அல்ஜீரியாவில் இருந்து ஆள் பிடித்து அனுப்புகிறது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்! |
! யூதர்களின் சூழ்ச்சி வலை!!!உள்நாட்டு யுத்தம் நடக்கும் சிரியாவுக்குள், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் ‘வேறு விதமான ஆட்டம்’ ஒன்றை ஆடுகிறது என்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது அல்ஜீரியப் பத்திரிகை அல்-பஞ்ர். அல்ஜீரியாவுக்குள் இருந்து இயங்கும் மொசாத் டீம் ஒன்று, அல்ஜீரிய இளைஞர்களை ஒன்றுதிரட்டி, சிரியாவுக்குள் யுத்தம் புரியும் போராளி அமைப்புகளில் ஒன்றில் இணைந்து யுத்தம் புரிய அனுப்பி வைக்கிறது என்கிறது இந்தப் பத்திரிகை. ஆனால், அனுப்பி வைக்கப்படும் அல்ஜீரிய இளைஞர்களுக்கு, தம்மை அனுப்பி வைப்பது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் என்ற விபரம் தெரியாதாம். (தெரிந்தால் போகமாட்டார்கள்) அல்ஜீரியாவில் இயங்கும் ஒரு சலாஃபி ஜிஹாத் இயக்கம், இஸ்லாமிய போராளி இயக்கம் என்ற போர்வையில் இயங்கினாலும், அதை பின்னணியில் இருந்து இயக்குவது, மொசாத் ஏஜென்ட்டுகள் சிலர். இந்த இயக்கத்தில் ஏராளமான அல்ஜீரிய இளைஞர்கள் சமீப நாட்களில் வந்து சேருகின்றனர். அவர்களே, யுத்தம் புரிவதற்காக சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட சலாஃபி ஜிஹாத் இயக்கத்துக்கு, பெருமளவில் நிதி கத்தாரில் இருந்து வருவதாகவும், அந்த நிதியே, அல்ஜீரியர்களை சிரியாவுக்கு அனுப்பி வைக்க செலவு செய்யப்படுகிறது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது அல்-பஞ்ர். இதுதானுங்க, டிபிகல் இஸ்ரேலிய ஸ்டைல்! இஸ்ரேலுக்கு இஸ்லாமியர்களை கண்ணில் காட்டக்கூடாது. ஆனால், இரு இஸ்லாமியத் தரப்புகள் தமக்கிடையே சண்டையிட்டால், அதற்குள் மொசாத் புகுந்துவிடும்!! |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: