காஸாவில் சர்வதேச ஜிஹாத் களம் - அல்-கஸ்ஸாம் பிரிகேட்டின் மாபெரும் அணிவகுப்பு உணர்த்துவது எதனை?
பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படையணி ஒரு பெரிய இராணுவ அணிவகுப்ப நேற்றைய தினம் ( 04/10/2013 ) நிகழ்த்தி முடித்துள்ளது. 1984-ல் அல் கஸ்ஸாம் படையணி உருவாக்கப்பட்டது முதல் இது நாள் வரை இப்படியொரு இராணுவ பராட்டை அது நடாத்தியது கிடையாது. இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படையணியின் இராணுவ அணிவகுப்பு நிகழ்வது தொடர்பான தகவல்கள் கிடைத்தும் கூட இஸ்ரேல் அவசர தாக்குதல்கள் எதையும் செய்யவில்லை. அல்-கஸ்ஸாம் படையணியினர் இம்முறை விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட அதிநவீன ஆயுத சன்னத்தர்களாக தங்கள் இராணுவ அணிவகுப்பை நிகழ்த்தியது இஸ்ரேலிற்கு தெரியும்.
காஸா மீதான இறுதி தாக்குத்ல் ஒன்றை நிகழ்த்த இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதன் பின்னர் காஸா மீதான இராணுவ தாக்குததலை எகிப்திய இராணுவத்தை கொண்டு நிகழ்த்தும் நகர்வுகளில் அது ஈடுபட்டிருந்தது. ஜெனரல் சிசியின் ஜுன்டா இராணுவ அரசும் அதற்கு உடன்பட்டிருந்தது. ரபாவின் பாதைகளை அடைத்ததுடன் நிலக்கீழ் சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தும் இருந்தது எகிப்திய இராணுவம். தனது எல்லை சோதனை சாவடியில் சினைப்பர் துப்பாக்கிகளை பொருத்தி எல்லை கடக்கும் பலஸ்தீனர்களை சுட்டுத்தள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கையையும் எகிப்திய இராணுவ அரசு செயற்படுத்தியிருந்தது.
இம்முறை அல்-கஸ்ஸாம் படையணி நிகழ்த்திய இராணுவ அணிவகுப்பு லெபனானின் ஹிஸ்புல்லாக்களின் பாணியை ஒத்ததாக இருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும். அது போலவே ஹிஸ்புல்லாஹ் படையணிகள் பயன்படுத்தும் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் என்பனவற்றையும் அவற்றில் காணக்கூடியதாக இருந்தது.
இதை விட இன்னொரு விடயம் இங்கு கவனிக்கத்தக்கது.
வழக்கமாக பலஸ்தீன கொடிகளை ஏந்தும் ஹமாஸ் போராளிகள் இம்முறை அல்-காயிதா போன்ற அடிப்படைவாத அமைப்புக்கள் கொண்டுடிருக்கும் கறுப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இரு சர்வதேச இஸ்லாமிய கோட்பாட்டியல் போராட்டங்களுடன் தம்மை இணைத்து கொள்ளும் ஒரு நகர்வாகவே காணத்தக்கது.
காஸாமீதான தகாக்குதலிற்கு எதிராகவும், காஸாவை கைப்பற்றும் நிகழ்வுகளிற்கு எதிராகவும் ஷாமைப்போல சர்வதேச ஜிஹாத்களத்தை காஸாவில் திறக்கும் ஒரு முனைப்பான செயற்பாடாகவே இதனை நோக்கக்கூடியதாக உள்ளது. ஹிஸ்புல்லாக்களின் பாணியை இதில் கலந்தமை நேர் முரணாண இரு புள்ளிகளை ஒரு சமாந்தரத்தில் இணைக்கும் புரியாத போக்காக இருப்பதும் உண்மையே..
0 comments: