இஸ்ரேலியப் பிரதமரின் புழுகு மூட்டை விசாரணைக்கு உட்படுத்து மாறு ஈரான்
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரே பொய்யை பல வருடங்களாக கூறி வருகிறார் என்றும் இது குறித்து கேள்வி எழுப்ப சர்வதேச சமூகம் கடமைப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜவாத் ஷாரிஃப் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த ஷாரிஃப் கூறியது: ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் கடந்த 22 ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
ஆனால், பொய் கூறி உலகத்தை ஏமாற்றி அச்சுறுத்தி வரும் இஸ்ரேலிடம் உலக நாடுகள் விளக்கம் கேட்க வேண்டும் என்று ஷாரிஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், பொய் கூறி உலகத்தை ஏமாற்றி அச்சுறுத்தி வரும் இஸ்ரேலிடம் உலக நாடுகள் விளக்கம் கேட்க வேண்டும் என்று ஷாரிஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நெதன்யாகுவின் நேற்றைய உரைக்கு முன்பாக ஷாரிஃபின் அறிக்கை வெளியானது. கடந்த ஆண்டு ஐ.நா.வில் ஆற்றிய உரையிலும், ஈரான் 6 மாதத்திற்குள் அணு குண்டை தயாரிக்கப் போவதாக நெதன்யாகு புழுகியிருதார்.
0 comments: