காஸாவை தாக்க எகிப்து இராணுவ நிர்வாகம் திட்டம் !
சினாய் தீபகற்பத்தில் எகிப்து இராணுவத்தின் மீதான தாக்குதல் தொடரும் பட்சத்தில் பலஸ்தீனின் காஸா பகுதி மீது இராணுவ தலையீட்டை மேற்கொள்ள எகிப்து இராணுவம் திட்டமிட்டுள்ளது.என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஹமாஸ் ஆளுகைக்கு உட்பட்ட காஸாவில் தாக்குதல்களை முன்னெடுக்கும் இலக்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக எகிப்து இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது எகிப்து- காஸா எல்லையில் ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களையும் இலக்குவைத்து வான் தாக்குதல் நடத்த எகிப்து திட்டமிட்டுள்ளது. எகிப்தின் காஸா எல்லையான சினாய் தீபகற்பத்தில் தொடரும் தாக்குதல்களின் பின்னணியில் காஸா ஆயுதக் குழுக்களுக்கு தொடர்பு இருப்பதாக எகிப்து இராணுவமும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன .
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ,அடக்குமுறைக்கு திட்டங்களுக்கு மிகப் பெரும் சவாலாக காஸா மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களாம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக இராணுவ சதிப் புரட்சியை மேற்கொண்ட இராணுவத் தளபதி சிஸி ஒரு யூத சியோனிச பின்னணிகளை கொண்டவர் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.
அதேவேளை காஸாவிலிருந்து ஹஜ் கடமைக்காக சென்ற 100க்கும் அதிகமான பலஸ்தீனர்களை எகிப்திலிருந்து இராணுவ நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது சவூதி செல்வதற்காக காசாவிலிருந்து ரபா வாயிலூடாக எகிப்தை சென்றடைந்தவர்களே மீண்டும் காஸாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன
0 comments: