Facebook Twitter RSS

ஈரானின் சைபர் உளவுத்துறை கமாண்டர் மர்மமான முறையில் சுட்டுக் கொலை! - கொலையின் பின்னணியில் “மொஸாட்” ??


ரானின் சைபர் உளவுத்துறை கமாண்டர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த காலங்களில், ஈரானிய அணு விஞ்ஞானிகள் சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக, சைபர் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளார்களோ என்ற சந்தேகம், அங்கு ஏற்பட்டுள்ளது.


ஈரானிய சைபர் உளவுத்துறையின் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் கமாண்டர் மஜ்டாபா அஹ்மதியின் உடல், இரு துப்பாக்கிக் குண்டுகள் மார்பில் பாய்ந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே கராஸ் என்ற இடத்தில் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் இவரது உடல் காணப்பட்டது.

இவர் கடைசியாக தமது அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை பணிபுரிந்துள்ளார். அதன்பின் மாயமாக மறைந்து விட்டதாக தெரிகிறது.
கமாண்டர் மஜ்டாபா அஹ்மதியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சோலை பகுதியில் இரு மோட்டார் பைக்குகள் வந்து சென்றதற்கான தடங்கள் உள்ளதாக தெஹ்ரான் போலீஸ் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில், ஈரானிய அணு விஞ்ஞானிகள் சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது, அவர்களும் மோட்டார் பைக்குகளில் வந்த மர்ம நபர்களாலேயே கொல்லப்பட்டிருந்தனர். அந்தக் கொலைகளின் பின்னணியில், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டியிருந்தது!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: