சிரியாவில் யுத்தம் புரிந்த ஆட்களை ஓசைப் படாமல் வெளியேற்றுகிறது ஹிஸ்புல்லா!
சிரியாவில் அரசு ராணுவம், போராளிப் படைகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் இடையே உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, ஓசைப்படாமல் ஒரு காரியமும் நடக்கிறது.
அது என்னவென்றால், லெபனானை தளமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம், சிரியாவில் யுத்தம் புரியும் தமது ஆட்களை சிறிது சிறிதாக சிரியாவை விட்டு வெளியேற்ற தொடங்கியுள்ளது என உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த ஹிஸ்புல்லா ஆட்கள் ஆயிரக் கணக்கில் சிரியாவுக்குள் கொண்டுபோய் இறக்கப்பட்டதையும், அவர்கள் அரசு ராணுவத்துக்கு ஆதரவாக யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும், ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதியிருந்தோம். இதுவரை ஆக்டிவ் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இவர்கள்தான், சிரியா யுத்த களத்தைவிட்டு, சிறிது சிறிதாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை லெபனானில் இருந்து சிரியாவுக்குள் ஆயுதங்களுடன் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்த ஹிஸ்புல்லா ஆட்களின் எண்ணிக்கை சுமார் 5,000 இருக்கலாம் என கணிக்கப்பட்டது. அது, குறைந்தபட்ச எண்ணிக்கை. நிஜ எண்ணிக்கை அதைவிட சற்று அதிகமாக இருக்கலாம்.
சிரியாவின் எல்லைப் பகுதிகளில் ராணுவம் யுத்தம் புரியும்போது, ஹிஸ்பொல்லா ஆட்கள், தெளிவாக வேறு சீருடையில், மேலதிக படைப் பிரிவுகளாக நின்று யுத்தம் புரிந்தது அவதானிக்கப்பட்டது (அதையடுத்தே, ஹிஸ்புல்லா ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்டது)
கடந்த வார இறுதியில் நடந்த யுத்தங்களில் இவர்கள் பெரியளவில் தென்படவில்லை.
அதன் பின்னரே, உளவுத்துறை அறிக்கைகள் சப்மிட் செய்யப்பட்டன. சில மேலை நாட்டு உளவுத்துறைகளின் கணிப்பின்படி, சிரியாவில் இருந்து சுமார் 1,500 பேரை ஆயுதங்களுடன் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது ஹிஸ்புல்லா தலைமை.
இன்னமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை வழியாக, கடந்த சில தினங்களாக இரவில் டாங்கிகள்கூட வெளியேறின என்பது, சாட்டலைப் போட்டோக்களில் பதிவாகியுள்ளது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல், ஓசைப்படாமல் நடக்கிறது, இந்த படை நகர்வு.
உளவு வட்டாரத் தகவல்களின்படி, குறைந்தபட்சம் இன்னமும் 3,500 பேர் தமது ஆயுதங்களுடன், சிரியாவில் இருந்து லெபனான் செய்த தயாராகிறார்கள்.
0 comments: