Facebook Twitter RSS

மேற்கினது முகவரான மனித உரிமைகள் அமைப்பினது இரட்டை வேடங்கள்

 இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதே அவர்களது இலக்கு! (ஒரு முக நூல் பதிவில் இருந்து ..)


இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இஸ்லாத்திற்கு எதிரான விஷமப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடும் போக்கை நாம் சர்வ சாதாரணமாக காணலாம்.

     முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பெயர்சூட்டுவது அவர்களுக்கு கைவந்த கலை. கற்காலத்தை நோக்கி நகர்த்தும் மார்க்கம் இஸ்லாம் என்றும் காட்டுமிராண்டித்தனமான சரீஆ சட்டத்தை கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்றும் தமது மீடியாக்களைப் பயன்படுத்தி கீழைத்தேய வாதிகளால் பல்வேறு விதமான இஸ்லாமிய விரோத நச்சுக்கருத்துக்களை விதைக்கும் சிந்தனைப் படையெடுப்பை நாம் நாளாந்தம் எமது ஊடகங்களில் பார்க்கலாம்.

  மனித உரிமைக்காக உலகமெல்லாம் குரல்கொடுப்பார்கள். முஸ்லிம்களது விடயத்தில் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களது பார்வையில் முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள். கரப்பொத்தான் பூச்சிகள்.

    பெண்ணியம் கதைக்கும் முஸ்லிம் பெண்களை உருவாக்கி அவர்களை இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைக்க பாடுபடுவார்கள்.

    முஸ்லிம் பெண்களது கல்வி உரிமை மீறப்படுவதாக நாடகங்களை அரங்கேற்றம் செய்வதற்கு மலாலா போன்ற பெண் விடுதலை போராளிகளை புரோமோட் பண்ணி இஸ்லாத்திற் கல்வி கற்கும் உரிமை மீறப்படுவதாக கொக்கரிப்பார்கள்.

   Dr. ஆபியா சித்தீக்கா போன்ற கல்விமான்கள் இஸ்லாத்திற்காக குரல்கொடுத்தால் அவர்களை போன்ற பெண்களை பிடித்து சிறையிலிட்டு கற்பழித்து பெண்ணுரிமையை பாதுகாப்பார்கள். இதுதான் இன்று மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம் உலகினை நடாத்தும் விதம்.

   எனவே இஸ்லாம் எழுச்சி பெறக்கூடாது என்பதற்கான அவர்கள் முன்னெடுக்கும் சிந்தனைப் படையெடுப்பின் ஒரு கைபொம்மையாக கருவியாக மலாலா நாடகம் உலகில் அரங்கேற்றப்பட்டு இஸ்லாத்திற்கு சேறு பூச நினைக்கிறது மேற்குலகும் அதன் முகவர்களும் என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: