Facebook Twitter RSS

அல்ஜீரியாவில் இருந்து ஆள் பிடித்து அனுப்புகிறது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்!
  

 

!

யூதர்களின் சூழ்ச்சி வலை!!!


உள்நாட்டு யுத்தம் நடக்கும் சிரியாவுக்குள், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் ‘வேறு விதமான ஆட்டம்’ ஒன்றை ஆடுகிறது என்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது அல்ஜீரியப் பத்திரிகை அல்-பஞ்ர்.
அல்ஜீரியாவுக்குள் இருந்து இயங்கும் மொசாத் டீம் ஒன்று, அல்ஜீரிய இளைஞர்களை ஒன்றுதிரட்டி, சிரியாவுக்குள் யுத்தம் புரியும் போராளி அமைப்புகளில் ஒன்றில் இணைந்து யுத்தம் புரிய அனுப்பி வைக்கிறது என்கிறது இந்தப் பத்திரிகை. ஆனால், அனுப்பி வைக்கப்படும் அல்ஜீரிய இளைஞர்களுக்கு, தம்மை அனுப்பி வைப்பது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் என்ற விபரம் தெரியாதாம். (தெரிந்தால் போகமாட்டார்கள்)
அல்ஜீரியாவில் இயங்கும் ஒரு சலாஃபி ஜிஹாத் இயக்கம், இஸ்லாமிய போராளி  இயக்கம் என்ற போர்வையில் இயங்கினாலும், அதை பின்னணியில் இருந்து இயக்குவது, மொசாத் ஏஜென்ட்டுகள் சிலர். இந்த இயக்கத்தில் ஏராளமான அல்ஜீரிய இளைஞர்கள் சமீப நாட்களில் வந்து சேருகின்றனர்.
அவர்களே, யுத்தம் புரிவதற்காக சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
குறிப்பிட்ட சலாஃபி ஜிஹாத் இயக்கத்துக்கு, பெருமளவில் நிதி கத்தாரில் இருந்து வருவதாகவும், அந்த நிதியே, அல்ஜீரியர்களை சிரியாவுக்கு அனுப்பி வைக்க செலவு செய்யப்படுகிறது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது அல்-பஞ்ர்.
இதுதானுங்க, டிபிகல் இஸ்ரேலிய ஸ்டைல்! இஸ்ரேலுக்கு இஸ்லாமியர்களை கண்ணில் காட்டக்கூடாது. ஆனால், இரு இஸ்லாமியத் தரப்புகள் தமக்கிடையே சண்டையிட்டால், அதற்குள் மொசாத் புகுந்துவிடும்!!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பறக்கும் சைக்கிள் வெற்றிகரமா​க பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)


cycle_002முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வண்டிகளை டிஸ்னி படங்களில் பார்த்திருந்த போதிலும் முதன் முறை அதனை நிஜத்தில் உருவாக்கியுள்ளதுடன் டம்மி பொம்மை ஒன்றினைக் கொண்டு முதற்கட்ட பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த வண்டி தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

லண்டனில் உலா வரும் பறக்கும் தட்டுகள்


fly_plat_001.w245லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மாயாஜாலக் காட்சிகள் போன்றே ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து குதிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. இதன் லண்டன் கிளையில் தான் சமீபத்தில் டிரோன் சர்வீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் ஓர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்று சுமந்து கொண்டு டேபிளுக்கே பறந்து வருகிறது. ஐபேட் கண்ட்ரோலில் இயக்கப்படும் இந்த டிரோன் சப்ளை வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இதில் மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அது அழகாக இறக்கைகளை சுழற்றியபடி ஜிவ்வென்று பறந்து செல்கிறது. உணவுப் பதார்த்தங்களை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பி பறந்து சென்று விடும் வகையில் இது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
2 நவீன கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த டிரோனை, ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஐபாட் உதவி கொண்டு இயக்குகிறார். இந்த டிரோன் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
இது குறித்து யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், உலகம் முழுவதும் எங்கள் ஹோட்டல்கள் 70 இடங்களில் உள்ளது. கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம்.
அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் எனதெரிவித்தனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

உம்மாவின் ஒற்றுமைக்காக உழைப்பது இஸ்லாம் விதித்துள்ள கட்டாயக் கடமை

முஸ்லிம்களின் தலைமைத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகு இந்த உம்மா இன்னல்களையும், இழிநிலையையும் சந்தித்துவருகிறது. முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக முயற்சிக்க வேண்டியது நல்ல காரியம் மட்டுமல்ல. ஷரியா நம்மீது ஆக்கியுள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாகும் .முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பாடுபட  வேண்டியது  குறித்து குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில்  மௌலவி ஜியாவுதீன் பாகவி ஆற்றிய உரை இங்கு பதியப்பட்டுள்ளது
உம்மாவின் ஒற்றுமைக்காகஉழைப்பது இஸ்லாம்
விதித்துள்ள கட்டாயக் கடமை (பகுதி – I)


விதித்துள்ள கட்டாயக் கடமை (பகுதி – II)

விதித்துள்ள கட்டாயக் கடமை(பகுதி – III)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

ஹிஜ்ரி 1342, ரஜப் 28-ல் என்ன நடந்தது?

முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம். அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம்.”
கிலாஃபத்தை முழுமையாக அழிப்பதற்கு பிரிட்டன் முழு வீச்சில் செயல்பட்டதை அன்று உலகமே அறிந்திருந்தது. கிலாஃபத்தை அழித்ததோடு மேற்குலகு ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி அவர்களின் ஒற்றுமையை சிதைத்தனர். ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்கள் மீது காலனியாதிக்க காஃபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள். முஸ்லிம் உம்மா மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி, அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும் சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர்.
நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. உண்மையில் இஸ்லாம் அருளப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாத்தின் எதிரிகளும் தோன்றிவிட்டார்கள். முஸ்லிம்களுடன் நீண்டகாலம் போராடி தோல்வி கண்ட காஃபிர்கள் இனிமேலும் போராடி வெற்றிக்கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே அவர்கள் சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்களை வீழ்த்த முடியும் என்பதாக உணர்ந்தார்கள்.
முஸ்லிம்களின் சிந்தனையை பலவீனப்படுத்த, கிலாஃபத்தின் இறுதிகாலகட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தைத் தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள். இதனை அடைவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதின் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தில் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்கள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளைக் கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும், துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் அழிவும் நடந்தேறியது. முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற இங்கிலாந்தின் அடிவருடி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட உடனேயே முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய பூமி பல தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃபார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர். மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர். அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கிவருகின்றனர்.
மேற்குலகின் ஏஜன்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் பங்கம் ஏற்பட்டது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர், செச்சன்யா, கிழக்கு துர்கிஸ்தான் என்ற உலகின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் வேட்டையாடப்படுகிறார்கள். முஸ்லிம் உலகு எல்லா நிலைகளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. முஸ்லிம் உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். முஸ்லிம் நாடுகளில் இன்று நடைபெற்று வரும் எழுச்சிமிகு போராட்டங்கள் கிலாஃபத்திற்கான பாதையை திறந்துவிட்டுள்ளது.
முஸ்லிம்களே !
உலக அரங்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சினைளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்க வேண்டாமா? இந்த ஆட்சிமுறையின் கீழ்தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. கிலாஃபத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சிமுறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமல்படுத்துவதன் மூலமாகவே, முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்து வரும் மனிதகுலத்திற்கு விடிவு ஏற்படும். முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.
(அந்நிஸா:141)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
(ஆல இம்ரான்: 28)
முஸ்லிம்களே !
இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாஃபா முஸ்லிம்களுக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் நற்பலன் அளிக்கக்கூடியது. கிலாஃபத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கட்டிக்காக்கப்படும். கிலாஃபாத்தை நிலைநாட்டுதல் என்பது முஸ்லிம்களின் ஜீவாதாரப்பிரச்சனையாக இருப்பதோடு கட்டாயக்கடமையாகவும் இருக்கிறது.
“நபி (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும்போது அதனைப் பார்த்துக் கூறினார்கள்: உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்வின் முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமாகும். நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்.”
(அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி, இப்னு மாஜா)
முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில், சர்வசாதாரணமாக இன்று முஸ்லிம்களின் கண்ணியமும் பாழ்படுத்தப்படுகிறது. நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள். குர்ஆனை எரிக்கும் போராட்டத்தை அமெரிக்காவில் கயவன் ஒருவன் நடத்தி இருக்கிறான். முஸ்லிம் உம்மத்தை கேடயமாக நின்று பாதுகாக்ககூடிய பொறுப்பு மிக்க இமாம் (கலீஃபா) இல்லாததே முஸ்லிம்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தனக்குப்பின்னர் இந்த உம்மத்தை யார் வழி நடத்தவேண்டும் என்பதை தெளிவாகவே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.
“நான் அபூஹூரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய நபி (ஸல்) அவர்களின் கூற்று: பனி இஸ்ராயில் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். அதிக எண்ணிக்கையில் கலீஃபாக்கள் தோன்றுவார்கள். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதலாமவருக்கு பைஆ செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பைஆ செய்யுங்கள். அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து விசாரணை செய்வான்.” என்றார்கள்.
(அபுஹாசிம் (ரலி), முஸ்லிம்)
முஸ்லிம்களே !
நம் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் பொருப்பை நிறைவேற்ற வீறு கொண்டு எழ வேண்டாமா? நாம் உறுதிப் பிரமாணம் கொண்டு ஏற்று வாங்கிய மாபெரும் அமானிதத்தை நாம் மட்டும் சுமந்துக்கொண்டிருந்தால் போதுமா? அதன் பிரகாசத்தை அழைப்புப்பணி மூலம் உலகம் முழுவதும் பரப்ப இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபா அவசியமல்லவா? முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரங்களிலிருந்து பிரிக்கப்பட்ட இஸ்லாம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டாமா? முஸ்லிம்கள் மாத்திரமின்றி முழு மனித சமுதாயமும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நிம்மதியாக வாழ நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? கடந்த நூற்றாண்டிலும் தற்போதும் மனித சமுதாயம் சந்தித்துள்ள மாபெறும் அழிவுகளுக்கு காரணமான மனித அறிவிலிருந்து தோன்றிய முதலாளித்துவம் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை அடியோடு அகற்றி மீண்டும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டாமா?
முஸ்லிம்களே !
நம் பாதை சுவனத்தின் பாதையாகும். அதன் பாதை இன்னல்கள் நிறைந்தது. அதை அடைந்துத் கொள்வதற்கு மாபெரும் தியாகங்கள் செய்வது அவசியமாகும். ஸஹாபாக்கள் மற்றும் நம் முன்னோர்களின் தியாக உணர்வு நமக்கும் வரவேண்டாமா? அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய சட்டங்கள் பூமியில் மீண்டும் நிலைநாட்டப்பட, இந்த அழைப்புப் பணியில் ஈடுபடுவோரின் அழைப்பை ஏற்றுக்கொள்வோமா?
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்.”
(அல் அன்பால்: 24)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரியா' நிலவரங்கள் சொல்லும் செய்தி .

சிரியா' யுத்தம் பல ஆச்சரியமான களச் செய்திகளை எமக்கு தருகின்றது . அந்த வகையில் புதிய செய்தியாக கிடைத்திருப்பதுசிரிய , ஈராக்கிய எல்லையில் ஈராக்கிய இராணுவம் சிரியப் போராளிகளுடன் கடுமையாக போரிட்டுள்ளது எனும் தகவல் ஆகும் .
நிகழ்வுகளின் கோர்வைகள் ஒரு குழப்பமான அரசியலை காட்டி நின்றாலும் நிதானமாக சிந்தித்து ஒரு தூய போராட்டத்தை புரிந்து கொள்ளும் அவசியம் முஸ்லீம்களுக்குஇருக்கின்றது .

பசர் அல் அசாத் சார் அரசு அதன் பலம் மற்றும் ஆதரவுத் தளம் மற்றும் 74 % மான சுன்னி முஸ்லீம்கள் வெறும் 17% மான அலவி ஷியா ஆதிக்கத்தின் கீழ் பற்பல கொடுமைகளின் கீழ் வாழ்ந்த கடந்த வரலாறு இப்படி பல்வேறு விடயங்களை அலசும் போது நிகழ்கால போராட்டத்தின் தோற்றப்பாடு எதேச்சையாகவோ ,திடீரெனவோ தோன்றிய ஒன்றல்ல எனும் முடிவுக்கு எம்மால் வரமுடியும் .

ஆனால் நிகழ்கால போராட்டத்தின் தொடக்க வரிகளை வைத்து போராட்ட வடிவத்தை ஒரு 'அமெரிகன் ஜிஹாத் ' ஆக குறித்துக் கட்டுவதிலும் ,பிரச்சாரப் படுத்துவதிலும் பசர் அசாத் சார் ஊடகங்களும் , மேற்கின் மீடியாக்களும் அதன் மத்திய கிழக்கு ஆதரவாளர்களும் இரு வேறுபட்ட பாணிகளில் ஒரே பணியையே செய்தனர் .

அரேபிய வசந்தம் என்பது ஒரு நவ காலனித்துவ கொடும்பிடியின் சாந்தமான ஒரு ஆதிக்க வடிவம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .இங்கு இயல்பான மக்கள் எழுச்சியையும் ,அதன் எதிர்பார்ப்பையும் எவ்வாறு கையாழ்வது என்பதில்தான் மேற்கின் புதிய திட்டங்கள் மத்திய கிழக்கில் அமுல் படுத்தப்பட்டன.

முஸ்லீம் நாடுகளில் புதிய அரசியல் முகங்கள் தொடர்பில் 1. இஸ்ரேல் ,மற்றும் மேற்குலகு தொடர்பான நலன்பாதுகாக்கப்படல் . 2. இவர்கள் தொடர்பான முஸ்லீம்களின் நம்பிக்கையீனம் களையப்படுவது என்பன பிரதானமானது . அந்த வகையில் மாற்றீடுகள் களம் இறக்கப் பட்டனர் . 'நேற்றைய எதிரியை விலைபேசி இன்றைய நண்பனாக்கிக் கொண்டால் நாளைய சவால்களை செலவின்றி தடுக்கலாம் '. எனும் இராஜதந்திரப் பொறி வழமையான 'ஜனநாயக சாயத்தோடு 'வைக்கப்பட்டது. தேவைக்கும் தேசியத்துக்கும்ஏற்றால் போல 'இஸ்லாமியம்' எனும் இன்னொரு வண்ணத்தாலும் முஸ்லீம்கள் மனம் குளிர வைக்கப் பட்டனர் .

மதச் சார்பின்மையை நேற்று கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று காலத்தின் கட்டாயம் , அல்லது படிமுறை மாற்றம் என்ற நியாயங்களோடு அதன் காவலர்களாக பணியமர்த்தப் பட்டனர் . அடுக்கடுக்காக இந்தப் பொறியில் வீழ்ந்த முஸ்லீம் தேசங்களின்
வரிசையில் சிரியாவும் விழும் என்ற நம்பிக்கையில் காரியங்கள் ஒழுங்கு படுத்தப் பட்டன .ஆனால் நடப்பு நிகழ்வுகள் இப்படியான ஒரு மேற்கு எதிர்பார்த்த சாதகத்தை குறிகாட்டி நிற்கவில்லை .

நடப்பு அரசியலில் 'இஸ்லாமிய ஷரீயா 'முதலிடம் ,அல்லது தலைமை மாற்றம் , பற்றி சிரிய மக்கள் எழுச்சியின் நகர்வுகள் பேசியிருந்தால் . 'கடாபியை' போலஒரு அகால முடிவை நோக்கி NATO உதவியோடு கூடிய இராணுவ அரசியல் அல்லது 'ஹுஸ்னி முபாரக் ' சந்தித்த நீதிமன்ற அரசியல் போன்ற போலி முகங்கள் 'பசர் அல் அசாத்' விடயத்தில் இந்நேரம் அமுலாகி இருக்கலாம் .

ஆனால் சிரிய மக்களின் தேடல்கள் மிக ஆழமானதும் , இஸ்ரேல் மற்றும் மேற்கின் சித்தாந்த அரசியலுடன் முற்றிலுமாக மோதக் கூடியதும் ,இஸ்லாமிய வாழ்வியலை முற்றாக அமுல் நடத்தக் கூடிய துமான 'இஸ்லாமிய கிலாபா' அரசை வேண்டுவதே நிலமை வருடக்கணக்காக அழிவுகளோடு தொடர்வதற்கான காரணமாகும் .

செய்திகளின் இருட்டடிப்பு , மக்கள் படுகொலைகள் , சதி இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் , இப்போது அந்த வரிசையில்' ஷியா சார் அமெரிக்க உருவாக்கமான ஈராக்கிய இராணுவத்தின் தாக்குதல்கள்! இறப்புக்களால் ,இழப்புக்களால் தூய இலட்சியவாதம் தோற்கடிக்கப் பட முடியாதது . இறைவன் முன்னறிவித்த சக்தி மிக்க இஸ்லாத்தின் மீள்வருகையை சாத்தானிய சக்திகளால் தடுக்கவும் முடியாது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

அல்-துர்ராவின் கொடிய மரணத்துக்கும் தமது ராணுவத்திற்கு பங்கில்லை என்று இஸ்ரேல் அறிக்கை....


மிகவும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உலகம் முழுவதும் ஏற்படுத்திய ஃபலஸ்தீன சிறுவன் அல் துர்ராவின் கொலைச் சம்பவத்தில், தமது ராணுவத்திற்கு பங்கில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.
பிரெஞ்சு தொலைக்காட்சி அலைவரிசையான பிரான்சு-2 வெளியிட்ட தகவல் அடிப்படையற்றது என்று இஸ்ரேல் நியமித்த விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபலஸ்தீனின் 12 வயது சிறுவனான முஹம்மது அல் துர்ராவை அவரது தந்தை ஜமால், தனது பின்னால் மறைத்து வைத்த பிறகும் இஸ்ரேலின் கொடிய ராணுவம் துர்ராவை சுட்டுக் கொல்லும் கோரமான காட்சியின் வீடியோவை பிரான்சு நாட்டு சானல் ஒளிபரப்பியது.
தனது அருமை மகனை காப்பாற்றுவதற்கான தந்தை ஜமாலின் நீண்ட போராட்டம் வீணானது. பின்னர் அல் துர்ராவின் உடலை கொண்டுவருவதும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. ஜமாலுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை உலக அளவில் இச்சம்பவம் ஏற்படுத்தியது. மேலும் ஃபலஸ்தீனில் போராட்டம் வலுப்பெறவும் இச்சம்பவம் காரணமானது. பல்வேறு நிர்பந்தங்களின் காரணமாக இச்சம்பவத்திற்காக இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது. அல் துர்ராவின் மரணத்திற்கு ஃபலஸ்தீன் போராளிக் குழுக்கள் தாம் காரணம் என்று பொய்யைக் கூறியது இஸ்ரேல். எதிர்ப்பு வலுப்பெறுவதை கவனத்தில் கொண்டு விசாரணைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டது.
ஃபலஸ்தீன் போராளிகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும், இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்புணர்வை அதிகரிக்கவுமே பிரான்சு நாட்டு தொலைக்காட்சி சானலின் செய்தி அறிக்கை உதவியது என்று இஸ்ரேல் விசாரணைக் குழு குற்றம்
சாட்டுகிறது. ஆனால், விசாரணை அறிக்கை இஸ்ரேலின் உருவாக்கம் என்று முஹம்மது அல் துர்ராவின் தந்தை ஜமால் அல் துரா கூறியுள்ளார்.
தனக்கும், மகனுக்கும் என்ன நேர்ந்தது? என்பதை அறிய அரபு பிரதிநிதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைதான் தேவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜமால் கூறியுள்ளார்.
தங்களின் செய்தி அறிக்கையில் ஒரு தவறும் இல்லை என்றும், எந்த சுதந்திர ஏஜன்சிகள் விசாரணை நடத்தினாலும் தாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என்றும் பிரான்சு தொலைக்காட்சி சானல் தெரிவித்துள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

எனக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை : ஜூலியன் அசாஞ்ச்!
 

 
 



அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்
தெரிவித்துள்ளார். இரகசிய சைபர் நெட்வேர்க்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தொலைபேசி மற்றும் இணையப்பாவணை தொடர்பில் பல லட்சக்கணக்கில் பிரத்தியேக தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை...
திரட்டி வைத்திருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வார்ட் ஸ்னோவ்டென். இவர் முன்னர் அமெரிக்காவின் இரகசிய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர் ஆவார். தற்சமயம் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வருகிறார். சுவிற்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் தைரியமாக முன்வந்து வெளிப்படுத்திய தகவல்களினால், இந்தியர்களின் சைபர் நெட்வேர்க்குகள் மீது அமெரிக்கா குறிவைத்திருந்த விடயம் தெரியவந்துள்ளது. இவருக்கு நிச்சயம் இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜூலியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ஆபத்து நேர்ந்த போது முதன்முறையாக இந்தியாவிலேயே அகதிகள் தஞ்சம் கோரியிருந்ததாகவும், எனினும் மனிதாபிமானத்தை, மனித உரிமைகளை மதிக்கும் நாடாக கருதப்படும் இந்தியா தனது கோரிக்கைக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். 'விக்கிலீக்ஸின் மிகப்பெரிய ஆதரவாளர்களாக இந்தியா இருந்தது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொண்டேன். அவர்களுகு பல முறை கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும் எனக்கு புதுடெல்லி பதில் அளிக்க மறுத்துவிட்டது' என்கிறார் ஜூலியன் அசாஞ்சே.

அவர் கடந்த வருடன் ஜூன் 19ம் திகதியிலிருந்து இங்கிலாந்தில் உள்ள எகுவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். எகுவடோர் போன்ற மிகச்சிறிய நாடுகளே அகதி அந்தஸ்து அளிக்க முன்வந்துவிட்டன. ஆனால் சர்வதேச வல்லமையுடன், பில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடு, மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வராதது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனக்கில்லையென்றாலும், ஸ்னோவ்டெனுக்காவது இந்தியா அகதி அந்தஸ்து அளிக்க வேண்டும்.

மனிதாபிமானத்திற்கு ஆதரவாக இந்தியா துணைநிற்க வேண்டிய தருணம் இது என அசாஞ்ச் கூறியுள்ளார். மேலும் இந்தியா தனக்கு அகதி அந்தஸ்து அளிக்க இப்போது முன்வந்தாலும் தான் அங்கு வருவதற்கு தயாராக இருப்பதாகவும், இதுவரை ஒரு நாளும் இந்தியாவுக்கு வந்ததில்லை. எனினும் அங்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸிற்கு மிகப்பெரும் ஆதரவு தமக்கு இந்தியாவில் இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

 ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: ஈரான் அதிபர் தேர்தலில் ரோவ்ஹானி முன்னணி
  

 
 

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: ஈரான் அதிபர் தேர்தலில் ரோவ்ஹானி முன்னணி

ஈரான் அதிபராக இருக்கும் முகமது அகமதிநிஜாத் பதவி காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து நேற்று புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில், ரோவ்ஹானி, தெக்ரான் மேயர் முகமது பகர் குவாலிபாப், முகமது ஜலிலி உள்பட 6 பேர் போட்டியிட்டனர். நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் சுமார் 5 கோடி பேர் ஓட்டு போட்டனர்.
தெக்ரான் மற்றும் சில நகரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. எனவே, அங்கு வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதே போன்று, வெளி நாடுகளில் வாழும் ஈரானியர்களின் வாக்குகள், நாடோடிகள் உள்ளிட்டோர் பதிவு செய்த ஓட்டு எண்ணிக்கையும் தாமதமாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஹசன் ரோவ்ஹானி முன்னணியில் இருந்தார். 8 லட்சத்து 61 ஆயிரத்து 866 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இவர் 4 லட்சத்து ஒரு ஆயிரம் ஓட்டுகள் பெற்று இருந்தார். இதன் மூலம் அவர் 46.6 சதவீதம் வாக்குகள் பெற்று இருந்தார். இவருக்கு அடுத்த படியாக குவாலிபாப் 14.6 சதவீதம் அதாவது 1 லட்சத்து 27 ஆயிரம் வாக்குகளும், முகமது ஜலிலி 1 லட்சத்து 19 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இவர்கள் தவிர மற்ற 3 வேட்பாளர்களும் மிக குறைந்த ஓட்டுகளே பெற்றுள்ளனர்.
இந்த தகவலை ஈரான் உள்துறை மந்திரி முஸ்தபா மொகமது நள்ளார் தெரிவித்தார். தற்போது முன்னிலை பெற்றுள்ள ஹசன் ரோவ் ஹானி ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். அணு ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !

டந்த வாரம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு பேர் மீதும் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மகாராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இந்த நான்கு மதவெறியர்களின் குண்டு வைப்புச் சதிச்செயல்களும் அவர்களின் தொடர்புகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் பிரக்யாசிங் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்பு இடம்.
மாலேகான் குண்டு வெடிப்புகள் 2006 : படா கப்ரிஸ்தான் மசூதிக்கு வெளியில்.
2006-ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சரியாக தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது ஒரு குண்டு. சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் களைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்துச் சிதறின. பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
இது மாலேகானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இதற்கு அடுத்த பயங்கரவாத தாக்குதல் 2008 ஆம் ஆண்டின் ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்டது. டிபன் பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட வெடிகுண்டுகள் மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை தான், மதிய தொழுகை முடியும் நேரத்தில் தான் இந்த குண்டுகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக கடமையில் இறங்கிய காவல்துறை இதற்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று வெற்றிலையில் மை போட்டு பார்த்ததைப் போல அடித்துக் கூறியது. இவர்கள் தான் குண்டு வைத்தனர் இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ஒன்பது அப்பாவி முஸ்லீம்களை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆனால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 2012 இல் விடுவிக்கப்பட்டனர். அதாவது, தவறே செய்யாமல் பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்
பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்.
இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் உடனே இந்து பொதுப்புத்தியில் தாடி, குல்லா வைத்த முஸ்லீம் முகங்கள் தான் தோன்றும். அந்த அளவுக்கு இசுலாமியர்களைப் பற்றிய இந்து பெரும்பாண்மையின் கண்ணோட்டம் ஆர்.எஸ்.எஸ் காவிக் கண்ணோட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தை வடிவமைப்பதிலும், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத் தூண்கள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குண்டு வெடிப்புகள் நடக்கும் போதெல்லாம் அநீதியான முறையிலும் ஒருதலை பட்சமாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும் கருத்துக் கருவிகளாகவே இந்த ஜனநாயகத் தூண்கள் செயல்படுகின்றன.
பயம், பீதி, பதட்டம் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இத்தகைய தருணங்களில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தம் பங்கிற்கு தமது சொந்த கற்பனைகளையும், பொய்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வாசகர்களிடம் அள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளுக்கு போட்டியாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்குகின்றன. வெளியில் ஜனநாயக வேடமும் மூளைக்குள் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் புத்தியையும் வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை தீவிரவாதம், பயங்கரவாதம் என்று ஊளையிடும் இந்த அகிம்சாவாதிகள் எல்லாம் இந்து தீவிரவாதிகள், இந்து பயங்கரவாதிகளின் குண்டுவைப்புகளை பற்றி வாய் திறப்பதே இல்லை.
மாலேகான் தாக்குதலுக்கு முன்பும் இதே பாணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், பார்பானி நகரில் உள்ள ரஹ்மத் நகர் மகமதியா மசூதியில் ஒரு தாக்குதலும், 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், புர்ணா நகரின் சித்தார்த் நகரில் உள்ள மிராஜ் உல் உலூரம் மதறாசா மற்றும் மசூதியிலும் இதே போன்ற வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா மசூதியிலும் குண்டுகள் வெடித்தன. 2006-ம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளும் இதே பாணியில் வெள்ளிக்கிழமை, மதிய நேரங்களில் தான் நடத்தப்பட்டன.
அசிமானந்தா சொருகிய ஆப்பு
ஆனால், அடுத்த குண்டு மசூதியில் வெடிக்கவில்லை. ஒரு வீட்டிற்குள் வெடித்தது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் தரோடாவைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டிற்குள் இருந்து வெடித்துச் சிதறியது. பயங்கரவாத தாக்குதல்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதே அந்த குண்டுகள் வெடித்துச் சிதறிவிட்டன. இந்த வெடி விபத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த இருவர் அதே இடத்தில் இறந்தனர், ஐந்து பேர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுகள் ஒளரங்காபாத் மசூதியை தாக்குவதற்காக தயாரிக்கப்பட்டவை என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. அப்போது தான் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வைப்பு சதி வேலைகள் ஓரளவுக்கு வெளியே தெரிந்தன. இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் தேசபக்த ஒப்பாரியும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி விதம்விதமான திரைக்கதைகளையும் எழுதுகின்ற பத்திரிகைகள் எல்லாம் அப்போது கேடுகெட்ட முறையில் உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சித்தன.
அதன் பிறகு குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். மாலேகானில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டு வெடிப்பு தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் பெண் சாமியார் பிரக்யா சிங்கும், இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் மேஜர் ஜெனரல் தகுதியில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்கள் தான் இந்து பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சியளித்துள்ளனர். இவர்களைத் தவிர மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வைப்புகளுக்கு இந்திய இராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கொண்டுவந்து கொடுத்த தேசபக்தர் இவர் தான். இந்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவைப்புகளில் எல்லாம் இவனுடைய பங்கு மிகவும் முக்கியமானது.
பிரக்யா உள்ளிட்டோரின் கைதைத் தொடர்ந்து அதே ஆண்டில் உ.பி மாநிலம் கான்பூரில் வைத்து தயானந்த் பாண்டே என்கிற சாமியார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் 2010-ம் ஆண்டு அசிமானந்தா என்கிற ஆர்.எஸ்.எஸ் சின் முழு நேர ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது தான் இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இவர் தான் குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைப் பற்றிய பல உண்மைகளை முதன்முதலில் வாக்குமூலமாக அளித்தவர். அவருடைய வாக்குமூலத்தில் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வைப்பில் மட்டுமல்ல, 2006 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ்க்கு சொருகப்பட்ட கூர்மையான ஆப்பாக அமைந்தது.
வாயை திறப்பதற்குள் மூச்சை நிறுத்திய ஆர்.எஸ்.எஸ்
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு
இந்துமதவெறிக் கும்பல் மசூதிகளை அடுத்து இரயில்களுக்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டது. அந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, 2007 ஆம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவன் சுனில் ஜோஷி என்கிற ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியன். மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா உள்ளிட்ட அனைத்து குண்டுவெடிப்புகளிலும் மிகப்பெரியதொரு வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்கள் அனைத்திலும் பிரக்யாசிங், ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், அசிமானந்தா, சுனில் ஜோஷி போன்ற கீழ்மட்ட தலைகளில் இருந்து பல உயர்மட்ட தலைகள் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சுனில் ஜோஷியின் கொலை அம்பலப்படுத்தியது.
குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்துமதவெறியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதாலும், ஏற்கெனவே கைதானவர்கள் பல உண்மைகளை கக்கிக்கொண்டிருந்ததாலும், சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷி கைது செய்யப்பட்டால் அவனும் வாக்குமூலத்தில் பல உண்மைகளை கக்கக்கூடும் என்கிற அபாயம் இருந்தது. அவனுக்கு இந்த சதிச் செயலின் மொத்த வலைப்பின்னலும் தெரிந்திருந்தது, யார், யார் பெரிய தலைகள், அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் கைதானால் பல முக்கிய தலைகளே உருளும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாதிகளே சுனில் ஜோஷியை 2007-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் தேவாசில் வைத்து போட்டுத் தள்ளிவிட்டனர். அசிமானந்தா இதையும் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் சுனில் ஜோஷியை கொன்றது பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தான் என்கிற உண்மையும் தெரியவந்தது. இந்த கொலைக்காகவும் பிரக்யா சிங் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.
நீதிமன்றத்தின் காவிப்பாசம்
பிரக்யா தாக்கூர்
போலீஸ் காவலில் பிரக்யா தாக்கூர்
குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இரண்டாவதாக நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பங்காற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தலிக் என்பவன் 2011 ஆம் ஆண்டில் இறுதியாக கைது செய்யப்பட்டான். இவனையும் சேர்த்து இதுவரை பனிரெண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் பல்வேறு குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே என்கிற இரண்டு பேர் இதுவரை பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் வனவாச வாழ்வு முடிந்து வெளியே வருவதோடு அடுத்த முறை பிரதமர் வேட்பாளர்களாகவும் கூட நிறுத்தப்படலாம். சும்மாவா, தியாகம் அல்லவா செய்திருக்கிறார்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட பதினோரு பேர் மீதும் ”மகாராஷ்ட்ரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் ஒரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். இது கடுமையான சட்டப் பிரிவுகளை கொண்டது. இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாசிக் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து ஆண்டுக்கணக்கில் உள்ளே தள்ளுவதில் மகிழ்ச்சி கொள்ளும் நீதி மன்றம், பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளை இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறியதோடு அதை ரத்து செய்து, சாதாரண கோர்ட்டில் நடக்கும் சாதாரண வழக்கைப் போல இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை (அயோக்கியத்தனத்தை) கேட்டதும் பிரக்யாசிங்கின் தந்தைக்கு தலைகால் புரியவில்லை, தனது குடும்பத்தோடு நண்பர்கள் உறவினர்களுக்கு எல்லாம் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு குழுவிடம் மாற்றம்
இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் படை விசாரித்து வந்தது. அது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியும், வேறு சில இஸ்லாமிய அமைப்புகளும் தான் இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று கூறி ஒன்பது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து உள்ளே தள்ளியதோடு வழக்கையும் அத்துடன் ஊத்தி மூடப்பார்த்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு இந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்பு வழக்குகளையும் தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து தேசிய புலனாய்வு குழுவிடம் 2011-ம் ஆண்டு ஒப்படைத்தது.
ராஜேஷ் தவாடே, குல்கர்னி
குண்டு வைப்பில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த ராஜேஷ் தவாடேயும் குல்கர்னியும்.
தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கிய பிறகு தான் ஓரளவுக்காவது உண்மைகள் வெளிவரத் துவங்கின. எனினும் வலதுசாரி கண்ணோட்டமுள்ள இந்திய ஊடகங்கள் முடிந்த அளவுக்கு தமக்கு விருப்பமற்ற இந்த உண்மைகளை மூடி மறைக்கவே பார்த்தன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்பதை தேசிய புலனாய்வுக் குழு ஆதாரங்கள், சாட்சிகளுடன் தனது அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பை 28.12.2012 அன்று வெளியிட்டது. அதன் பிறகு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருந்த இந்து தீவிரவாதிகள் மீதான பிடி இறுக்கமடைந்தது.
இந்நிலையில் இம்மாதம் 23-ம் தேதி இவ்வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மாலேகான் குண்டுவைப்பில் லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை தெளிவுபடுத்தும் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம்மும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகளான புரோஹித், அசிமானந்தா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் பெயர்கள் இக்குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஒரு வேளை இவர்களை தப்பிக்க வைப்பதற்குத்தான் இந்தக் குற்றப்பத்திரிகையா என்றும் தெரியவில்லை. இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நீதி நீதி மன்றத்தில் கிடைக்குமா ?
நாளையே மோடி ஆதரவாளர்களின் விருப்பப்படி பாசிச மோடி பிரதமரானால், இந்த குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பயங்கரவாதிகளும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எந்த குற்றமும் செய்யாத அப்சல் குரு போன்ற அப்பாவிகளின் உயிரை குடித்து தனது வெறியை தீர்த்துக்கொண்ட பாசிச நீதிமன்றங்கள் செயல்படும் இந்தியாவில் இந்துமதவெறியர்களுக்கு எதிராக வழக்கும் விசாரணையும் நடப்பதே பெரிய விஷயம் தான். அந்த வகையில் தேசிய புலனாய்வுக் குழு இந்துவெறியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே நேரத்தில் விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டாலும், குற்றப்பத்திரிகை குற்றவாளிகளை சரியாக அடையாளம் காட்டினாலும் இந்திய நீதிமன்றங்கள் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றங்களை மட்டுமே நம்பி இராமல் அதற்கு வெளியில் கட்டியமைக்கப்படும் மக்கள் போராட்டங்களால் தான் இந்த பயங்கரவாதிகளை தண்டிக்க முடியும்.
- வையவன்

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா


ஈரான் அணுஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி, அதன் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது என்றாலும் பொருளாதாரத் தடையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா தற்போது விதித்துள்ளது. இதற்கான ஆவணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று கையெழுத்திட்டுள்ளார்.


இது வரை இல்லாத வகையில் ஈரானின் பணமதிப்பை குறிவைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது இந்த தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் ஈரானின் பணமதிப்பில் கடும் சரிவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.


இது தவிர ஈரானின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் வாகன உற்பத்திதுறையை குறிவைத்து மற்றொரு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களை வேறு நிறுவனங்கள் ஈரானிடம் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.


ஈரானில் இந்த மாதம் 14-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அமெரிக்கா இந்த புதிய தடைகள் விதித்திருப்பது ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பேஸ்புக்கில் ஆபாச படங்கள்; சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள்!


 சமூகவலையமைப்புகளில் சர்ச்சையில் சிக்குவது இஸ்ரேலிய இராணுவத்துக்கு வாடிக்கையாக போய்விட்டது. ஏனெனில் இவற்றால் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது இஸ்ரேலிய இராணுவம்.
ஒரு பிரச்சினை அடங்கி அதன் சூடு தணிவதற்குள் மற்றைய சர்ச்சை பூதாகரமாக உருவெடுத்து விடுகின்றது.  அதேபோல் ஒரு சம்பவம் தற்போதும் இடம்பெற்றுள்ளது.
ஆம் துப்பாகிகளுடன் உள்ளாடைகள் மட்டும் அணிந்தவாறும், அரைகுறை ஆடையுடனும் படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் வெளியிட்ட இஸ்ரேல் இராணுவ வீராங்கனைகள் சிலரே இச்சர்ச்சைக்கு காரணமாகும்.


இஸ்ரால் நாட்டு செய்தி இணையத்தளமான ‘வாலா’ இப்படங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பெண்கள் இராணுவத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் என்பதுடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள படைத்தளமொன்றைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய படங்கள், காணொளிகளை பகிர்வது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு யுடியூப்பில் இஸ்ரேலிய இராணுவ வீரர் எனக் கூறப்படும் நபரொருவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள பலஸ்தீன பெண்ணொருவரை சுற்றி நடமாடும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பலஸ்தீன சிறைக் கைதியொருவருக்கு அருகில் இருந்தவாறு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனையொருவர் போஸ் கொடுக்கும் படமொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் இவ்வருட ஆரம்பத்தில் பலஸ்தீனத்துக்கு எதிரான கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திருந்தார் இஸ்ரேலிய இராணுவ வீரரொருவர். மேலும் அவரே துப்பாக்கியுடன் நிர்வாண படங்களை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தார். இத்தகைய விடயங்களைக் கருத்தில் கொண்டு முகாமில் சேவையிலிருக்கும் காலப்பகுதியில் சமூக வலையமைப்புகளை தனது இராணுவ வீர, வீராங்கனைகள் உபயோகிக்க இஸ்ரேல் தடை விதித்திருந்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்கள் அத் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் சமூகவலையமைப்புகளில் எவற்றை பகிரவேண்டும் என்பது தொடர்பில் வரைமுறைகள் எதையேனும் இஸ்ரேல் விதித்துள்ளதாக என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
எனினும் தற்போது வெளியாகியுள்ள படங்கள் நிச்சயமாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: