழுது பிரார்த்திக்கிறார்கள். ஓடித் தளர்ந்த இயந்திரம் போல் உள்ளார் இந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகனுக்கு நீதி வேண்டி ஆண்டுக்கணக்கில் அதிகாரிகளின் அரண்மனைக் கதவுகளைத் தட்டிய ஸமத் மாஸ்டர், பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் ஆகிவிட்டார். அதனால் அப்துந் நாஸர் மஅதனியை பெங்களூரு போலீசார் அழைத்துச் சென்றதைக்கூட பல மாதங்களுக்குப் பின்புதான் அறிந்தார். கோவை சிறையில் மஅதனி இருந்த போது நீதிக்கான போராட்டத்தில் ஸமத் மாஸ்டர் முன்னனியில் இருந்தார். ஆனால் இன்று நாற்காலியில் தளர்ந்தமர்ந்து கண்ணீர் விடத்தான் முடிகிறது. அடக்குமுறைகள், அநீதிகள் எனும் எத்தனையோ ஆழிப்பேரலைகளை எதிர்கொண்டதுதான் இந்தக் குடும்பம். பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை ஒட்டி மஅதனியின் ஐ.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது மாஸ்டரும் மனைவியிம் தங்கலின் பாரம்பர்ய வீட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்தது. வடமாநிலத்தைச் சேர்ந்த மாவட்டக் காவல்துறை அதிகாரியின் தலைமையில்தான் தலைமையில்தான் இவர்கள் வீட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். அந்த வீடு பிறகு போலீஸ் கேம்ப் ஆக மாற்றப்பட்டது. அந்தக் கொடுமையை ஸமத் மாஸ்டர் நினைவு கூறுகிறார். " டிசம்பர் 31ஆம் தேதி போலீஸ் திடீரென்று வந்து வீட்டில் ரெய்டு நடத்தியது. நாற்காலிகளும் துணிகளும் தவிர வேறு எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டு போனது. பள்ளிக்கூடத்தில் நடந்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்று அப்துந் நாஸர் வாங்கிய பரிசுப் பொருள்கள், சான்றிதழ்கள் எல்லாவற்றையும் போலீஸ் சின்னாபின்னமாக்கியது. இளைய மகன் அன்வர் ஹுசைனுக்கு அன்று ஒரு வயது. குழந்தையையும் தூக்கிக் கொண்டு உடனே வீட்டை விட்டு வெளியேறும் படி அவர்கள் அஸ்மாபீவியை அச்சுறுத்துனர். "மஅதனி தவிர ஏழு மக்களுடன் நாங்கள் அன்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடுரோட்டுக்கு வந்து விட்டோம். வீட்டை அன்று இரவே போலீஸ் சீல் வைத்துவிட்டது. கேம்ப் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. பிறகு நான்கு ஆண்டுகள் சொந்தக்காரர்கள் பலருடைய வீடுகளில் அபயம் தேடினோம். 1997-ல் வீடு திரும்பக் கிடைத்தபோது ஒரு போர்க்களம் போல் இருந்தது. போலீசார் எங்கள் வீட்டுப் பரப்பைச் சின்னாபின்னபடுத்தி இருந்தார்கள். தென்னை மரங்கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. காவல்துறையினரின் கலப்படமற்ற பொய்ச் செய்திகள் குறித்து எந்தப் பத்திரிகையும் ஊடகமும் கண்டுகொள்ள்வே இல்லை. அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. எங்களுக்குப் பிற்ல்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் எண்ணிப் பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஸமத் மாஸ்டர் குரல் தழுதழுத்தது. 1998 மார்ச் 31 அன்று ஆட்சேபணைக்குரிய வகையில் பேசினார் என்று கூறி கோழிக்கோடு கசபா காவல் துறையினர் மஅதனியைக் கைது செய்து கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு பினையில் வர அனுமதிக்காமல் ஒன்பது ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறையில் கழிந்தது. அச்சுதானந்தனும் உம்மன் சாண்டியும் வயலார்ரவியும் அவரவரின் தளங்களில் மஅதனி அனுபவிக்கின்ற எல்லையற்ற சிறைவாசப் பிரச்சினையில் தலையிட்டனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் கோவை அமர்வு நீதிமன்றம் மஅதனி குற்றமற்றவர் என்று கூறிவிடுதலை செய்யும்படி உத்தரவிட்டது. அவனுடைய இளமைக்காலம் எல்லாம் சிறையிலேயே கழிந்தது. இதோ, இப்போது மீண்டும் அவனைக் கைது செய்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்டு 17ஆம் நாள் அவனை பெங்களூரு போலீஸ் கொண்டு சென்றது. 47 வயதுதான் ஆகிறது என்றாலும் இன்று அவன் ஏராளாமான நோய்களால் தாக்கப்பட்டுள்ளான்.படைத்த இறைவன் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் எங்களைக் காப்பாற்றி வருகிறது. நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது பக்கவாதம் வந்து வீழ்ந்த அன்று காலையில்தான். அவனுடைய உம்மா அவனைப் பார்த்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மஅதனியின் கண்பார்வை கிட்டத்தட்ட முழுவதுமாகப் போய்விட்டது என்று சொல்கிறார்கள். நீதி கிடைப்பதற்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதைக் குர்ஆன் தடுத்திருக்கிறது. இல்லையெனில் நாங்கள் எப்போதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருப்போம். ஆதரவற்ற இந்த முதிய தாய் தந்தையரின் கண்ணீருக்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? நன்றி சமரசம் (டிசம்பர் 16- 31 )

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் விரைவில் வெளியிடபட்டு அதிர்ச்சி அளிக்கப்படும் - ஜூலியன் அஸாஞ்சே!

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவற்றில் அனைத்து நாடுகளை குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்திகள் இடம்பெறும் என்று விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சே கூறியுள்ளார். லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் 200-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அஸாஞ்சே இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். பாலியல் கொடுமை வழக்கில் விசாரணைக்காக சுவீடனுக்கு நாடு கடத்த பிரிட்டீஷ் போலீஸ் தீர்மானித்ததை தொடர்ந்து ஜூலை மாதம் முதல் அஸாஞ்சே ஈக்வடார் நாட்டில் அபயம் தேடியுள்ளார். ’சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைக் குறித்த ரகசியங்கள் எங்கள் வசம் உள்ளன. அடுத்த வருடம் துவக்கத்தில் அவை அனைத்தும் வெளியிடப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே எங்களது உறுப்பினர்களுக்கு 2013 ஆம் ஆண்டு பிசியான ஆண்டாக இருக்கும். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவோருக்கு எப்பொழுதும் வாசல்கள் திறந்தே உள்ளன. உண்மையான ஜனநாயகம் என்பது வெள்ளைமாளிகையும், கேமராக்களும் அல்ல. சத்தியத்தை ஆயுதமாக்கி (எகிப்தில்) தஹ்ரீர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடத்திய போராட்டங்களாகும்’ – இவ்வாறு அஸாஞ்சே கூறினார். வியாழக்கிழமை பொது மக்கள் மத்தியில் உரையாற்றுவேன் என்று முன்னரே அஸாஞ்சே ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



எகிப்து: 2-வது கட்ட வாக்கெடுப்பிலும்  இஸ்லாமிய 

அரசியல் சாசனத்திற்கு ஆதரவு!


எகிப்தில் அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் 2-வது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 17 மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பு அமைதியாகவே நடந்தது. எதிர்கட்சியினர் எதிர்ப்புகள் இருந்தாலும், இஃவானுல் முஸ்லிமீனுக்கு செல்வாக்குள்ள இப்பகுதிகளில் அதிபர் முர்ஸியின் முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் சாசனத்திற்கு ஆதரவாகவே வாக்குகள் பெரும்பாலானவை பதிவானதாக கருதப்படுகிறது. மக்கள் கூட்டம் காரணமாக இரவு 11 மணிவரை வாக்குப்பதிவை நீட்டிக்க தேர்தல் கமிஷன் அனுமதித்தது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் அனைத்து காரணிகளும் அரசியல் சாசனத்தில் இருப்பதாக இஃவான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை எதிர்கட்சியினர் எதிர்க்கின்றனர். இம்மாதம் 15-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்களிப்பின் போது, புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக 56.8 வீத வாக்குகளும் இரண்டாம் கட்ட வாக்களிப்பின் போது 71.4 வீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்ந எகிப்தின் புதிய அரசியலமைப்பு சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சர்வதேச அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள், “தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் சாசனம் எகிப்தின் வரலாற்றிலே மிகச் சிறந்த ஒன்று” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அரசியலமைப்பு 100 சட்ட நிபுணர்கள் சேர்ந்து பல மாதங்கள் கலந்தாலோசித்தே பின்பே உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான மேல் முறையீடுகளை நீதிமன்றம் பரிசீலிப்பதால் நாளை கழிந்த பிறகே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரும். அரசியல் சாசனம் வெற்றிப் பெற்றால் மூன்று மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும். நேற்று நடைபெற்ற 2-வது கட்ட விருப்ப வாக்கெடுப்பில் பெரும்பாலோனோர் ஆதரவாகவே வாக்களித்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாக்களித்தவர்களிடம் நடைபெற்ற கருத்துக்கணிப்பும், அரசியல் சாசனத்திற்கு ஆதரவானதாகும். அதே வேளையில் அதிகாரப்பூர்வமான முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று எதிர்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


குஜராத் சோமாலியாவை விட மோசம்: மார்க்கண்டேய கட்ஜு!

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்தார். போபாலில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- குஜராத் மாநிலம் முன்னேறி விட்டதாக நரேந்திரமோடி கூறிவருகின்றார். இந்த முன்னேற்றம் சராசரி மனிதனின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை. மோடியின் தற்பெருமை பேச்சால், தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை குஜராத் மக்கள் உணரும் காலம் வரும். குஜராத்தில் வாழும் ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது. ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழை நாடான சோமாலியாவை விட குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, 3வது முறை முதல் மந்திரியாவது என்பது பெரிய காரியம் அல்ல. தற்போது, நம் நாட்டில் தேர்தலில் போட்டியிடுபவர்கள், எப்படி வெற்றியடைகின்றார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 2002-ம் ஆண்டு நடந்த குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையில் மோடியின் பங்கினை மாய்க்க எவற்றாலும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அத்வானி, ஜோஷி முன்நின்று பாபர் மசூதியை கட்டித் தர வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


திருச்சி: பாபர் மசூதியை பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் முன் நின்று கட்டித் தர வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதிர் மொஹிதீன் தெரிவித்துள்ளார். திருச்சி லால்பேட்டையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதிர் மொஹிதீன் அங்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு காரணமான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் அதை முன்னின்று கட்டித்தர முன் வர வேண்டும் . இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது. கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம். கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் கூறியபோது அதை காட்டுமிராண்டித்தனம் என்று பலர் தெரிவித்தனர். ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம் என்றார்.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது! – தொடரும் அநீதி!


அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை கர்நாடகா நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடிச் செய்துள்ளது. சிகிட்சைக்காக ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஜாமீன் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் மஃதனிக்கு சொந்த செலவில் சிகிட்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய நீதிமன்றம் சிகிட்சை வேளையில் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது. கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மஃதனி. பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே அவர் பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா சிறையில் அடைக்கப்பட்டார். நீரழிவு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படும் மஃதனிக்கு ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. ஒரு காலை இழந்துள்ள மஃதனி நோய்களால் அவதிப்படும் வேளையில் அவரது சிகிட்சைக் குறித்து கர்நாடகா போலீஸ் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில் மஃதனிக்கு சிகிட்சை அளிக்க ஜாமீன் அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு இரக்கம் காண்பிக்காத நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


திரிகள் - பேரறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி


சிரிய முஸ்லிம்கள் மீதான பஷர் அல் அஸதின் படுகொலைகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக ரஷ்யாவும் ஈரானும் இஸ்லாமிய உம்மத்தின் எதிரியாகி விட்டாக பேரறிஞர் கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களை புறக்கணிக்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்புவிடுத்ததுடன் ஹஜ் காலத்தில் அவர்களுக் கெதிராக பிராரத்திக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உமர் இப்னு கத்தாப் மஸ்ஜிதில் ஆற்றிய குத்பா பிரசங்கத்திலேயே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்‌. அரபு இஸ்லாமிய சமூகம் ரஷ்யாவுக்கு எதிராக நிற்க வேண்டும். அதனை புறக்கணிப்பதுடன் அதனை எதிரியாக பார்க்கவேண்டும் என்று தெரிவித்தார். ரஷ்யாவிருந்து இராணுவ தளபாடங்களை ஏற்றிவந்த சிரிய விமானத்தை பலவந்தமாக தரையிறக்கிமைக்காக துருக்கியை பாராட்டினார். சிரிய இராணுவத்திற்கு உதவியளிக்கும் சீனாவை கண்டித்த சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஷெய்க் கர்ளாவி அவர்கள் ஈரானை எதிரி நாடாக பார்க்குமாறும்‌ கேட்டுக் கொண்டார். சிரியாவில் கொல்லப்பட்டுள்ள முப்பதினாயிரத்திற்கும் அதிகமானோர் ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் பஷர் அல் அஸதின் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானை விழித்து பேசிய கலாநிதி கர்ளாவி, குமைனி இதனை நோக்கி அழைக்கவில்லை. "லாயிலாக இல்லல்லாஹ்" சொன்ன ஒரு முஸ்லிம் இதனை அங்கீகரிக்கமாட்டான் எனக் குறிப்பிட்டார். அல்லாஹ் உங்களை கண்கானித்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் செய்பவைகளை கணிப்பிட்டுக் கொண்டிருக்கிறான். உங்களை அவன் மிகக் கடுமையாக விசாரிப்பான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் மீது இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள் என ஈரானியர்களை அவர் எச்சரித்தார். ஈரானியர்கள், ரஷ்யா, அஸதின் அநியாயக்கார இராணுவத்திற்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறும் குறிப்பாக ஹஜ் யாத்திரிகள் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். "இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம்”. (இப்றாஹீம் - 42) எனவும் அவர் ஈரானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


கஷ்மீரில் நீண்ட காலம் ராணுவத்தை நிறுத்த விரும்பவில்லை – சுசில் குமார் ஷிண்டே!


ஜம்மு-கஷ்மீரில் நீண்டகாலத்திற்கு ராணுவத்தை நிறுத்த மத்திய அரசு விரும்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சுசில் குமார் ஷிண்டே கூறியது: “கஷ்மீரில் நீண்டகாலத்திற்கு ராணுவத்தை நிறுத்த மத்திய அரசு விரும்பவில்லை. அதேவேளையில் குறிப்பிட்ட சூழலை கவனத்தில் கொண்டு மேலும் சில காலம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அங்கு அமலில் இருக்கும். ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், தற்பொழுது ராணுவத்தை வாபஸ் பெற இயலாது. மேலும் சில காலம் சூழல்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பு கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. ஆனால், தற்பொழுது ராணுவத்தை வாபஸ் பெறுவது ஆபத்தானது. இதனை ஸ்ரீநகரிலும், ஜம்முவின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார் ஷிண்டே.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



2012-ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட 

பத்திரிகையாளர்கள் 119 பேர்!...


கடந்த 15 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது. வியன்னாவில் உள்ள இண்டர்நேசனல் ப்ரஸ் ரிப்போர்டின் (ஐ.பி.ஐ) புள்ளிவிபரப்படி இவ்வாண்டு இதுவரை 119 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1997-ஆம் ஆண்டு முதல் கொலை செய்யப்படும் பத்திரிகையாளர்களின் விபரங்களை ஐ.பி.ஐ சேகரிக்க துவங்கியது. இதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டு 110 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 102 பேர் இறந்தனர். அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான புரட்சி போராட்டம் நடைபெறும் சிரியாவில் அதிகமான பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இங்கு 36 பேர் பலியாகியுள்ளனர். செய்திகள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க வன்முறையாளர்கள் பத்திரிகையாளர்களை குறிவைக்கின்றார்கள் என்று ஐ.பி.ஐ கூறுகிறது. சோமாலியாவில் இவ்வாண்டு 16 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் பத்திரிகையாளர்களை பொறுத்தவரை ஆபத்தானவை. அதே வேளையில் ஆர்.பி.எஃப் போன்ற நிறுவனங்களின் அறிக்கை, ஐ.பி.ஐ இல் இருந்து மாறுபடுகிறது. ஆர்.பி.எஃபின் கூற்றுப்படி, வன்முறையாளர்கள் பத்திரிகையாளர்களை குறிவைக்கவில்லை, மாறாக அவர்கள் மோதலின் போது கொல்லப்படுகின்றனர் என்பதாகும். ஐ.பி.ஐயின் அறிக்கையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு குற்றவியல் புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே கொல்லப்பட்டார். இவர் மிட் டே பத்திரிகையில் பணியாற்றியவர். இவ்வழக்கின் விசாரணை இதுவரை பூர்த்தியாகவில்லை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


போர் நிறுத்தத்தை மீறியது இஸ்ரேல்!-காஸ்ஸாவில் ஒருவர் பலி!...


போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 21 வயதான அப்துல் ஹாதி எல்லையை ஒட்டியிருக்கும் தனது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்ற வேளையில் இஸ்ரேல் ராணுவம் சுட்டு கொன்றுள்ளது. எல்லையை ஒட்டிய விவசாய நிலத்தில் ஃபலஸ்தீனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. காயமடைந்த அனைவரும் விவசாய வேலைகளுக்காக சென்றவர்கள் என்று காஸ்ஸா எமர்ஜென்ஸி சர்வீஸ் செய்தி தொடர்பாளர் அத்ஹம் அபூ ஸல்மியா கூறுகிறார். தலையில் குண்டு பாய்ந்து அப்துல் ஹாதி மரணமடைந்துள்ளார். இஸ்ஸத்தின் அல் கஸ்ஸாமின் கமாண்டர் அஹ்மத் ஜஃபரியை கொலை செய்ததைத் தொடர்ந்து உருவான மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் 160 ஃபலஸ்தீன் மக்களும், ஃபலஸ்தீன் போராளிகளின் தாக்குதலில் 5 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். 1200 பேருக்கு காயம் ஏற்பட்டது. எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன் பாடு ஏற்பட்டது. ஆனால், அதனை மீறும் வகையில் இஸ்ரேல் அடாவடி தாக்குதலை நடத்தியுள்ளது. இது தெளிவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ஃபலஸ்தீன் விவசாயி ஒருவரை கொலை செய்த சம்பவத்தை இஸ்ரேல் இதுவரை உறுதி செய்யவில்லை. இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது. அதே வேளையில், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்ய தலைமை வகித்த எகிப்து அதிகாரிகளுடன் இதுக்குறித்து பேசப் போவதாக ஹமாஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த இரவில் 15 வயதான நாதிர் அபுமகாஸிபை இஸ்ரேல் ராணுவம் அநியாயமாக சுட்டுக்கொன்றது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


இந்திய வரலாற்றில் முதன் முறையாக உளவுத்துறைக்கு முஸ்லிம் ஒருவர் தலைவர் ஆகிறார்!...


புலனாய்வுத் துறையின் இயக்குநராக எஸ். ஆசிப் இப்ராஹிம் நியமிக்கப்பட உள்ளார். இத்தகைய உயரிய பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். 1977ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இப்போது புலனாய்வுத்துறை இயக்குநராக உள்ள நேச்சல் சாந்துவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஆசிப் நியமனம் தொடர்பான உத்தரவு திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியாகும். இவரது நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


கஷ்மீரியாக இருப்பதால் குற்றவாளி என்பது அரசின் வரைவிலக்கணம்!-சி.ஆர்.பி.பி குற்றச்சாட்டு!...


கஷ்மீரை சார்ந்தவர் என்றால் குற்றவாளி தான் என்று அரசு வரைவிலக்கணம் வகுத்துள்ளது என்பதற்கு ஆதாரம் தான் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கு என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபடும் சி.ஆர்.பி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சி.ஆர்.பி.பியின் செயல் தலைவர் எஸ்.ஏ.ஆர் கிலானி, பொது செயலாளர் அமீத் பட்டாச்சார்யா, மக்கள் தொடர்பு செயலர் ரோணா வில்ஸன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 10 கஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஊடகங்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் நடந்து கொண்டன. ஆனால், இவ்வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரின் மரண தண்டனையை 16 வருடங்களுக்குப் பிறகு டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள செய்திக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று சி.ஆர்.பி.பி குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்களின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டோருக்கு தண்டனை வழங்கியது. மூன்று பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இதர இரண்டு நபர்கள் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அதே வேளையில் இவ்வழக்கில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நான்கு பேரை 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலை செய்துள்ளது. 14 ஆண்டுகள் இவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது நீதிபீடம் மற்றும் அரசின் கிரிமினல் குற்றமாகும். தற்பொழுது 16 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 2 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஒருவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. குண்டு வெடிப்பு வழக்கை போலீஸ் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்றும், போதிய ஆதாரங்களை சேகரிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது புலனாய்வு ஏஜன்சிகள் சட்டத்தை மீறுகின்றார்கள் என்பதற்கான ஆதாரமாகும். கஷ்மீரியாக இருப்பதே குற்றம் என்ற அரசின் வரைவிலக்கணத்திற்கு இதனை ஆதாரமாக கருதலாம். இவ்வாறு கஷ்மீர் இளைஞர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. கஷ்மீரிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களும், அரசும் பிரச்சாரம் செய்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக சீர்திருத்தவாதிகளும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரும் குரல் எழுப்ப வேண்டும். வகுப்புவாதமயமாக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சிகளும், ஊழலில் மூழ்கிய நீதிக் கட்டமைப்பும், அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் ஊடகங்களும் கஷ்மீரிகளுக்கு கொடுமை இழைக்கின்றன. மரண பீதியில் 2 ஆண்டுகள் சிறையில் இருப்பது ஒரு சித்திரவதையாகும். முன்னர் அமல்படுத்திய மரண தண்டனைகள் தவறானது என்று உச்ச நீதிமன்றமே ஒத்துக்கொண்டது. முன்னேற்றமடைந்த நாடுகள் தடை செய்த மரண தண்டனை காரியத்தில் இந்தியா, எதிரான முடிவை எடுத்துள்ளது. மரண தண்டனை ரத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அங்கீகரிக்க இந்தியா தயாரில்லை. இந்த தீர்மானத்தில் கையெழுத்திட இந்திய அரசை நிர்பந்திக்கும் பொறுப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு உண்டு என்று சி.ஆர்.பி.பி கூறியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



நம்பிக்கையாளர் முர்ஸிக்கும் ஆயுதம் அளித்த 


ஈரானுக்கும் நன்றி : ஹமாஸ்


பலஸ்தீன சுயாட்சி பகுதியான காஸாவில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள சூழலில் காஸாவை ஆளும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இஸ்மாயில் ஹனியா “ காஸாவின் வெற்றி தெளிவானது. எகிப்தின் குரல் ஓங்கியுள்ளது. அமெரிக்கா புதிய மொழியை கேட்க தொடங்கியுள்ளது. இவ்வெற்றிக்காக எம் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் எகிப்துக்கும் அதன் நம்பிக்கையாளர் பிரதமர் முர்ஸிக்கும் எமது சிறப்பு நன்றிகள் உரித்தாகட்டும். எமக்கு ஆயுத உதவி செய்த அனைவர்க்கும் குறிப்பாக ஈரானுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்” என்றார். மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு தற்போதைய மாறிய அரசியல் சூழலை கணக்கில் எடுக்காதது மிகப் பெரும் பின்னடைவாக இஸ்ரேலுக்கு மாறியது என்ற ஹனியா அதற்கு காரணமாக இஸ்ரேலுக்கு உதவி புரியும் தலைமைகள் மாறி போனதே என்றார். எமது எதிரி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கும் வரை தாமும் மதிப்போம் என்று கூறிய இஸ்மாயில் ஹனியா எதிரி எந்தளவு ஒப்பந்தத்தை மதிக்கிறது என்பதை எகிப்தின் மூலம் தெரிந்து கொள்வோம் என்றும் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரிய எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இஸ்லாமிய போராளி குழு  அறிவிப்பு
  

 
சிரிய எதிர்க்கட்சி கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இஸ்லாமிய போராளி குழு அறிவித்துள்ளனர்.

மேற்குலக நாடுகளின் பின்புலத்துடன் இயங்கும் எதிர்க்கட்சியினரை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அலப்பு நகரிலிருந்து இயங்கும் இஸ்லாமிய ஆயுதக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சிரியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதே தமது நோக்கம் என இஸ்லாமிய போராளி  குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணையம் ஊடாக வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய எதிர்க்கட்சிக் கூட்டமைப்பிற்கு உலகின் பல நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் சிரியாவில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்க இஸ்ரேல் திட்டமா?

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை எதிர்வரும் 29ம் திகதி ஐ.நா சபையில் வாக்கெடுப்புக்கு வருகின்றது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் 156 போராளிகளின் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை மேற்கொண்டதில் சிறுவர்கள் உட்பட பாலஸ்தீனியர்கள் பலியானதாகக் கூறப்படுகின்றது.
மேலும் ஹமாஸ் இயக்க இராணுவத் தலைவர் அகமட் அல் ஜபரி உம் இன்னும் இரு வீரர்களும் பலியாகியுள்ளனர்.
இதேவேளை 'ஆப்பரேஷன் பில்லார் ஆஃப் டிஃபென்ஸ்' எனப்படும் ஹமாஸ் இயக்கத்தினரின் தாக்குதலில் இதுவரை மொத்தம் 245 ராக்கெட்டுக்கள் இஸ்ரேலின் மீது பாய்ந்துள்ளன.
இதற்கிடையில் எதிர்வரும் 29ம் திகதி பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை ஐ.நா சபையில் வாக்கெடுப்புக்கு வருகின்றது.
எனவே பாலஸ்தீனம் மீது தாக்குதலை இஸ்ரேல் அதிகப்படுத்துவது மத்திய கிழக்கில் மறுபடியும் அமைதியின்மையைக் கொண்டு வருவதற்கே என உலக நாடுகள் கருதுகின்றன.
இன்னொரு புறம் பாலஸ்தீனத்தின் தன்னிகரற்ற தலைவர் யாசீர் அரஃபாதை பொலோனியம் எனும் நஞ்சை ஊட்டி இஸ்ரேலே கொலை செய்தது எனும் சந்தேகமும் வலுத்து வருவது பாலஸ்தீனியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாரக் ஒபாமா மீண்டும் அதிபரானதால் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவும் குறைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். 

                                                                                                                            4:75

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பாலஸ்தீனம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலியர்களே எதிர்ப்பு போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 06:01.18 மு.ப GMT ]
பாலஸ்தீனம் மீதான இராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேலிய மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டு மக்கள் தலைநகர் டெல் அவிவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் 8 குழந்தைகள் ஒரு கர்ப்பினி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இஸ்ரேலில் தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து எதிர்ப்பு வலுபெற்றுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பாகிஸ்தான் ரெயில்வேயை லாலுவிடம் ஒப்படைக்கலாம் !


பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் தேசிய சபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, ரெயில்வே செயல்பாடுகள் தொடர்பாக தொடர்பான கேள்விகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நோமன் இஸ்லாம் ஷேக் பதில் அளித்தார். அப்போது, 'ரெயில்வேயை மேம்படுத்தி லாபகரமாக நிர்வகிக்க புதிய என்ஜின்கள் வாங்க வேண்டும். 69 ரயில் என்ஜின்கள் வாங்குவதற்கு ரெயில்வே துறை டெண்டர் விட்டுள்ளது. உற்பத்தி அல்லாத செலவுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வரவுக்கேற்ப செலவு செய்யப்படும். 2010-2011 நிதியாண்டிற்கு ரெயில்வேயின் நிதி தேவை ரூ.1100 கோடி. ஆனால் ரூ.600 கோடி தான் கிடைத்தது. தேசிய வங்கியிடம் கடன் பெற்று, 96 என்ஜின்கள் பழுது பார்க்கப்படும். இருப்பினும் ரெயில்வேயை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை’ என்று ஷேக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முட்டாஹிதா குவாமி இயக்க உறுப்பினர், ‘ரெயில்வே நிர்வாகத்தில் உள்ள எண்ணற்ற பிரச்சினைகளை அரசால் சமாளிக்க முடியாவிட்டால், ரெயில்வே பொறுப்பை முன்னாள் இந்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவிடம் ஒப்படையுங்கள்’ என்று ஆவேசமாக கூறினார்.

நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் ரெயில்வே துறை பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ரெயில்கள் பற்றாக்குறை, எரிபொருள் மற்றும் உதிரி பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

காங்கோ: போராளிகள் மீது ஐ.நா. விமானப்படை தாக்குதல்


 காங்கோ நாட்டில் கடந்த ஒரு மாதமாக எம்.23 போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த 15-ம் தேதி வடக்கு கிவு மாகாணத்தில் நடந்த மோதலில் 113 போராளிகள் கொல்லப்பட்டனர். காங்கோ தலைநகர் கோமாவில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ருகாரி என்ற இடத்தில் நேற்ற போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே வெடித்த நேரடி மோதலில் 151 போராளிகள் கொல்லப்பட்டனர்.

2 ராணுவ உயர்அதிகாரிகள் பலியாகினர். எம்.23 போராளிக் குழுவை உகாண்டாவும், ருவாண்டாவும் ஆதரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டி வருகின்றது. இதனை அந்நாடுகள் மறுத்து வருகின்றன. நேற்று நடைபெற்ற மோதல்களை தொடர்ந்து ஐ.நா. படையின் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

'மோனுஸ்கோ' என பெயரிடப்பட்டுள்ள ஐ.நா. படையின் தாக்குதல் ஹெலிகாப்டர்கள், இன்று காலை கிகும்பா என்ற இடத்தில் உள்ள போராளிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் குறித்து வடக்கு கிவு மாகாண கவர்னர் கூறுகையில், 'ருவாண்டா ராணுவத்தில் ஆதரவு பெற்ற 3 ஆயிரத்து 500 எம்.23 போராளிகள் இன்று அதிகாலை ராணுவத்தளம் மீது ஆவேச தாக்குதல் நடத்தினர்.

அதற்கு பதிலடியாக, மோனுஸ்கோ ஹெலிகாப்டர்கள் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளன' என்றார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: