Facebook Twitter RSS

 ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: ஈரான் அதிபர் தேர்தலில் ரோவ்ஹானி முன்னணி
  

 
 

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது: ஈரான் அதிபர் தேர்தலில் ரோவ்ஹானி முன்னணி

ஈரான் அதிபராக இருக்கும் முகமது அகமதிநிஜாத் பதவி காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து நேற்று புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில், ரோவ்ஹானி, தெக்ரான் மேயர் முகமது பகர் குவாலிபாப், முகமது ஜலிலி உள்பட 6 பேர் போட்டியிட்டனர். நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் சுமார் 5 கோடி பேர் ஓட்டு போட்டனர்.
தெக்ரான் மற்றும் சில நகரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. எனவே, அங்கு வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதே போன்று, வெளி நாடுகளில் வாழும் ஈரானியர்களின் வாக்குகள், நாடோடிகள் உள்ளிட்டோர் பதிவு செய்த ஓட்டு எண்ணிக்கையும் தாமதமாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஹசன் ரோவ்ஹானி முன்னணியில் இருந்தார். 8 லட்சத்து 61 ஆயிரத்து 866 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இவர் 4 லட்சத்து ஒரு ஆயிரம் ஓட்டுகள் பெற்று இருந்தார். இதன் மூலம் அவர் 46.6 சதவீதம் வாக்குகள் பெற்று இருந்தார். இவருக்கு அடுத்த படியாக குவாலிபாப் 14.6 சதவீதம் அதாவது 1 லட்சத்து 27 ஆயிரம் வாக்குகளும், முகமது ஜலிலி 1 லட்சத்து 19 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இவர்கள் தவிர மற்ற 3 வேட்பாளர்களும் மிக குறைந்த ஓட்டுகளே பெற்றுள்ளனர்.
இந்த தகவலை ஈரான் உள்துறை மந்திரி முஸ்தபா மொகமது நள்ளார் தெரிவித்தார். தற்போது முன்னிலை பெற்றுள்ள ஹசன் ரோவ் ஹானி ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். அணு ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: