Facebook Twitter RSS


தமிழகத்துக்கு 3 நாள்தான் காவிரி நீர் ... 'ஷட்டரை' மூடப் போவதாக கூறுகிறார் ஷெட்டர்!


ஒரே நாடு! ஒரே  மக்கள்!! ஒரே சமூகம்!!!  

எங்கே போனது பா .ஜ.க வின் வாய் சவடால்!!!!!!!!


 Cauvery Water Tn Only 3 Days Karnataka Cm

பெங்களூர்: தமிழகத்துக்கு 3 நாள்தான் காவிரி நீர் திறக்கப்படும் என்றும் அதற்குள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
காவிரியில் திடீரென நேற்று நள்ளிரவு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறமுடியாது. 3 நாட்களுக்கு மட்டும்தான் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கர்நாடக விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும். இன்னும் 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அஸ்ஸலாம் அலைக்கும்(வர்ஹ...) 
                            




Search in the Hadith

Search: in


Search in the Quran
Search in the Quran:
in




Prayer Times For 6 Million Cities Worldwide
Country:

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


முஸ்லிம்களை தீவிரவாதிகளாக  சித்தரிக்கும் இந்திய அரசு: 

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க அரபு மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட நர்ஸரி புத்தகங்களையும், கவிதைகளையும் ஆதாரமாக காட்டும் இழிவான நிலைக்கு இந்திய போலீஸ் தள்ளப்பட்டுள்ளது. தடைச் செய்யப்படாத புத்தகங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும், இஸ்லாத்தைக் குறித்த பாடப் புத்தகங்களையும் கைப்பற்றி இவை
‘நாங்கள் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய ஆதாரங்கள்’ என்று போலீஸ் கூறியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய அரசால் அநியாயமாக தடைச் செய்யப்பட்ட சிமி என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்களான அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க நீதிமன்றத்தில் போலீஸ் ஆதாரமாக இவற்றை தாக்கல் செய்துள்ளது. இத்தகவலை பிரபல ஆங்கில ஏடான த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
சிமி இயக்கம் தடைச் செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்து பின்னர் மலேகான் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என குற்றம் சாட்டிய ஷபீர் அஹ்மத் மஸீஹுல்லாஹ் மற்றும் மும்பையில் இருந்து கைது செய்யப்பட்ட நஃபீஸ் அஹ்மத் ஆகியோரிடமிருந்து கைப்பற்றியது இத்தகைய புத்தகங்களாகும்.
2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நஃபீஸ் மற்றும் ஷபீரை கைது செய்த பிறகு போலீஸ் நஃபீஸின் வீட்டில் சோதனை நாடகத்தை நடத்தியது. அப்பொழுது அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கறுப்பு ரெக்ஸின் பையில் இருந்தவை குழந்தைகளுக்கான மாத இதழ் உமங், சிமி தடைச்செய்யப்படுவதற்கு முன்பாக அந்த இயக்கத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் ஆகியனவாகும்.
2008-ஆம் ஆண்டு இந்தூரில் இருந்து சிமி உறுப்பினர் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட யூனுஸ் கானுக்கு எதிராக போலீஸ் தாக்கல் செய்த ஆதாரம், இந்தியாவில்    இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நிலைமையை விளக்கும் கட்டுரையாகும். சிமி தலைவர்களுக்கு நார்கோ அனாலிஸிஸ் (உண்மைக் கண்டறியும் சோதனை) டெஸ்ட் குறித்து 2008 ஏப்ரல்9-ஆம் தேதி தைனிக் ஜாக்ரன் பத்திரிகையும் இதனை ஆதாரமாக வெளியிட்டது. யூனுஸ் 1999-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை சோட்டி காவல் டோலி மஸ்ஜிதில் திருக்குர்ஆனை கற்றுக் கொடுத்தார் என்ற மிகப்பெரிய அதிர்ச்சி(???)யான தகவலும் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஃபைஸல், இர்ஃபான், ஷாக்கிர் ஆகியோருக்கு எதிராக தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் ஆகிய கட்டாயக் கடமைகள் குறித்து ஒரு முஸ்லிம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சட்டத்திட்டங்கள் அடங்கிய உருது புத்தகத்தை விசாரணை அதிகாரி விக்ரம்சிங் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.
இந்தூரில் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் என்ன தெரியுமா? புதுடெல்லியில் ஒரு பதிப்பகம் வெளியிட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘லைஃப் ஆஃப் முஹம்மது’ என்ற நூலாகும். மேலும் ‘ஹிந்து மதமும் ஏகத்துவக் கொள்கையும்’, ‘திருக்குர்ஆனை கற்கும் முறை’ ஆகிய நூல்களும் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
மத்தியபிரதேசத்தைச் சார்ந்த ஜாமீருக்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் – ஹிந்து ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா அமைப்பின் வகுப்புவாத செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்கள் ஆகும்.
மஹாராஷ்ட்ராவில் ஃகாலித் முச்சாலாவுக்கு எதிரான ஆதாரம் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த புகாராகும். முஸ்லிம்-கிறிஸ்தவ மக்கள் தொகை சதவீதம் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி ராஷ்ட்ரீய விசார் மஞ்ச் வெளியிட்ட கட்டுரையை கைவசம் வைத்திருந்தது ஜாமீர் செய்த மகா பாவமாக போலீஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி :ஆசிய நண்பன் 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்த இளைஞர்கள்: வட்டியில்லா கடன் மையம் துவக்கி சாதனை


கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்த இளைஞர்கள்: வட்டியில்லா கடன் மையம் துவக்கி சாதனை
 செப்டம்பர் 18,2012,23:31 IST
 
புதுக்கோட்டை: கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம் ஒன்றை துவக்கி, அதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியில்லாக் கடன் வழங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் ஒன்று, அம்மாப்பட்டினம். மணமேல்குடி அருகில் உள்ள இக்கிராமத்தில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என, 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஏழைகள்:
இவர்களில் பல குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கும் கீழ், ஏழ்மை நிலையில் உள்ளனர். விவசாயக் கூலி வேலை செய்வது, மீன் வியாபாரம் செய்வது, கயிறு திரித்தல் போன்றவை தான், இவர்களது தொழில். இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை நம்பியே, இவர்களது குடும்பம் உள்ளது. ஒரு நாள் வேலைக்குச் செல்லா விட்டால் கூட, இவர்களது பாடு திண்டாட்டம் தான். இதை சமாளிக்க, கந்துவட்டி கும்பலிடம் கையேந்துவதை, அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். குறிப்பாக, 86 குடும்பத்தினர், கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, மீள முடியாமல், தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும், கொத்தடிமைகளாக வேலை பார்த்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இஸ்லாத்தின் கொள்கைப்படி, வட்டி வாங்குவது பாவச்செயல் என்பதை உணர்ந்த, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள், கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நடவடிக்கைகளை துவக்கினர். இதற்காக, 25 பேரை உறுப்பின ராக கொண்ட, "வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம்' என்ற, தன்னார்வ அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, கல்வி, மருத்துவம், சிறு தொழில் போன்றவற்றுக்கு, 3,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியின்றி கடன் வழங்கி வருகின்றனர். ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஏழ்மை நிலையில் உள்ள அனைவருக்கும், கடன் வழங்குகின்றனர். மொத்தம், கடன் தொகையை, 60 நாட்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது தான், இவர்கள் விதித்துள்ள நிபந்தனை. இதை ஏற்று, கடன் வாங்கிய அனைவரும், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். இதுவரை, 2,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளனர். வட்டியில்லாக் கடன் வழங்கும் சேவை துவங்கியது முதல், அம்மாப்பட்டினம் கிராமத்தில், கந்துவட்டி கும்பல் நுழைய தடைவிதிக்கப்பட்டது. ஆண்டாண்டு காலமாக, அக்கிராமத்தை அச்சுறுத்தி வந்த கந்துவட்டி கும்பல், தற்போது அந்த கிராமத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இயக்கம்:
கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல், வரதட்சணைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் துவக்கியுள்ளனர். இதற்காக, "வரதட்சணை புதைப்பு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ள அவர்கள், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநாடு மற்றும் பேரணி நடத்தியுள்ளனர். கடலோரக் கிராமங்களை குறிவைத்து, கட்டுமாவடி மற்றும் எஸ்.பி., பட்டினத்தில் துவங்கிய பேரணியில், பெண்கள் உட்பட, 6,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் வரதட்சணை கொடுமைகளுக்கும், விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும், அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையத்தின் தலைவர் முகம்மது இத்திரீஸ் கூறியதாவது: அம்மாப்பட்டினம் கடலோரக் கிராமத்தில், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அமைப்பை உருவாக்கினோம். இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 3,000 முதல், 10 ஆயிரம் ரூபாய், வரை வட்டியில்லாக் கடன் வழங்கி வருகிறோம்.

ஜாதி, மதம் இல்லை:
கடன் வழங்க நாங்கள் ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது. கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதுவரை, 5,000க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர். இது போன்று, வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளோம். விரைவில், அப்பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு முகம்மது இத்திரீஸ் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


நாங்கள் ஆஸ்கரை புறக்கணிக்கிறோம், நீங்களும் செய்யுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் கோரிக்கை


டெஹ்ரான்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டித்து ஆஸ்கரை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் இது குறித்து ஈரானிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஆஸ்கர் விருது விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தைக் கண்டித்து ஆஸ்கர் விருதுக்கு தங்கள் நாட்டில் இருந்து படங்களை அனுப்பி வைக்கப் போவதில்லை என்று ஈரான் நாட்டு கலாச்சாரத் துறை அமைச்சர் முகமது ஹொசீனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை ஈரான் புறக்கணிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். இதே போன்று மற்ற முஸ்லிம் நாடுகளும் ஆஸ்கர் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஆஸ்கருக்கு அனுப்புவதாக இருந்த ஈரானிய படம் 'எ க்யூப் ஆப் ஷுகரை' நிறுத்தி வைப்பது என்று அதன் தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தைக் கண்டித்து டெஹ்ரானில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


எந்தவித தாக்குதலிலும் இருந்து ஈரான் தன்னை காத்துக்கொள்ளும்: அதிபர் அகமதிநிஜாத்

நியூயார்க்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஈரான் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள முஸ்லிம்கள் யூதர்கள், கிறிஸ்தவர்களை மணப்பதில் தங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,
மக்களின் மதத்தை மற்றும் உணர்வுகளை பாதிக்கும் எதுவுமே கண்டனத்திற்குரியது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியுள்ளது(இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்) அழகில்லை. இதற்கும் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கும் தொடர்பில்லை. கூறப்போனால் இது சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். பல இடங்களில் இது குற்றமாகும்.
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் எங்கள் நாட்டை காத்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று நினைப்பதால் அதை தாக்கப் போகிறோம் என்று இன்னொரு நாடு கூறுகிறது.
ஓரினச் சேர்க்கையால் யாராவது குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? முறையான கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டும். அதேபோன்று அரசியல் அமைப்பையும் புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளில் யாராவது ஒருவர் யூதரை டேட் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, அந்த யூத ஆண் அல்லது பெண் யார் என்று பார்க்க விரும்புவேன். மக்கள் காதலிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஈரானில் வாழும் பல யூதர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். சில முஸ்லிம்கள் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களை மணக்கின்றனர். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இஸ்ரேலுக்கு கவலையாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு ஆயுத நிலையங்களை அழிக்கப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்கினால் தக்க வழியில் பதிலடி கொடுப்பதில் ஈரானும் முனைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படமெடுத்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் டாலர்: பாக். அமைச்சர்


இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக படத்தை வெளியிட்ட அமெரிக்கரை கொலை செய்வோருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகின. பாகிஸ்தானிலும் பல்வேறு நகரங்களில்தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறைகளாக வெடித்ததில் மொத்தம் 23 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரை கொலை செய்தால் 1 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குலாம் அகமது பிலோர் கூறுகையில். நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கரை கொல்பவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகை வழங்கப்படும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும். , ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம்தான். எந்த நீதிமன்றத்திலும் என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் கவலை கிடையாது என்றார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் - உண்மை அறியும் குழுவின் அறிக்கை


சகோ. தமீம் அன்சாரி கைது - உண்மை 


அறியும் குழுவின் அறிக்கை



சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.
குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.

எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி,
4. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி,
6. வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.

இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமிம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.. அவரது வழக்குரைஞர் ஜே. கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..

நாங்கள் அறிந்த உண்மைகள்

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை.

தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.

16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப்
முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடந்தது இதுதான். காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்

1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?

2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.

5. தூதரக அதிகாரிகளுக்கே உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செயப்பட்டதாகவே உள்ளது.

6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.

கியூ’ பிரிவு போலீஸ்

கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.

உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.

காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால், முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.

கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.
கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

எமது கோரிக்கைகள்
  1. முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்ப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.
  2. ‘கியூ’பிரிவு போலீசின் விசாரணை நம்பத்தகுந்ததாக இல்லை, எனவே தேசப் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும்.
  3. ‘கியூ’ பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்.
  4. அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல்துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு: அமித் ஷா மீதான விசாரணை மும்பைக்கு மாற்றம்




டெல்லி: குஜராத்தில் சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணையை குஜராத் மாநிலத்திலிருந்து மும்பைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
குஜராத்தை சேர்ந்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் ஹைதராபாத்தில் இருந்து குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே தீவிரவாத தடுப்பு போலீசாரால் கடத்தி வரப்பட்டு, கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் அமித் ஷாவை 2010ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி கைது செய்தது. அவர் 3 மாத காலம் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கைதானதைத் தொடர்ந்து அமித் ஷா அமைச்சர் பதவியை இழந்தார்.
இந் நிலையில் அமித் ஷாவுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், அமித் ஷா பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதித்திருந்தது.
இந் நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அப்தாப் ஆலம், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டனர். இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி அமித் ஷா குஜராத்துக்கு செல்லவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கின் விசாரணையை குஜராத் மாநிலத்திலிருந்து மும்பைக்கு மாற்றவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
அமித் ஷா, முதல்வர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொராபூதீன் கொலை வழக்கில் சாட்சியான துள்சிராம் பிரஜாபதி என்பவரும் என்கெளண்டரில் கொல்லப்பட்டதும், ஆனால், அதையும் மறைக்க குஜராத் போலீசார் முயன்றதும் குறிப்பிடத்தக்கது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


சல்மான் ருஷ்டியின் தலைக்கு ரூ.18.15 கோடி சன்மானம்: ஈரானின் இஸ்லாமிய தலைவர் 

மாஸ்கோ: சர்ச்சைக்குரிய சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை எழுதிய சல்மான் ருஷ்டி தலைக்கு அறிவித்திருந்த பரிசுத் தொகை ரூ.18 கோடியே 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்று வாழும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. அவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் நாவல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறிய ஈரான் மதவாத தலைவர் அயத்துல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா கொடுத்ததுடன் அவரைக் கொலை செய்பவர்களுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.18 கோடியே 15 லட்சமாகியுள்ளது. சல்மான் ருஷ்டியைக் கொலை செய்பவருக்கு ரூ.18 கோடியே 15 லட்சம் வழங்கப்படும் என்று ஈரானைச் சேர்ந்த மதவாத அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படத்தை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த படத்திற்கும் ருஷ்டிக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


இஸ்ரேல் மட்டும் எங்களை தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும். இஸ்ரேல் போர் தொடுத்தால் நிலைமை கட்டுக்குள் இருக்காது. இதன் மூலம் நிச்சயம் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் என்றார்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை மேம்படு்த்துவது இஸ்ரேலுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு உலைகளை அழித்துவிடுவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. அணு ஆயுத திட்டம் நல்ல நோக்கங்களுடன் தான் பலப்படுத்தப்படுகிறது. அதே சமயம் யாராவது தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் கமாண்டர் மேஜர் ஜெனரல் முகமத்து அலி ஜபாரி கூறுகையில், ஈரான் மீது போர் தொடுப்பது நடக்கும். நிச்சயம் போர் நடக்கும். ஆனால் எங்கே, எப்போது என்பது தான் தெரியவில்லை. ஈரான் மீது போர் தொடுப்பது தான் ஒரே வழி என்று இஸ்ரேல் அதிகாரிகள் நினைக்கின்றனர். அவர்கள் மட்டும் போர் தொடுத்தால் அவர்களின் அழிவுக்கு அது வழிவகை செய்துவிடும் என்றார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


கோத்னானியை காப்பாற்ற முயன்றது 


மோடி அரசு-நரோடா பாட்டியா வழக்கை 


விசாரித்த நீதிபதி


அகமதாபாத்: நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப்பாற்ற முதல்வர் நரேந்திர மோடியின் அரசு தீவிரமாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் இனக்  கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதில் நரோடா பாட்டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.
இந்க கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்  குஜராத் அமைச்சரும், 3 முறை எம்.எல்.ஏவுமான மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல முன்னாள் விஎச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது தீர்ப்பின்போது நீதிபதி ஜோத்சனா சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது மாயாவைக் காக்க மோடி அரசு தீவிரமாக முயன்றதாக அவர்  குற்றம் சாட்டியுள்ளார்.
மாயாவைக் காக்க மோடி அரசு பல வழிகளிலும் முயன்றதாக நீதிபதி தனது கருத்தில் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
2008ம் ஆண்டுதான் மாயா கோத்னானி அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது அவர் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக பதவி தரப்பட்டார். நரோடா பாட்டியா சம்பவத்தில் பெண்களும், குழந்தைகளும்தான் மிகப் பெரிய அளவில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஜோத்சனா மேலும் கூறுகையில், மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப்புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் எஸ்ஐடியை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப் பற்றிக்  கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக்  காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத்னானியின் பெயர் கூட இந்த சம்பவத்தில் வந்து விடாதபடி காக்க கடுமையாக முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் நீதிபதி.
முதலில் நரோடா பாட்டியா சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில காவல்துறையினர் பதிவு செய்த எப்ஐஆரில் மாயாவின் பெயரே இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அவர் மீது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் புகார் கூறியும் கூட மாயாவின் பெயரை குஜராத் போலீஸார் சேர்க்கவில்லை. அவரை கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் தலையீட்டால் சிக்கிய மாயா
அப்போதைய பிரதமர் வாஜ்பாயியை சந்தித்தும் கூட பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புகார் கூறினர். போலீஸார், மாயாவைக் காக்க முயல்வதாக வாஜ்பாயிடமே அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாஜ்பாய் தலையீட்டின் பேரில், மாயா தொடர்பான 27 புகார்களை குஜராத் போலீஸார் ஏற்றனர். அதன் அடிப்படையில் மாயாவின் பெயரைச் சேர்த்து ஒரு எப்ஐஆரை குஜராத் போலீஸார் பதிவு செய்தனர். அதன் பின்னரே விஎச்பி தலைவர் ஜெய்தீப் படேல், நரோடா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைசூர்வாலா ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
அதாவது ஒரு முதல்வராக நரேந்திர மோடி செய்யத் தவறியதை வாஜ்பாய் தலையிட்டு செய்யும் நிலையை ஏற்படுத்தி விட்டது அப்போதைய மோடி அரசு.
மாட்டி விட்ட ராகுல் சர்மா
இருப்பினும் கூட தொடர்ந்து மாயாவுக்குச் சாதகமாகவே குஜராத் போலீஸார் நடந்து வந்தனர். எப்ஐஆரில் பெயரைச் சேர்த்த வேகத்திலேயே அந்த வழக்கை மூடி விட்டது குஜராத் அரசு. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா, இந்த மூன்று பேரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது அவரை உடனே இடமாற்றம் செய்து விட்டது மோடி அரசு. அகமதாபாத்தை விட்டே அவர் தூக்கப்பட்டார்.
இருப்பினும் நரோடா பாட்டியா வழக்கில், மாயா உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்புகள் அடங்கிய தகவல்களை சிடி மூலம் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டார் ராகுல் சர்மா.  அதன் பின்னர் தான் சேகரித்த அத்தனை தகவல்களையும் அப்படியே நானாவதி கமிஷன் முன்பும், யுசி பானர்ஜி  கமிட்டி முன்பும் கொட்டினார் ராகுல் சர்மா. இதன் மூலம் மாயாவின் அக்கிரமச் செயல்கள் அம்பலத்திற்கு வந்தன.
இதையே பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி சிறப்பு விசாரணைக் குழுவும் முக்கியமாக கவனத்தில் கொண்டது. இந்த சிடி  ஆதாரம்தான் மாயாவையும், பஜ்ரங்கி உள்ளிட்டோரையும் சிறையில் தள்ளப் பேருதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.
அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலகநாடுகளும் , அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல் அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.
ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித்தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


இனியும் அமெரிக்காவின் உருட்டல், மிரட்டல் எடுபடாது... ஈரான் அதிபர் அகமதிநிஜாத்


நியூயார்க்: அமெரிக்காவின் மிரட்டல்கள் இனியும் உலகில் எடுபடாது. தனது மிரட்டல்களை, நெருக்குதல்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய உலக வரிசை உருவாவதற்கான நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் ஈரான்அதிபர் அகமதிநிஜாத்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அகமதிநிஜாத் அங்கு அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர 12க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து முயற்சித்து வருகின்றன. அதில் ஒன்றாக ஈரானும் உள்ளது.
எங்களது அணு சக்தித் திட்டங்களை கேள்வி கேட்கயாருக்கும் அதிகாரம் கிடையாது. மேற்கத்திய நாடுகள் என்னதான் எங்களுக்குத் தடை விதித்தாலும் எங்களது பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடந்து கொண்டுதான் உள்ளன.
இப்போது புதிய உலக வரிசை உருவாகும் நேரம் வந்து விட்டது. இனியும் அமெரிக்காவின் உருட்டல்கள், மிரட்டல்கள் எடுபடாது. அவர்களும் உலக நாடுகள் மீதான தங்களது ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று எல்கேஜி குழந்தைக்குக் கூட அமெரிக்கா உலக நாடுகளை மிரட்டிக் காரியம் சாதிப்பதை உணர்ந்துள்ளது. மைக்ரோபோன் மூலம் உத்தரவிட்டு காரியம் சாதிக்கிறது அமெரிக்கா. தங்களது விருப்பங்களை, மிரட்டல்களை போன் மூலம் அவர்கள் சாதிக்கி நினைக்கிறார்கள். ஆனால் இது முடியப் போகும் நேரம் வந்து விட்டது. இனிமேலும் அவர்களை யாரும் சக்கரவர்த்தி போல பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.
ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும், கட்டளைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றார் அகமதிநிஜாத்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: