Facebook Twitter RSS

“ட்ரோன் அட்டாக்” எனும் பெயரில் நிகழ்த்தப்படும் அமெரிக்க பயங்கரவாதம் !

ரு ஜீப் வண்டி புளுதியை கிளப்பிக்கொண்டு விடியல் காலை செல்கிறது. சில நிமிடங்களில் அது வெடித்து சிதறுகிறது. எங்கும் புகை மண்டலம். சிதறடிக்கப்பட்ட கருகிப்போன ஜீப்பினுள் எட்டிப் பார்த்தால் ஒரு தாயும் அவள் குழந்தைகளும் அவள் கணவரும் பிணமாக எரிந்த நிலையில் கோரமாக காட்சி தருகின்றனர். விடயம் இது தான். அமெரிக்க கண்காணிப்பு சட்டலைட் தொழில் நுட் ப தகவல்களிற்கமைய, ஜீப்பில் செல்வது அல்-காயிதா ஆதரவு பயங்கரவாதிகள்.  ட்ரோன் ஆளில்லா கட்டுப்பாட்டியக்க விமான கமெராக்கள் மூலம் அந்த ஜீப் கண்காணிக்கப்பட்டு பின் இலக்கு வைக்கப்படுகிறது. ஒரு ஏவுகணை மூலம் இலக்கு அழிக்கப்படுகிறது. ஜீப்பினுள் ஏ.கே.47 ஒன்று மட்டும் கிடந்தால் போதும் அமெரிக்க அறிக்கையில் மிஷன் கொம்பிளீடட் என அறிக்கை வரும். இறந்தது பொது மக்களாக இருந்தால் ரியலி வீ ஆர் வொரியிங் திஸ் ஸ்ரஜடி என அறிக்கை வரும். அவ்வளவு தான். 



யெமனில் மீண்டும் அப்பாவிகள் ட்ரோன் விமான தாக்குதலில் பலியாக்கப்பட்டுள்ளதாக Human Rights Watch மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தனது எதிரிகளை ட்ரோன் மூலம் வேட்டையாடுவது இப்போததைய அமெரிக்க ஸ்டைலும் டெக்னிக்குமாகும். சட்டலைட் உதவியுடன் வழிப்படுத்தப்படும் கட்டளைகளிற்கிணங்க ட்ரொன் ஆட்கொல்லி விமானங்கள் தங்கள் லேசர் கைடட் ஏவுகணைகளை இலக்கு நோக்கி ஏவுகின்றன. 

102 பக்க அறிக்கையை ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பானது யெமன் மீதான அமெரிக்காவின் பொது மக்கள் படுகொலைகள் பற்றி பேசுகிறது.  அம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பும் 2013ல் அமெரிக்கா மேற்கொண்ட பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மற்றும் குனார் பிரதேசங்கள் மீதான ட்ரோன் தாக்குதலால் பலியாகியுள்ள அப்பாவி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பற்றி குற்றம் சுமத்துகிறது.

அமெரிக்காவின் லோ ஒப் வோர் எனும் சண்டைக்கான சட்டங்கள் ட்ரோன் தாக்குதலிற்கு தாராள அனுமதியை அளிக்கின்றன. அதை உயர்தரமான இழப்புக்கள் அற்ற, செலவு குறைந்த, துரிதகதியில் நிகழ்த்தப்படும் தாக்குதல் என நியாயப்படுத்துகிறது. “சேர்ஜிகல் ஸ்ரைக்” எனும் இவ்வகை தாக்குதல்கள் அமெரிக்க லோ ஒப் வோரில் முதன்மை ரக தாக்குதல்களில் ஒன்றாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. 

அமெரிக்க தாக்குதல்களில் பயங்கரவாதிகளை விட பொதுமக்களே அதிகம் மரணிக்கின்றனர் என ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு சாடியுள்ளது. ட்ரோனினால் இலக்கு வைக்கப்படுபவர்களில் 70 விகிதமானவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனவும் மிகுதி 30 விகிதமானவர்களே பயங்கரவாதிகள் என்றும் அந்த அமைப்பு புள்ளி விபரங்களுடன் உறுதிபட தெரிவிக்கின்றது. 

 அமெரிக்க தாக்குதல்களில் அவர்கள் எதிரிகளை கொன்றதை விட எதிலும் சம்மந்தம் இல்லாத சாதாரண பொது மக்களை கொன்றதே அதிகம் 
People gather at the site of a drone strike on the road between Yafe and Radfan districts of the southern Yemeni province of Lahj August 11, 2013. (Reuters)
ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பின் இந்த அறிக்கையிடல் பாராட்டத்தக்க ஒரு செயற்பாடாகும். அதே வேளை அமெரிக்காவின் எதிரிகளை “பயங்கரவாதிகள்” என்று எந்த அளவுகோலின் அடிப்படையில் அது குறிப்பிடுகிறது என்பது நியாயமிக்க கேள்வியாகும். ஒரு யெமனியிடமோ அல்லது ஒரு வசிரிஸ்தான் வாசியிடமோ இறந்தது யார் என்றால் அது ஒரு புனித போராளி என்பான். இறந்தவரை கண்ணியமாக “அஷ்-ஷஹீத்” என்று சங்கையாக விளிப்பான். ஆக இறந்தவர் ஒரு தரப்பினரிற்கு புனித போராளி. மறு தரப்பினரிற்கு பயங்கரவாதி. இதில் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பும், அம்னஸ்டி இன்டர்னஷனலும் அமெரிக்க எதிர்தரப்பினரை அமெரிக்கா குத்தும் முத்திரைகளான “பயங்கராவாதி, முஸ்லிம் அடிப்படைவாதி” போன்ற பதப்பிரயோகங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் அடிப்படை பார்வைகள் என்ன என்பத பற்றிய கேள்விகள் எழுவதும் நியாயமானதே. 

மனித குலத்திற்கு எதிரான ஒரு அப்பட்டமான ஒரு இனஅழிப்புசார் குற்றத்தை அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் நடாத்திகொண்டிருக்கிறது. டிஜிட்டல் மெக்கானிக்கள் உபகரணங்கள் இன்று ஒரு முஸ்லிமின் உயிரை எடுப்பதா விடுவதா என்று தீர்மானிக்கின்றன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இதுதான் 'ஹிக்மத்' 'லேபில் அடித்த அசல் கோழைத்தனம் !

     மஸ்ஜிதில் இருந்து அதான் ஒலித்தது . அது அல்லாஹ்வின் அழைப்பு ! அதிகாரத்தில் இருந்து குப்ரியத் கட்டளையிட்டது .அது உலக வாழ்வியலுக்கான அழைப்பு .துன்யா வேறு ஆகிரா வேறா!? மறுமையின் வெற்றிக்காக இம்மை இல்லையா !? வெற்றி பெற விரைந்து வாருங்கள் என்ற அதானுக்கு மறுமைக்கு என ஒரு ஆன்மீக நியாயத்தை கூறிவிட்டு மறுபக்கம் 'தாகூத்தின்' அதே போன்ற அழைப்புக்கு புரிந்தும் புரியாமலும் தலைவணங்கிப் போவது சரியா !? இது தானா முஸ்லிமின் நடத்தை !?


          பரலோகத்தில் (ஆகிரத்தில் ) அல்லாஹ்வின் அதிகாரத்தை மட்டுப் படுத்தி விட்டு பூலோகத்தில் (துன்யாவில் ) ஏதோ ஒரு ஆளும் சக்திக்கு கட்டுப்படுவது ,அதன் விருப்பு வெறுப்பின் படி நடத்தைக் கோலத்தை மாற்றுவதா முஸ்லிமின் பண்பு!? ,யஹூதிகள் இறை சாபத்துக்கு உள்ளானதும் , கிறிஸ்தவர்கள் வழி தவறியதும் இதனால் தான் என்பது ஒரு நாளைக்குள் பலதடவை சூரத்துல் பாத்திஹாவை ஓதியும் முஸ்லீம்களே ! ஏன் உங்களுக்கு புரியவில்லை !?

          அரபி தெரிந்தவனே நாசரானிகளோடு கூட்டுச் சேர்ந்து யகூதிக்கு தோள் கொடுக்கும் போது நாம் என்ன செய்வது !? எல்லாம் 'கல்லி வல்லி ' என நரகத்து விசா எடுக்கும் 'ஈஸி டெக் நிக்' ஹிக்மத்தாக தெரிவது ஆச்சரியமே ! மறுமையில் எவனையும் வைத்து உன்னிடம் கேள்வி கேட்கப் படாது உனது தேடல் ,உனது முயற்சி ,உனது நடத்தையை வைத்தே உன்னிடம் கேள்வி கேட்கப்படும் .

              குப்ரியத்தின் அகீதா ,அது காட்டும் வாழ்வியல் ,மற்றும் அதன் நாகரீக ,கலாச்சார வட்டம் என்பன ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பு விதியாகிப் போக 'டாவின் வீட்டு குரங்குப் பிள்ளையாக' ஒரு அநாகரீக மாற்றத்தை அரவணைத்துள்ளது இன்னும் புரியவில்லையா ?மதம் வேறு வாழ்வியல் வேறு என பக்குவமாக பிரிக்கப் பட்டுள்ள குப்ரியத்தின் சித்தாந்த கட்டமைப்பில் முஸ்லீம் உம்மத்தையும் இணைத்து take it easy policy போடுவதா காலத்தின் தேவை !?

                 தேசம் ,தேசியம் என்ற 'ஜாஹிலீயத்தினுள் 'சகோதரத்துவத்தை சம்பூர்ணமாக புதைத்து விட்டு ,சாத்தானிய வேதங்களை நம்பி ஜனநாயக விலாசத்தில் குடியிருக்க முஸ்லீம் கற்றுக் கொண்டது சரிதானா !?இப்போது 'முஸ்லிம் முஸ்லிமுக்கு சகோதரன் என்ற இஸ்லாத்தின் உறுதியான தீர்ப்பு 'nationalize' border இல் முக்காடு போட்டு குந்திவிட ,அதற்கு அப்பால் எல்லை தாண்டினால் கலிமாச் சொன்னவனும் அயல் நாட்டான் என்று குப்ரியக் கண்ணாடி போட்டுதான் குசலம் விசாரிக்கப் படுகிறது .

              பலஸ்தீனை பிரிக்கும் எகிப்திய 'போர்டருக்கும் ' பர்மிய முஸ்லீம்களை ஏற்க மறுத்த பங்களா தேஷ் 'போர்டருக்கும் '  தேசியம் எனும் same பிரிகோட்டு policy தான் ஒரே நியாயம் .அதற்கும் அப்பால் சகோதரனின் படுகொலையும் ஏதோ கண்ணா மூச்சி போல தேசியக் கொடியால் கண்கள் கட்டப்பட்டே காட்டப்படும் .அனுதாபங்கள் கூட எல்லை தாண்ட 'பொலிடிகல் டிப்லோமடிக் ' வேண்டுமாம் !

                  face book இலும் டுவிடரிலும் அழுதென்ன பயன் !அரவணைத்திருப்பது அந்நிய அகீதா !சகோதரத்துவம் ,ஒரே உம்மத ,ஒரே பெருநாள் , இப்படி எல்லாவற்றையும் தேசம் ,தேசியம் என்ற சாத்தானிய எல்லைக்கோடுகள் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது . 'குர்பான் மட்டையும் ஏதோ 'கொமர்' விடயம் போல ஒழித்து மறைத்து முடிக்கச் சொல்வதும் ,'போயா' தினத்தில் 'அய்யாமுத் தஷ்ரீக் ' வந்தால் சபூர் செய்யச் சொல்லி பௌத்த இஸ்லாம் பேசுவதும் இன்று கோழை நியாயத்தில் முஸ்லீமுக்கு கொள்கையாய் போயுள்ளது .

                தெளிவற்ற உம்மத் திற்கும் ,தகுதியற்ற ஆலிம்களுக்கும் மத்தியில் சத்திய  மார்க்கம் மாட்டுப்பட்டு தவிக்கின்றது .சிந்தனை வீழ்ச்சியும் ,சிற்றின்ப ஆசையும் சுவன எதிர்பார்ப்புகளை ஏதோ ஏட்டுச் சுரக்காய் போல் ஆக்க ,முஸ்லீம் அழகுராணிப் போட்டி களிலும்  இராகத்தோடு ஓதப்படும்  வேதாந்தமாக போய் விட்டது இறை வேதம் .

              ஓதுவோம் ,விளங்குவோம் , அதன் வழி நடப்போம் , அதன் பால் அழைப்போம் என கூறியவர்களும் ,சூழ்நிலைவாத சிட்டிவேசன் பேசி தாகூத்துக்கு ஆலோசகராகி பேய்க்கு பேன்  பார்க்கப் போய் விட்டார்கள் .ஸுன்னாவை ஓரம்கட்டி குப்ரை தலை தடாவினால் இஸ்லாம் சுகப் பிரசவம் ஆகும் என்று ஆரூடம் கூறும் இந்த ஆலிம்களிடம் அலிப் ,பே கற்கச் செல்வதும் ஆபத்தானது தான் .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

மேற்கினது முகவரான மனித உரிமைகள் அமைப்பினது இரட்டை வேடங்கள்

 இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதே அவர்களது இலக்கு! (ஒரு முக நூல் பதிவில் இருந்து ..)


இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இஸ்லாத்திற்கு எதிரான விஷமப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடும் போக்கை நாம் சர்வ சாதாரணமாக காணலாம்.

     முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பெயர்சூட்டுவது அவர்களுக்கு கைவந்த கலை. கற்காலத்தை நோக்கி நகர்த்தும் மார்க்கம் இஸ்லாம் என்றும் காட்டுமிராண்டித்தனமான சரீஆ சட்டத்தை கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்றும் தமது மீடியாக்களைப் பயன்படுத்தி கீழைத்தேய வாதிகளால் பல்வேறு விதமான இஸ்லாமிய விரோத நச்சுக்கருத்துக்களை விதைக்கும் சிந்தனைப் படையெடுப்பை நாம் நாளாந்தம் எமது ஊடகங்களில் பார்க்கலாம்.

  மனித உரிமைக்காக உலகமெல்லாம் குரல்கொடுப்பார்கள். முஸ்லிம்களது விடயத்தில் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களது பார்வையில் முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள். கரப்பொத்தான் பூச்சிகள்.

    பெண்ணியம் கதைக்கும் முஸ்லிம் பெண்களை உருவாக்கி அவர்களை இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைக்க பாடுபடுவார்கள்.

    முஸ்லிம் பெண்களது கல்வி உரிமை மீறப்படுவதாக நாடகங்களை அரங்கேற்றம் செய்வதற்கு மலாலா போன்ற பெண் விடுதலை போராளிகளை புரோமோட் பண்ணி இஸ்லாத்திற் கல்வி கற்கும் உரிமை மீறப்படுவதாக கொக்கரிப்பார்கள்.

   Dr. ஆபியா சித்தீக்கா போன்ற கல்விமான்கள் இஸ்லாத்திற்காக குரல்கொடுத்தால் அவர்களை போன்ற பெண்களை பிடித்து சிறையிலிட்டு கற்பழித்து பெண்ணுரிமையை பாதுகாப்பார்கள். இதுதான் இன்று மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம் உலகினை நடாத்தும் விதம்.

   எனவே இஸ்லாம் எழுச்சி பெறக்கூடாது என்பதற்கான அவர்கள் முன்னெடுக்கும் சிந்தனைப் படையெடுப்பின் ஒரு கைபொம்மையாக கருவியாக மலாலா நாடகம் உலகில் அரங்கேற்றப்பட்டு இஸ்லாத்திற்கு சேறு பூச நினைக்கிறது மேற்குலகும் அதன் முகவர்களும் என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

லஷ்கர் ஏ-தொய்பா - ரா(RAW)வும் சீ.ஐ.ஏ.யும் ஏன் எச்சரிக்கின்றன?


by: Salahudeen Iyoobi
  “ஷ்கர் ஏ-தொய்பா“. இந்த உருது மொழியின் தமிழ் மூலம் என்ன தெரியுமா?, “இறைவனின் இராணுவம்”. இந்திய கட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை இராணுவ மற்றும் அங்குள்ள மக்கள் வலுவை கொண்டு பிரித்து ஆஸாத் காஷ்மீருடன் இணைத்து அதனை பாகிஸ்தானிடம் தாரை வார்க்கும் புரொக்ஜெட்டின் பெயர் என்றும் சொல்லலாம். காஷ்மீரின் பள்ளத்தாக்கு கிராமமான சிட்டிசிங்புரா தாக்குதலில் ஆரம்பித்து இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வரை அது தன்னை தெளிவாகவே இந்தியாவிற்கு அடையாளப்படுத்தியுள்ளது.  

ஆப்கானிஸ்தானில் 12 காஷ்மீரிய இளைஞர்களை பயிற்றுவித்ததில் ஆரம்பமான அதன் இராணுவ பலம் இன்று “ஆசியாவின் ஹிஸ்புல்லாஹ்” என குறிப்பிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஏனைய காஷ்மீரிய விடுதலை அமைப்புக்கள் போலல்லாது இது நீண்டகால திட்டமிடல்களுடனும் இஸ்லாமிய சாம்ராஜ்ய கனவுகளுடனும் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. ஆப்கானில் உள்ள தலிபான்களுடனும் அல்-காயிதாவுடனும் நேரடி உறவுகளை கொண்ட அமைப்பு. 

இங்கே நாம் லஷ்கரின் வராலாறு பற்றியோ அதன் காஷ்மீரிய செயற்பாடுகள் பற்றியோ குறிப்பிடுவதல்ல நோக்கம். லஷ்கரிற்கு இரண்டு கொள்கைள் உள்ளன. 

  • காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி ஆஸாத் காஷ்மீருடன் இணைந்த காஷ்மீர் மாநிலத்தை (தனி நாட்டையல்ல) உருவாக்கி அதனை பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக இணைப்பது. (இதற்கு பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)
  • உலகில் குறிப்பாக ஆசியா கண்டத்தில் உள்ள முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவதும் அதற்கான பதில் நடவடிக்கைகளை உருவாக்குவதும். (இதற்கு அல்-காயிதா போன்ற பல இஸ்லாமிய போராளி  அமைப்புக்களின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)
இவர்களது இரண்டாவது கோட்பாடே அமெரிக்கா, மேற்குலகு, முஸ்லிம்களை நசுக்க விரும்பும் தேசங்கள் போன்றவற்றிற்கு பிரச்சனைக்குரிய விடயமாக உள்ளது. 

லஷ்கர்-ஏ-தொய்பா தனது எல்லைகளிற்கு அப்பால் உள்ள தேசங்களில் முஸ்லிம் ஆயுத போராட்ட அமைப்புக்களை உருவாக்குவதில் பல வெற்றிகளை கண்டுள்ளது. அங்குள்ள இளைஞர்களிற்கு பயிற்ச்சியளித்தல், அவர்களிற்கான நேரடி களப்பயிற்ச்சிகளிற்கான பிரயாணங்களை ஒழுங்கு செய்தல், அவர்களது நேரடி களப்பயிற்ச்சிகள் முடிந்த பின்னர் அவர்களை அவர்களது தாயகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தல், அவர்களிற்கான ஆயுத விநியோகங்களிற்கான ஒழுங்குகளை செய்தல் போன்ற ஒரு போராட்டத்தின் பல மிக முக்கியமான தயாரிப்புக்களை செய்து கொடுக்கும் ஸ்பொன்சராக செயற்படுகிறது. 

தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரோகீங்கியா, தாய்லாந்து, மிண்டானோ, ஷின்ஷியாங், டுபாய் என அது தனது செயற்களங்களை விரிவாக்கி வருகிறது. 


இலங்கையில் லஷ்கர்-ஏ-தொய்பா செயற்படுகிறது என முதலில் அமெரிக்கா சொன்னது. பின்னர் இந்தியா சொன்னது. இப்போது இலங்கை அது பற்றி கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதன் செயற்பாடுகள் உள்ளன என்பது எக்ஸ்ட்ரா மெசேஜ். இந்த தகவலின் உண்மைகள் பற்றிய அடிப்படைகள் ஆராயப்படல் வேண்டும். 

விஞ்ஞான தகவல் தொழில் நுட்ப தொழிற்பாட்டின் மகோன்னத வளற்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் உலகம் ஒரு கிராமமாகி விட்டது என்கிறார்கள். அது பொருளாதாரம், வர்த்தகம், சமூக கலாச்சார உறவுகள், விஞ்ஞான பரிமாற்றங்கள் என்ற எல்லைகளிற்கு மட்டும் பொருந்தும் என்பது போல் அவர்கள் கருத்துக்கள் உள்ளன. இதே தகவல் தொழில் நுட்ப மற்றும் தொடர்பாடல் வளற்ச்சி என்பது இராணுவம்,  விடுதலை போராட்ட அமைப்புக்கள், சுதந்திர போராளிகளின் குழுக்கள், புரட்சியாளர்கள் தளங்கள், பாசிஸ சக்திகள், நவ நாசிஸ்ட்கள் என எல்லோருக்குமே பொருந்தும். 

இதனடிப்படையில் யாருக்கும் உலகில் எந்த மூளையிலும் இரகசிய தொடர்புகள் செயற்பாடுகள் இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. அதே வேளை இலங்கையின் கிழக்கு பிரதேசத்தில் லஷ்கர் என்பது அடிப்படைகள் அற்ற ஊகம் என்பதற்கான வாய்ப்புக்களே நிறைய உள்ளன. 

தமிழ் நாட்டில் பி.ஜே.பி.யின் செயற்களத்தின் வாசல்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கான சமூக பாதுகாப்பு என்பதற்கான களத்தின் வாயில்களும் திறக்கப்படவேயிருக்கின்றன.  விடயம் என்னவென்றால் லஷ்கர்-ஏ-தொய்பாவிற்கு தமிழ் நாட்டில் இயங்கு தளமமைத்து செயற்படுவது சற்று சிரமமானது. தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கு போராட்டவியல் என்றால் என்ன என்றே தெரியாது. அந்த நிலையில் லஷ்கரின் செயற்பாடுகள் அவர்களை மக்கள் மத்தியில் அந்நியப்படுத்தி விடும். இந்திய உளவமைப்பான ரா(RAW)  இலகுவாகவே இவர்களை மோப்பம் பிடித்தும் விடும். புலிப்பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை முஸ்லிகள் தங்கள் உயிர்வாழ்தல் என்ற இருப்பிற்கான போராட்டவியலில் நிறையவே பரீட்சையமானவர்கள். தமிழ் நாட்டு களத்திற்கான தளமாக கிழக்கிலங்கையை லஷ்கர் இலக்கு வைக்கிறதா என்ற கேள்வி இதிலிருந்தே பிறக்கிறது. இது இந்திய நியாயம் சார் அச்சங்கள்..

அமெரிக்கா இலங்கையில் லஷ்கர் பற்றி பிரஸ்தாபிப்பது பற்றி நோக்கின்,.. அல்-காயிதா போன்ற சர்வதேச வலைப்பின்னல் கொண்ட ஜிஹாதிய அமைப்புக்களுடன் தொடர்புடைய எந்த அமைப்பையும் அமெரிக்கா ஏற்றுகொள்ளாது. இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. தெற்காசியாவில் கிறிஸ்தவ தேசம் கிடையாது. பிலப்பைன்ஸ், கிழக்கு திமோரை தவிர. தமிழ் ஈழம் என்ற தேசத்தை உருவாக்கி அதனை கிறிஸ்தவ தேசமாக மாற்றும் பிராந்திய கனவுகளிற்கு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இடையூறான இருப்பை இல்லாமல் பண்ணும் வில்லங்கமான திட்டமாகவும் இது இருக்கலாம். 

பொது பல சேனா போன்ற பௌத்த அடிப்படைவாத மதவாத அமைப்புக்களின் நெருக்கடிகள் இலங்கை அரசிற்கு உள்ளன. பௌத்த மதவாத சக்திகளை சரிநிகர்சமானமாக முகங்கொள்ளும் இஸ்லாமிய அமைப்புக்களை லஷ்கர் என்ற முத்திரையை குத்துவதன் ஊடாக ஊற்றி மூடிவிடாலம். அதற்கு கிழக்கிலங்கை லஷ்கர் பூச்சாண்டி பெரிதும் உதவும். பொது பல சேனாவின் அடாவடித்தனங்களிற்கு எதிராக நடத்தப்பட்ட ஹர்த்தால் தெற்கிலங்கையில் தோற்றுப்போன போது அது கிழக்கிலங்கையில் வெற்றியளித்தமை இனவாத சக்திகளிற்கு கிழக்கு முஸ்லிம்களை முடக்க வேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியிருந்தது. லஷ்கர் சாயம் பூசுவதன் ஊடாக அதை இலகுவாக நிறைவேற்றி விடலாம் அவர்களிற்கு. 

சர்வதேச அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணி ஸ்டைலில் இந்த மேட்டரை முடித்து கொள்கிறோம்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

மொசாத் உளவாளிகளின் ரகசிய ஹோட்டல் சந்திப்பு மீடியாவில் லீக் ஆனது எப்படி?

  

  இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம் ஒன்று, துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்தது. அங்காராவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த சந்திப்பு ஒன்று ‘எப்படியோ’ மீடியாவுக்கு லீக் ஆன விவகாரம் அது.


சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 11 பேர். இதில் 10 பேர், ஈரானில் ரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருந்த உளவாளிகள். இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்காக ஈரானில் பணி புரிந்தவர்கள். 11-வது நபர், இந்த 10 பேரின் மேலதிகாரி. இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ்வில் இருந்து இவர்களை ரகசியமாக சந்திக்க அங்காரா வந்திருந்தார்.
அங்காரா நகர ஹோட்டல் ஒன்றில் இவர்கள் சந்தித்து பேசிக்கொண்டது எப்படியோ, துருக்கி மீடியாவில் போட்டோக்களுடன் வெளியானது. இந்த ரகசிய சந்திப்பு எப்படி லீக் ஆனது என தலையைப் பிய்த்துக் கொண்டது, இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்.

ஈரானுக்குள் உளவு பார்க்க நுழைவது சுலபமல்ல. ஆனால், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் இரண்டுமே தமது உளவாளிகளை அங்கே வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் ஈரானுக்கு உண்டு.

ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் வீதிகளில் ‘மர்ம நபர்களால்’ கொல்லப்பட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபோது, சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் உளவாளிகள் ஈரானுக்குள் இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் உறுதியானது. மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து சுட்டுவிட்டு, மிக எளிதாக தப்பிச் சென்ற ‘மர்ம நபர்கள்’ யாரும் இதுவரை அகப்படவே இல்லை.

தமது அணு விஞ்ஞானிகளை ஒவ்வொருவராக இழந்தபோது, அவர்களை கொன்ற மர்ம நபர்களை எந்த அளவுக்கு வலைவீசித் தேடியிருப்பார்கள் ஈரானிய உளவுத்துறை என்று யோசித்துப் பாருங்கள். ஆனால், இன்றைய தேதிவரை யாரும் அகப்படவில்லை.

அதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. முதலாவது, அந்த மர்ம நபர்கள் கைதேர்ந்த உளவாளிகளாக இருக்க வேண்டும். இரண்டாவது, சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் ஹெல்மெட்டை கழட்டினால், யாராலும் சந்தேகப்பட முடியாத நபர்களாக இருக்க வேண்டும். அதாவது, ஈரானிய அரசு உயரதிகாரிகளாகவோ, ராணுவ தளபதிகளாகவோ, ஏன் விஞ்ஞானிகளாகவோகூட இருக்கலாம்.

அப்படியான விதத்தில் ஈரானுக்குள் ஊடுருவ விடப்பட்ட தமது உளவாளிகளை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் தலைமை, நேரே இஸ்ரேலுக்கு அழைத்து பேச மாட்டார்கள். சந்தேகப்பட முடியாத மற்றொரு நாட்டுக்கு வரச் சொல்வார்கள். தமது மேலதிகாரியை அந்த நாட்டுக்கு அனுப்பி சந்திக்க சொல்வார்கள்.

மொசாத் வைத்திருந்த, ‘சந்தேகப்பட முடியாத மற்றொரு நாடு’ துருக்கி.
ஈரானில் ஊடுருவ விடப்பட்டிருந்த 10 உளவாளிகளை சந்தேகம் ஏற்படாதவாறு துருக்கிக்குள் வரச்செய்து, இஸ்ரேலில் இருந்து மொசாத் மேலதிகாரி ஒருவரையும் துருக்கிக்கு அனுப்பி, இந்த 11 பேரும் சந்தித்து பேசிய விஷயம்தான், மிக சிம்பிளாக துருக்கி மீடியாவில் லீக் செய்யப்பட்டது. அதன்பின் அந்த 10 நபர்களாலும் மீண்டும் ஈரானுக்கு செல்ல முடியவில்லை.

இந்த விவகாரம் எப்படி லீக் செய்யப்பட்டது என்ற விபரம், தற்போது உளவு வட்டாரங்களில் அடிபடுகிறது. துருக்கியின் ‘சர்வ வல்லமை பொருந்திய’ உளவுத்துறை தலைவரின் வேலைதான் இது என்கிறார்கள்.
துருக்கியின் பிரதான உளவுத்துறையின் பெயர், எம்.ஐ.டி. ( MIT – Milli Istihbarat Teskilati). அதன் தற்போதைய தலைவர் ஹக்கன் ஃபிடானின் பெயர் தற்போதெல்லாம் அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்களுடன் நெருக்கமான வாஷிங்டன் போஸ்ட், நியூயார் டைம்ஸ் பத்திரிகைகளில் அதிகம் அடிபடுவதை காணலாம்.

சமீபத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டபோது, வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் விருந்துடன் கூடிய சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி, மற்றும் துணை ஜனாதிபதி கலந்துகொண்ட அந்த சந்திப்புக்கு பிரதமர் எர்டோகனுடன், துருக்கி உளவுப்பிரிவு தலைவர் ஃபிடானும் அழைக்கப்பட்டதில் இருந்து அவரது முக்கியத்துவத்தை வாஷிங்டன் எப்படி கணித்து வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் (மேலேயுள்ள போட்டோவில் இடதுபுறமிருந்து இரண்டாவது நபர் பிரதமர் எர்டோகன், மூன்றாவது நபர், உளவுத்துறை தலைவர் ஃபிடான்)
இவர்தான் துருக்கி ஹோட்டலில் வைத்து மொசாத் உளவாளிகள் நடத்திய சந்திப்பு பற்றிய தகவலை லோக்கல் மீடியாவுக்கு லீக் செய்தவர் என்கிறார்கள், உளவுத்துறை வட்டாரங்களில் என்ன காரணம்? ‘இஸ்ரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை’ என்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது என்று ஊகிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், தமது ஈரானிய மற்றும் சிரியா ஆபரேஷன்களை நீண்ட காலமாகவே துருக்கியை மையமாக வைத்தே நடத்திக் கொண்டிருக்கிறது. அதாவது, ஈரான் மற்றும் சிரியாவில் செயல்படும் மொசாத் உளவாளிகளுக்கு உத்தரவு போவது, துருக்கியில் மொசாத் மறைமுகமாக இயக்கும் ரகசிய ஆபரேஷன் சென்டரில் இருந்து என்கிறார்கள்.

அத்துடன், சி.ஐ.ஏ. தம் பங்குக்கு துருக்கியில் வைத்து மற்றொரு ரகசிய ஆபரேஷன் செய்கிறது.

சிரியாவுக்குள் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பினருக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுப்பது தற்போது துருக்கி ஊடாக ரகசியமாக தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் சிரியாவுக்கு உள்ளே ஆயுதங்களை ரகசியமாக அனுப்ப சி.ஐ.ஏ. துருக்கி எல்லையை உபயோகிக்க திட்டமிட்டது. இரண்டு விமானங்களில் ஆயுதங்களும் போய் இறங்கின. ஆனால், அந்த ஆபரேஷனை நடத்த துருக்கி அனுமதிக்கவில்லை. அதற்கு ரஷ்யா கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம்.

இதையடுத்து சி.ஐ.ஏ. அந்த ஆயுதங்களை சிரியாவின் மற்றொரு எல்லை நாடான ஜோர்தானுக்கு கொண்டு சென்றது. ஜோர்தான் எல்லை ஊடாக ஆயுத சப்ளை நடந்தது. அதுவரைக்கும் சரி.

ஆனால், ஜோர்தான் எல்லை ஊடாக கொடுக்கப்படும் ஆயுதங்களை போராளி அமைப்பினர், யுத்தம் நடக்கும் அலீபோ மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கு கொண்டுவர முடியவில்லை. அதையடுத்து சி.ஐ.ஏ. ரகசியமாக சில ஆயுதங்களை சிரியாவுக்குள் கொண்டு சென்றது. இந்த வகையில் துருக்கி எல்லை ஊடாக ஒரு ஷிப்மென்ட் ஆயுதங்கள் சிரியாவுக்குள் சென்றன.

துருக்கி அரசுக்கு தெரிவிக்காமல் சி.ஐ.ஏ. செய்த இந்த ரகசிய கடத்தலை, துருக்கி உளவுத்துறை எம்.ஐ.டி., கண்டு பிடித்துவிட்டது.
சி.ஐ.ஏ.வின் இரண்டாவது ஆயுத ஷிப்மென்ட் துருக்கி எல்லைக்கு வந்தபோது, எம்.ஐ.டி. ஒரு தந்திரம் செய்தது. சிரியாவில் இருந்து ஆயுதம் பெற்றுக் கொள்ள வந்த ஆட்களை முதலில் தாங்களே மடக்கிக் கொண்டு, தமது ஆட்களை விட்டு ஆயுதங்களை பெற்றுக் கொண்டது துருக்கி உளவுத்துறை.

அந்த ஆயுதங்கள் சிரியாவுக்கு உள்ளே போய் சேரவில்லை.
சி.ஐ.ஏ. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக ‘கம்’மென்று இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இப்படியான நிலையில்தான், துருக்கி ஹோட்டலில் ரகசிய சந்திப்பு நடத்திய மொசாத் ஆட்கள் பற்றிய தகவல் லீக் செய்யப்பட்டது. இதை, ‘மொசாத்துக்கு ஒரு நேரடி எச்சரிக்கை’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது மொசாத்தின் கூட்டாளி சி.ஐ.ஏ.வுக்கு மறைமுக எச்சரிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இது, துருக்கி உளவுத்துறை தலைவர் ஃபிடான் செய்த வேலை என்கிறார்கள்.
ஃபிடான், அமெரிக்க மேரிலேன்ட் பல்கலைக் கழகத்தின் ஐரோப்பிய வளாகத்தில் படித்தவர். அதன்பின் துருக்கி தலைநகர் அங்காராவின் பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயன்ஸில் டாக்டரேட் பெற்றவர். 2003-ம் ஆண்டு துருக்கி வெளியுறவு அமைச்சில் பணியில் சேர்ந்து, 2007-ல், துருக்கி பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் ஆனார். அதுவரை எந்த உளவுத்துறை பின்னணியும் கிடையாது.
திடீரென, 2010-ம் ஆண்டு உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே, துருக்கி உளவுத்துறை வெட்டி விளையாடத் தொடங்கியிருக்கிறது.

துருக்கியிலும், ஈராக்கிலும் அமெரிக்க தூதராக பணிபுரிந்த ஜேம்ஸ் ஜெஃப்ரி, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், “நாங்கள் இதுவரை காலமும் டீல் பண்ணிய மத்திய கிழக்கல்ல, தற்போது உள்ளது. அவர்கள் நிறையவே மாறி விட்டார்கள். துருக்கி உளவுத்துறை தலைவர் ஃபிடான், ‘புதிய மத்திய கிழக்கின்’ முகம்.

எமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், நாம் அவருடன் இணக்கமாக வேலை செய்ய வேண்டும். அவரால் அந்த பிராந்தியத்தில் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை. அவருடன் இணக்கமாக இருந்தால், எமது காரியங்கள் நடக்கும். முறுகிக்கொண்டால், காரியத்தை மறக்க வேண்டியதுதான் என்பது மட்டுமல்ல, எம்மையே பலி வாங்கிவிடும்” என்றார்.

இந்த உண்மையை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், தமது 10 உளவாளிகளின் அடையாளத்தை வெளிப்படுத்திய பின் புரிந்து கொண்டிருக்கலாம்!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

டமஸ்கஸ் மீது தாக்குதல்கள் ஆரம்பம் - சிரிய சமரில் தற்கொலை தாக்குதல் களம் திறப்பு!!

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே செக்பாயின்ட் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து, அந்தப் பகுதியில் யுத்தம் மூண்டது. இந்த பகுதியில் நடந்த சண்டையில், 16 ராணுவ வீரர்களும், 15 தீவிரவாத அமைப்பினரும் நேற்று கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராளி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமான ம்லேஹாவில் இருந்து அரசு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜரமானா நகரத்துக்கு செல்லும் பிரதான செக்-பாயின்ட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிப்பொருள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை செலுத்திவந்த மனித வெடிகுண்டு தீவிரவாத உறுப்பினர் ஒருவர் செக்-பாயின்ட்டின் காவலரணில் மோதியதில் கார் வெடித்துச் சிதறியது.

அதையடுத்து, ராணுவம், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே ம்லேஹா நகரை நோக்கி ராக்கெட் தாக்குதல்களை நடத்த தொடங்கியது. போராளி அமைப்பினர் திருப்பி தாக்க, சில மணி நேரம் அங்கு கடும் யுத்தம் நடந்தது.
தற்கொலை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை உரிமை கோரவில்லை. ஆனால், தாக்குதல் நடைபெற்றுள்ள ஏரியா, மற்றும் தாக்குதல் முறையை வைத்துப் பார்த்தால், அல்-நுஸ்ரா இயக்கத்தின் தாக்குதல் இது என்று ஊகிக்கலாம். அல்-நுஸ்ரா, சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத இயக்கம்.
தற்போது யுத்தம் ஓரளவுக்கு ஓய்ந்துள்ள போதிலும், இந்த செக்-பாயின்ட் மூடப்பட்டு விட்டது. இரு நகரங்களுக்கும் இடையே பொதுமக்கள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பெங்காஸியின் மிலிட்டரி பொலீஸ் தலைமை கொமாண்டர் சுட்டுக்கொலை !!


Ahmed al-Barghathi  துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லிபியாவின் மத்தியதரைக்கடல் நகரான பெங்காஸியின் கிழக்கு பகுதியில் வைத்து பெங்காஸி மிலிட்டரி பொலீஸின் தலைமை கொமாண்டர் (Ahmed al-Barghathi ) சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வெளியேறிய வேளையில் துப்பாக்கிதாரிகள் இவரை சுட்டுக்கொன்றுள்ளனல். அல்-காயிதா ஆதரவு செயற்பாட்டாளரான அல்-லிபியை அமெரிக்க பலாத்காரமாக லிபிய இறையாண்மையை மீறிய நிலையில் கடத்தி சென்று நியூயோர்க்கில் விசாரித்து வருகிறது. இதன் பின்னர் லிபியாவில் பல இடங்களில் அரச எதிர்ப்பு வன்முறைகள் மெல்ல ஆரம்பமாகி வருகின்றன. 


லிபிய அரசால் போராளிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலைமையே காணப்படுகிறது. இஸ்லாமிய இயக்க போராளிகளையும், ஆயுதம் தரித்த பழங்குடி இனத்தவரையும் கட்டுப்படுத்துவது என்பது லிபிய இராணுவத்தால் முடியாத காரியமாக உள்ளது. லிபியாவின் பல உட்பிராந்தியங்களில் அரச இயந்திரம் முடக்கப்பட்டுள்ளது. அங்கு இராணுவம் தனது நடமாட்டங்களை முற்றாக தவிர்த்தும் விட்டது. உமர் முக்தாரின் ஆதரவு கிரமாங்களிற்கு செல்ல அன்றைய இத்தாலிய ஜெனரல்கள் பயந்தது போலவே இன்று லிபிய ஜெனரல்கள் பயப்படுகின்றனர்.

மொத்த லிபியாவிலும் பெங்காஸியில் தான் லிபிய இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சீ.ஐ.ஏ.யின் உயர்நிலை உளவாளியும் இதே பெங்காஸி அமெரிக்க துணை தூதராயத்தில் வைத்தே குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அல்-காயிதா போன்ற அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்களின் ஆதிக்கமும் அவர்களின் கருத்தியல் தாக்கமும் பெங்காஸியில் வலுவடைந்துள்ளன. 

Wissam Ben Hamid. முன்னாள் லிபிய சுதந்திர போராளி குழுவொன்றின் தலைவர். இப்போது லிபிய பாதுகாப்பு அமைச்சில் முக்கிய அதிகாரி. இவரது இல்லத்தை நோக்கி கொல்லப்பட்ட பொலிஸ் கொமாண்டரின் ஆதரவு இனகுழுவினர் ஆர்ப்பாட்ட பேரணியாக திரண்டு வந்து கல்வீச்சு நடாத்தி அவரது வீட்டிற்கு தீ மூட்டியுள்ளனர். கொமாண்டரின் மரணத்திற்கு இவர் தான் காரணமாக இருந்துள்ளார் என்பது அவர்களது வாதம். 

2001- ல் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் வகை தொகையின்றி சிறிய ரக ஆயுதங்களை லிபிய கடாபி அரசு எதிர்ப்பு தரப்பினரிற்கு அள்ளி வழங்கினர். அவர்களது நோக்கமெல்லாம் கடாபியை வீழ்த்துவது. இப்போது அந்த ஆயுதங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு லிபியா முழுவதும் பரந்துள்ளது. லிபிய போராட்டங்களின் போது உடைக்கப்பட்ட லிபிய இராணுவ களஞ்சியங்களில் இருந்து கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை ரைபிள்களும் இவர்கள் வசம் உள்ளன. கடாபியின் ஆட்சியின் போது ஒரு துப்பாக்கு ரவையாவது வெடிக்காத போது, இன்றைய அமெரிக்க கைப்பொம்மை ஆட்சியில் ஒவ்வொருவரும் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். பிறந்த தினம், மரண தினம், திருமணம் எல்லாவற்றிற்கும் வானை நோக்கி தங்கள் கலஷ்நிகோவ்களை உயர்த்தி சுடுகின்றனர். தேவையேற்பட்டால் அதனை பணித்து அரசை நோக்கியும் சுடுகின்றனர். 

மேற்குலகும் அமெரிக்காவும் லிபியாவில் எதனை சாதித்துள்ளன என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரு பிசாசை விரட்ட நூறு பேய்களை கொண்டு வந்து விட்ட கதையாகவே லிபியாவின் நிலை மாறியுள்ளது. கூலிப்படையினரிற்கும், மாபியாக்களிற்கும், பாதாள உலக கும்பல்களிற்கும் “சுதந்திர போராளிகள்” என்ற பட்டத்தை வழங்கி அவர்களிற்கான ஆயுத பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியது இந்த அமெரிக்காவே. 

அமெரிக்க பாடசாலையிலோ அல்லது சுப்பர் மார்க்கெட்டிலோ ஒரு ஆயுததாரி சடுதியாக நுழைந்து சரமாரியாக சுட்டு தீர்ப்பதன் ஊடாக 10 பேரோ அல்லது 30 பேரோ செத்து போய்விட்டால் அமெரிக்கா அலறுகிறது. அதன் மீடியாக்கள் அலறுகின்றன. “ஆயுத கலாச்சாரம் பற்றியும் அதன் பயன்பாடுகள்” பற்றியும் செனட் விவாதிக்கிறது. அப்பாவிகளின் இறப்பிற்காய் அதன் அரசியல் தலைவர்கள் அழுகின்றனர். அதை தடுப்பதற்கான அனைத்து முனை செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடுகின்றனர். எதற்காக? சில அமெரிக்க உயிர்கள் இடைக்கிடை அழிவதை தடுப்பதற்கான. 

அனால் இதே அமெரிக்கா தான் ஈராக்கில், லிபியாவில் என ஆயுத குழுக்களை உருவாக்கி தெருச்சண்டியர்களிடமெல்லாம் கைகளில் ஆயுதங்களை வழங்கி அவர்களை சுதந்திர போராளிகள் என்று நாமகரணம் செய்தது. இதனால் இந்நாடுகளில் தினமும் 50 பேர் மரணிக்கின்றனர். மரணிப்பவர்களில் கணிசமானவர்கள் அப்பாவி பொதுமக்கள். இவர்களின் மரணம் பற்றி அமெரிக்கா அக்கறை கொள்கிறதா?!!. இல்லவேயில்லை. மாறாக இன்னும் பல தேசங்களில் மீண்டும் மீண்டும் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கான கொலைக்களங்களை அதன் உளவமைப்புக்கள் திறந்து விடுகின்றன. காலனித்துவ ஏகாதிபத்திய நலன்களிற்காக கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 

இந்த சுழற்றிசியின் ஒரு நிகழ்வே லிபியாவின் பெங்காஸி நகர பொலிஸ் கொமாண்டரின் கொலலையும் கூட

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரியாவின் உளவுத்துறை தளபதி ஜெனரல் Jama'a Jama'a சினைப்பர் தாக்குதலில் பலி !!

ஜெனரல் ஜமா ஜமா. சிரிய இராணுவத்தின் உளவு பிரிவிற்கு பொருப்பாகவிருந்தவர். சிரியாவின் உள்நாட்டு படுகொலைகள் முதல் சிரிய போராளிகளின் படுகொலைகள் வரை பல்லாயிரக்கணக்கான மனித கொலைகளிற்கும் சித்திரவதைகளிற்கும் பொருப்புதாரி. சிரிய இராணுவத்தில் மிக முக்கியமானவரும் அதிகபட்ச அதிகாரங்களை கொண்டவருமாக விளங்கினார் ஜெனரல் ஜமா ஜமா. அதிபர் பஸர் அல்-அஸாதின் பல கட்டளைகளை நிறுத்தும் அளவிற்கும், தாமதப்படுத்தும் அளவிற்கும் இவர் சிரிய அரசில் தாக்கம் செலுத்துபவராக இருந்தவர். பஸர் அல்-அஸாதின் தந்தையும் முன்னாள் சிரிய சர்வாதிகாரியுமான ஹபீஸ் அல்-அஸாதின் நம்பிக்கை மிகு தளபதியாகவும் இவர் விளங்கியவர். லெபனானில் வைத்து சிரியா நடாத்திய பல தாக்குதல்கள் பெனிட்ரேசன்களிற்கு கட்டளையிட்டவரும் இவரே. 2005-ல் லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரியின் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியும் இந்த ஜமா ஜமா தான். 


நேற்றைய தினம் சிரியாவின் கிழக்கு மாகாணமான Deir al-Zo-ல் நடாத்தப்பட்ட சினைப்பர் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது மரணம் சிரிய விடுதலை போராட்டத்தில் ஒரு மைல்கல் என “ஆயிஷா பின்த் அல்-ஸித்திக்கா பிரிகேட்டின்” தளபதி கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சுதந்திர சிரியனும் இவரது மரணத்தை கொண்டாடுவான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச மனித உரிமைகள்சார் அமைப்புக்கள் இவர் மீது பல மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன என்றும் இவர் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உரித்துடைய ஒரு நபர் என்றும் கருத்து வெளியிட்டுள்ளன. 

நான்கு தசாப்த அஸாதிய குடுப்ப ஆட்சியின் நிலைப்பிற்காக சுமார் 100,000 பேர் பலியாக்கப்பட்டிருப்பது சிரியாவின் பெரிய சோகமாகும். இதில் கணிசமான பங்கு இந்த ஜெனரல் ஜமா ஜமாவிற்கு உண்டு. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

ஹோம்ஸை அதிரவைக்கும் இன்னொரு அணி !!


ஷ்ய அரசு பஸர் அல்-அஸாதின் சிரிய இராணுவ அரசிற்கு அரசியல் ரீதியான ஆதரவை மட்டும் நல்கவில்லை. ஆயுத தளவாட உதவிகள், வெடிபொருட்கள்,  போரியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், சிக்னல் தொழில்நுட்ப உதவிகள் என பல தரப்பட்ட உதவிகளை வழங்கி வருகிறது. போதாக்குறைக்கு ரஷ்ய இராணுவ வீரர்களையும் சில களமுனைகளிற்கு சிரிய இராணுவ சீருடையில் நகர்த்தியுள்ளது. சிரிய படையினருடன் தோளோடு தோள் சேர்ந்து ரஷ்ய தாக்குதல் அணியினரும் சண்டையிட்டு வருகின்றனர். 



ஹோம்ஸ் மாகாணத்தின் புறநகர் பகுதிகளிலும் குறிப்பாக Sakhnah பகுதியில் சிரிய சமர்க்களத்தில் சண்டையிடும் அணியான ஜெய்ஸுல் இஸ்லாம் குழுவினர் சிரிய வாகன தொடரணியை வழிமறித்து தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் பல ரஷ்ய படையினரும் பலியாகியுள்ளனர். இதில் 03 அதிகாரிகள் காயங்களிற்கு உட்பட்டுமுள்ளனர். 

Jaisyul இஸ்லாமி அணியினர் ஹோம்ஸினை தளமாக கொண்டு பல தாக்குதல்களை தொடராக முன்னெடுத்து வருகின்றனர். சிரிய அரசு படைகளுடன் கடந்த தினங்களில் நடைபெற்ற சண்டைகளில் இரு தரப்பிலும் பாரிய உயிர்ச்தேதங்கள் ஏற்பட்டிருந்தன. “இன்லேன்ட் லிபரேஷன் வோர்” என்றே ஜய்ஸுல் இஸ்லாமி அணியினர் தங்கள் நடவடிக்கைகளை பெயர் குறிப்பிடுகின்றனர். ஹிஸ்புல்லாக்களை போல அதி நவீன தொடர்பாடல் வசதிகள், நவீனரக ஆயுதங்கள் சகிதம் இவர்கள் களமிறங்கியுள்ளனர். பல பயிற்றப்பட்ட போராளிகள் இவர்கள் அணியில் இருப்பது விஷேட அம்சமாகும். செச்னிய போராளிகள் பலரும் இந்த அமைப்பில் இணைந்து போராடுகின்றனர். ஜபாஃ அல் நுஸ்ராவின் ஒரு கிளை அமைப்பாகவே இதுவரை இவர்கள் கணிப்பிடப்பட்டுள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

“குவாண்டனாமோ நோக்கிய பயணத்தில் அபூ அனஸ் அல் லிப்பி” - நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்!!

பூ அனஸ் அல் லிப்பி-யை கடந்த சில தினங்களிற்கு முன்னர் அமெரிக்க சிறப்பு படையினர் லிபியாவில் வைத்து கைது செய்திருந்தனர். அல் காயிதா அமைப்பின் நெருங்கிய செயற்பாடடாளராகவும் இரண்டாம் கட்ட தலைமைகளில் ஒருவராகவும் லிபியாவின் அல்-காயிதா கட்டளை தளபதியாகவும் இவர் இருந்துள்ளதாக மேற்கின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் உலகலாவிய முஸ்லிம் போராளிகளினதும் அவர்களினது ஆதரவு தளங்களும் அபூ அனஸ் அல் லிப்பி ஈராக்கின் முஸ்அப் அல் ஸர்க்கவி போன்ற ஒரு தீவிர இராணுவ செயற்பாட்டாளரோ அல்லது தலைவரோ அல்லவெனவும், காயிதாவின் செயற்பாடுகளை அரசியல் ரீதியாக நியாயப்படுத்தும் ஒரு செயற்பாட்டாளர் மட்டுமே என்று செய்தி வெளியிட்டிருந்தன. லிபியாவின்  அல்-காயிதா மற்றும் அதன் தோழமை அமைப்புக்களின் இயக்குனராகவும் இருந்தார் என்றும் தெரிவித்திருந்தன. 



நேற்றைய தினம் (( 15/10/2013 )) நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்ட்டார். கறுப்பு ஸ்வெட்டரும் சாம்பல் ட்றவ்சரும் அணிந்த நிலையில் அவர் தனது நீதி விசாணையை எதிர் கொண்டுள்ளார். நீதிபதி லெவிஸ் கப்லான் இவர் மீதான குற்றச்சாட்டுக்களை வரிசையாக வாசித்துள்ளார் கிழக்காபிரிக்க நாடுகளான தன்சானியாவிலும், கென்யாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாகவே இவர் மீது அமெரிக்க சட்ட திணைக்களும் வழக்கு தொடர்ந்திருந்தது. 

ஓகஸ்ட் 07-1998ல் கென்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 213 பேர் இறந்தனர். 5000 பேரளவில் காயமடைந்தனர். அதே நேரத்தில் தன்சானியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டு தாக்குதலில் 11 பேர் இறந்தனர். 70 பேர் காயமடைந்தனர். இதில் அபூ அனஸ் அல் லிப்பி நேரடியாக சம்மந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை. நிதிபதி கப்லான் வழக்கை வரும் ஒக்டோபர் 22இற்கு ஒத்திவைத்துள்ளார். இந்த தகவலை ஏ.எப்.பி. வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க எப்.பீ.ஐ.-யினால் அபூ அனஸ் அல் லிப்பி பற்றி தகவல் தருபவர்களிற்கு 05 மில்லியன் அமெரிக்க டொல்ர்களை சன்மானமாக தருவதாக அறிவித்திருந்தது. அதன் மோஸ்ட் வோன்டட் பட்டியலில் இவரும் உள்ளடங்கியிருந்தார். 

அதிபர் ஒபாமா லிப்பிக்கு கிழக்காபிரிக்க தாக்குதல்களுடன் நேரடி தொடர்பிருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உண்டெனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அல்-லிப்பியின் கைது நிறைய உதவும் என நம்புகிறார் அமெரிக்க அதிபர் போலும்....

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பாரதீய ஜல்சா கட்சி ஏற்பாடு செய்த நிர்வாண நடனம்............

பாரதிய ஜல்சா  கட்சியினரின் தேச பக்தி சேவை; பெண்ணை நிர்வாணமாக ஆடவிட்டு பாஜக பெண் நிர்வாகிகளுடன் கண்டு ரசித்த அசிங்கம்.....


கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்த நிர்வாண நடனம்!!! பாரதிய ஜல்சா  கட்சியின் பிதார் மாவட்ட செயலாளர், பாபுவால் உள்ளிட்டோர் நடனத்தை கண்டு ரசிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. நடனம் ஆடிய அந்த பெண், விருந்து நிகழ்ச்சிக்காக மகாராஷ்ட்டிராவில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நடனத்தை பெண்களும் பார்த்து ரசித்த கொடுமை அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. பெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்த பாரதிய ஜல்சா நிர்வாகி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இஸ்ரேலிய பாதுகாப்பு படை மீண்டும் பலஸ்தீன குழந்தைகள் மீது குறிவைக்க ஆரம்பித்துள்ளன...!

Israeli border policemen detain a Palestinian boy in the east Jerusalem Shuafat refugee camp. (AFP Photo / Jonathan Nackstrand)
ஸ்ரேல் மேற்குகரையில் மீண்டும் பலஸ்தீன சிறுவர்களை இலக்கு வைத்து தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலிய அரசு எதிர்ப்பு போராட்டங்களிலும், வாராந்த ஜும்மாவிற்கு பின்னரான அல்-குத்ஸ் மீட்பு எதிர்ப்பார்பாட்டங்களிலும் கலந்து கொள்ளும் சிறவர்களை குறியாக கொண்டு யூத இராணுவம் தனது செயற்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த தகவலை இப்போது சர்வதேச அமைப்பான யுனிசெப் United Nations Children Fund (UNICEF) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்படும் சிறுவர்கள சி்த்திரவதை செய்தல், உள உடல் ரீதியாக அவர்களை முடமாக்குதல் போன்ற சர்வதேச விதி முறைகளிற்கு அப்பால் இஸ்ரேலிய அரசு செயற்படுகிறன்றது. 

யுனிசெப் வெளியிட்டுள்ள இந்த ரிப்போட்டுடன் சேர்த்து அது 38 ஆலோசணைகளையும் முன்வைத்துள்ளது. சர்வதேசத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து தாக்குதல், கைது, சித்திரவதை நடாத்தும் சக்திகளிற்கு எதிரான திட்டங்கள் அந்த ஆலோசணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

சிறுவர்களை கைது செய்யும் போது அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இஸ்ரேலிய அரசிற்கும் அதன் இராணுவத்திற்கும் எதிராக தாக்குதல்கள், புரட்சிகள் ஏற்பட உழைத்ததாகவுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. 

வகை தொகையற்ற சிறுவர்கள் தடுப்பு முகாம்களில் வைத்து நீண்டகாலம் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் முகமாக சிவில் நீதிமன்றங்களிற்கு பதிலாக மிலிட்டரி நீதி மன்றங்களின் பாணியில், 12-13 வரையான சிறுவர்களை 24 மணித்தியாலத்திலும், 14-15 வயது சிறுவர்களை 48 மணிநேரத்தினுலும், 16-18 வயது வரையிலான சிறுவர்களை 72 மணிநேரத்தினுள்ளும் கோர்ட்டில் ஆஜார் செய்யப்பட்டு அவர்களது குற்றங்கள் விசாரிக்கப்ட்டு தண்டனை அல்லது விடுதலை வழங்கப்படல் வேண்டும் என அந்த யு.என். அறிக்கை குறிப்பிடுகிறது. 

காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் முதலில் குறிவைப்பது குழந்தைகளையே. அவர்களின் தலைகளை நோக்கிய இஸ்ரேலிய ரைபிள்கள் முழங்குவது வழமை. ஒரு பலஸ்தீன் குழந்தை நாளைய ஹமாஸின் போராளி என்பதே ஸியோனிஸ்ட்களின் பார்வை. அதனால் குழந்தைகளை கொல்வதன் ஊடாக எதிர்கால போராளிகளின் உருவாக்கத்தை தடுக்கலாம் என ஸியோனிஸ்ட்கள் நம்புகின்றனர். 

இந்த வேலைத்திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது அண்மைய பலஸ்தீன சுகாதார திணைக்களம் விடுத்த “குழந்தைகளின் பிறப்பு விகித அதிகரிப்பு” பற்றிய அறிக்கையாகும். அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு ஆட்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்ரேலிய அரசிற்கு எதிரான ஒரு அறிக்கையை வெளியிட்டமை புதுமையானதே. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரியாவில் யுத்தம் புரிந்த ஆட்களை ஓசைப் படாமல் வெளியேற்றுகிறது ஹிஸ்புல்லா!

சிரியாவில் அரசு ராணுவம், போராளிப் படைகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் இடையே உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, ஓசைப்படாமல் ஒரு காரியமும் நடக்கிறது.


அது என்னவென்றால், லெபனானை தளமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம், சிரியாவில் யுத்தம் புரியும் தமது ஆட்களை சிறிது சிறிதாக சிரியாவை விட்டு வெளியேற்ற தொடங்கியுள்ளது என உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த ஹிஸ்புல்லா ஆட்கள் ஆயிரக் கணக்கில் சிரியாவுக்குள் கொண்டுபோய் இறக்கப்பட்டதையும், அவர்கள் அரசு ராணுவத்துக்கு ஆதரவாக யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும், ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதியிருந்தோம். இதுவரை ஆக்டிவ் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இவர்கள்தான், சிரியா யுத்த களத்தைவிட்டு, சிறிது சிறிதாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை லெபனானில் இருந்து சிரியாவுக்குள் ஆயுதங்களுடன் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்த ஹிஸ்புல்லா ஆட்களின் எண்ணிக்கை சுமார் 5,000 இருக்கலாம் என கணிக்கப்பட்டது. அது, குறைந்தபட்ச எண்ணிக்கை. நிஜ எண்ணிக்கை அதைவிட சற்று அதிகமாக இருக்கலாம்.
சிரியாவின் எல்லைப் பகுதிகளில் ராணுவம் யுத்தம் புரியும்போது, ஹிஸ்பொல்லா ஆட்கள், தெளிவாக வேறு சீருடையில், மேலதிக படைப் பிரிவுகளாக நின்று யுத்தம் புரிந்தது அவதானிக்கப்பட்டது (அதையடுத்தே, ஹிஸ்புல்லா ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்டது)

கடந்த வார இறுதியில் நடந்த யுத்தங்களில் இவர்கள் பெரியளவில் தென்படவில்லை.

அதன் பின்னரே, உளவுத்துறை அறிக்கைகள் சப்மிட் செய்யப்பட்டன. சில மேலை நாட்டு உளவுத்துறைகளின் கணிப்பின்படி, சிரியாவில் இருந்து சுமார் 1,500 பேரை ஆயுதங்களுடன் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது ஹிஸ்புல்லா தலைமை.

இன்னமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை வழியாக, கடந்த சில தினங்களாக இரவில் டாங்கிகள்கூட வெளியேறின என்பது, சாட்டலைப் போட்டோக்களில் பதிவாகியுள்ளது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல், ஓசைப்படாமல் நடக்கிறது, இந்த படை நகர்வு.

உளவு வட்டாரத் தகவல்களின்படி, குறைந்தபட்சம் இன்னமும் 3,500 பேர் தமது ஆயுதங்களுடன், சிரியாவில் இருந்து லெபனான் செய்த தயாராகிறார்கள்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

காசாவில் இருந்து 2.5 கி.மீ. நீளமான சுரங்க பாதையை கண்டுபிடித்தது இஸ்ரேலிய ராணுவம்!

காசா பகுதியில் 2.5 கி.மீ. நீளமான சுரங்கப்பாதை ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சுரங்கப்பாதை வழியாக வெடிகுண்டுகள் இஸ்ரேலுக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும், பாலஸ்தீனி இயக்கங்கள் உளவுபார்த்தலுக்கு இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்கலாம் எனவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


காசா பகுதியில் கான் யுனிஸ் நகரில் ஆரம்பிக்கும் இந்த சுரங்கப்பாதை, இஸ்ரேலின் கிபுட்ஸ் அய்ன் ஹஷ்லோஷா என்ற இடத்தில் முடிவடைகிறது. சுரங்கப்பாதையின் நடுவே, சிலசில இடங்களில் மறைவாக துவாரங்கள் விடப்பட்டுள்ளன. இந்த இடங்கள், இஸ்ரேலிய எல்லைக்குள் உள்ளன.

இஸ்ரேலுக்குள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு முன் அப் பகுதியை உளவு பார்க்க இந்த துவாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நேற்று மாலை இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல், காசா பகுதிக்குள் சிமென்ட், இரும்புக் கம்பிகள் உட்பட கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான பர்மிட்டுகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது இஸ்ரேல்.


மறு அறிவித்தல் வரும்வரை, காசா பகுதிக்குள் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

'குப்ரியப் பொறியை விதியாக்குவதா முஸ்லீம் உம்மத்தின் முடிவு !?


(  அமெரிக்கா எகிப்திற்கு இராணுவ உதவிகளை அளித்து வருவதை நிறுத்தப் போவதில்லை என ,அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் 'கெயிட்லின் ஹைடன் ' அண்மையில் தெரிவித்துள்ளார் .இந்த தகவலை வைத்து ,எகிப்தின் கடந்தகால ,நிகழ்கால அரசியலை ஒரு புரிதலுக்கு கொண்டுவரும் நோக்கில் பதியப்பட்டதே கீழ்வரும் பதிவாகும் .) 
       சமூக மற்றம் என்பது  ஒரு சித்தாந்த மாற்றமாகும் .ஒரு சமூகம் தனது வாழ்வு ,நாகரீகம் ,கலாச்சாரம் என்பவற்றில் ஒரு தலைகீழ் மாற்றத்தை வேண்டி நிற்பதே உண்மையான சமூக மாற்றமாக கருதப்பட முடியும் .

         வாழ்வியல் ,நாகரீகம் ,கலாச்சாரம் என்பன நிச்சயமாக ஒரு சித்தாந்த வழி நின்றும் ,அதன் முறைமைகளில் இருந்தும் தோன்றக்கூடியதே .அந்தவகையில் உண்மையான சமூகமாற்றம் என்பது தெளிவாகவே ஒரு சித்தாந்த மாற்றத்தில் இருந்து மட்டுமே தோற்றம் பெற முடியும் .
          அது அல்லாமல் ஒரு சமூகம் தான் அனுபவிக்கும் ஒரு சித்தாந்த முறைமைகளில் இருந்து ,அதன் வாழ்வியல் பார்வைகளில் இருந்து, அதன் நாகரீக ,கலாச்சார கோணங்களில் இருந்து தனது தேவைப்பாடுகளையும் , மாற்றீடுகளையும் வேண்டி நிற்பது சமூக மாற்றமாகாது .மேலும் இந்த பாதை வெறும் சராசரி உரிமைப் போராட்டமாகவே கருதப்பட வேண்டும் . 
       இந்தப் புரிதலோடும் ,இஸ்லாம் தனக்கென பிரத்தியோகமான முறைமைகளையும் ,வாழ்வியலையும் ,நாகரீகத்தையும் , கலாச்சாரத்தையும் கொண்ட  உறுதியான சித்தாந்தம் என்ற வகையிலும் ,இன்றைய முஸ்லீம் உம்மத்தின் நிகழ்கால போராட்டப் பாதை உன்னிப்பாக அவதானிக்கப் படவேண்டும் .
                      (அப்படிப் புரிந்து கொண்டால் வெறும் சராசரி உரிமைப் போராட்டத்தை ,ஒரு தூய இலட்சியவாத போராட்டமாக கருதும் மனோபாவத்தில் இருந்து ,முஸ்லீம் உம்மத்தால் விடுபட முடியும் .அத்தோடு இஸ்லாம் எனும் தூய சித்தாந்தத்தை நிறுவும் ஸுன்னாவின் அடிப்படையிலான பாதையை தேடித் தெரியும் உண்மையான இலட்சியப் பாதையை நோக்கி அவனை நகர்த்தவும் கூடும்  .)
               பொதுவாகவே உரிமை தொடர்பான போராட்டப்பாதை திறக்கப்படுவது மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் , சுய அடையாளம் என்பன மறுக்கப்படும் நிலையில் ,அல்லது புறக்கணிக்கப் படும் நிலையிலேயே ஏற்படும் .அத்தோடு குறித்த சூழ்நிலையின் ஆளும் சித்தாந்தம் இது தொடர்பில் சமரச வழிமுறை ஒன்றை ,அல்லது மாற்றீட்டுக்கான சில காரணிகளை வழங்கி நிற்கும் நிலையில் அந்தப் போராட்டப் பாதை இடைநிறுத்தப் படும் .அல்லது குறித்த சூழ்நிலை அதன் இலட்சிய அடைவுப் புள்ளியாக கருதப்பட்டு விடும் .
            மக்களின் பொது  இயல்பு சித்தாந்தங்களையும் ,அதன் முறைமைகளையும் பற்றி அலட்டிக் கொள்வதில்லை , அதில் தங்கி நிற்பதுமில்லை மாறாக அடிப்படைத் தேவை என்ற குறுகிய வட்டத்தில் இருந்தே சிந்திக்கும் .இங்கு குறைந்த பட்சமாக அதற்கான விநியோகங்கள் இடம்பெறுமிடத்து சித்தாந்த அதிகாரத்தின் வடிவம் பற்றி அதன் தரம் பற்றி அது சிந்திக்காது ,அலட்டிக் கொள்ளாது .
           இந்தப் பொது விதியில் இருந்தே முதலாளித்துவ சித்தாந்தம் தனது நடத்தைகளை தீர்மானிக்கிறது .இயல்பினில் மனிதன் ,நான் ,எனக்கு ,எனது என்ற கருத்தியலோடு எல்லைமீறிய விருப்பு வெறுப்போடு , ஆதிக்க உணர்வோடு மட்டுப் படுத்தப் பட்ட குணகம் கொண்டவன் .
            இங்கு தனக்கான வழிகாட்டல் மற்றும் உலகம் தொடர்பான பார்வையிலும் நான் ,எனது ,எனக்கு என்ற பண்புகளே முற்றாக ஆதிக்கம் செலுத்தும் . இந்த நிலையையே இஸ்லாம் (ஜாஹிலீயா ) அறியாமை என்கிறது .
         இந்தப் போக்கின் கட்டமைக்கப்பட்ட அதிகார வடிவமே முதலாளித்துவ சித்தாந்தமாகும் . எனவே அதன் முறைமைகளிலும் , வாழ்வியலிலும் , நாகரீகத்திலும் ,கலாச்சாரத்திலும் இத்தகு பண்புகள் பிரதிபளிப்பதை தவிர்க்க முடியாது .மனித சமூகம் இதனோடு இணைந்து செல்வதும் இயல்பானதே .
              இயல்பான இந்த பண்புக்கூரின் வடிவமே இன ,மத , நிற ,வர்க்க ,குல ,கோத்திர பண்புகளை கொண்டதும் ,இந்த ஒவ்வொரு அலகுகளும் தமக்கென பிரத்தியோகமான தலைமையையும் ,ஆதிக்க எல்லையையும் கொண்டு வாழத் தலைப்படுவதாகும் . உச்ச நுகர்ச்சி ,உச்ச இலாபம் என்ற இந்த சந்தையுணர்வு குழப்பங்களினதும் சர்ச்சைகளினதும் அடிப்படையாக மாறி விடுகின்றது .
          இந்த இயல்புத்தன்மையின் மத்தியில் சமரச பேரத்தின் மூலமும் ,உலகியல் இலாபக் கோட்பாட்டின் அடிப்படையிலும் இத்தகு சமூகங்களை ஒன்றுபடுத்தி ,பயன்படுத்தி தனது அதிகார ஆதிக்க நிலையை தக்க வைக்கும் அரசியலையே முதலாளித்துவம் செய்கிறது .உலகியல் இலாபக் கோட்பாட்டை முதல் நிலை படுத்தும் போது பக்கச்சார்பு இங்கு பிரதானமாகி விடுகிறது .
           இந்த சுயநல அரசியல் வடிவம் இன ,மத ,மொழி ,சாதி ,கோத்திரம் , நிறம் போன்ற பண்புகளை சார்ந்து நிற்கின்ற அடிப்படையில் பெரும்பான்மை என்ற கோட்பாடு வலுப்பெற 'ஜனநாயகம் ' என்ற பெயரளவுப் பெறுமான கட்டமைப்பு வடிவம் போலியாக அங்கு காட்டப்படும் .அல்லது தனித்தலைமை முடியாட்சி அங்கு இயல்பாகிவிடும் . இதன் உச்சக் கட்டமாய் கூட்டுச் சர்வாதிகாரம் அல்லது தனிநபர் சர்வாதிகாரம் என்ற வடிவத்தை பெற்றுவிடும் .
             மேலும் 'செக்கியூலரிசம் 'என்ற இதன் பிரதான  முறைமை வேற்றுத் தலையீடுகளை அரசு என்ற அதிகாரக் கருவியின் பக்கம் நெருங்க விடாத பொறிமுறையாக பயன்படும்.ஆனாலும் சுயநலம் மிக்க இந்த சித்தாந்த அடிப்படை எதிர்மறையாக மதம் ,சாதி , நிறம் ,கோத்திரம் போன்ற அம்சங்களையும் சிலபோது அதிகார இயக்கு கருவியாக்கும் .பச்சோந்தித் தனமாக இராணுவ சர்வாதிகாரத்தையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் .
          இந்த விளக்கத்தின் அடிப்படையில் முஸ்லீம் உம்மத் மிக நிதானமாக தனது நிலை ,பணி பற்றி சிந்திக்க தலைப்பட வேண்டும் .தவிர்க்க முடியாமல் இத்தகு சுயநல அடிப்படையில் முஸ்லீம் உம்மத் சிந்திக்க புறப்பட்டதே அதன் சிந்தனை வீழ்ச்சியின் உச்சம் எனலாம் .
          இந்த சிந்தனை வீழ்ச்சியின் காரணமாகவே அதன் தனிப்பெரும் அடையாளமான இஸ்லாமிய சித்தாந்தத்தின் அதிகார ஆதிக்க தரத்தை இழந்துள்ளதுமாகும் .முரண்பாடான ஒரு வாழ்வியலை முற்றாக விழுங்கவும் முடியாத ,முற்றாக துப்பவும் முடியாத நிலையில் இன்று அனுபவிக்கும் சகல அவல நிலைக்கும் அடிப்படை காரணமுமாகும் .
             சூழ்நிலையை மாற்ற முடியாது என்ற பார்வையும்  ,முதலாளித்துவத்தை மிகைக்க முடியாது என்ற தவறான பார்வையும் ,அதனை திருப்திப் படுத்துவதன் மூலமான சமரச மாற்றீடுகளை முன் வைப்பதன் ஊடாக இஸ்லாமிய அடையாளங்களில் எஞ்சியுள்ளதை பாதுகாப்போம் !என்றும், பின்னர் படிமுறை ரீதியாக இஸ்லாமிய மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற பலவீனமான பார்வையும் நிலைமையை உணர்ந்தவர்களிடம் வந்துள்ளதும் முதலாளித்துவம் கொடுத்த சமரச பண்பே ஆகும் .
                முஸ்லிமைப் பொறுத்தவரை 'மின்னலுக்கு பயந்து இரும்புக் கூட்டில் ஒழிதல்' என்ற தவறான  தீர்மானமே இதுவாகும் .'குப்ரை ' அங்கீகரித்தல் என்ற மகா தவறில் இருந்து தோன்றும் இத்தகு அரசியலே இஸ்லாமிய 'ஜனநாயக வாதமாகும் ' இது 'குப்பார்களின் ' வழிமுறை மட்டுமல்ல அவனது ஆதிக்க பொறிமுறை என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய எகிப்து ஒரு சிறந்த பாடமாகும் .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: