ஹிஸ்புல்லாவின் கைகளில் 2 லட்சம் ராக்கெட்டுகள்! இஸ்ரேலிய பிளான் என்ன?
“ஹிஸ்புல்லா இயக்கம் வைத்திருக்கும் ராக்கெட்டுகள் அத்தனையையும் ஏவினால்,
இஸ்ரேலில் உள்ள அனைத்து வீடுகளையும் தாக்க முடியும்” இவ்வாறு
கூறியிருப்பவர், ஹிஸ்புல்லா இயக்கத்தின் தளபதி அல்ல, இஸ்ரேலிய உள்ளக
பாதுகாப்பு அமைச்சர்.
சமீபகாலமாக இஸ்ரேல், ஹிஸ்புல்லா இயக்கம் தமது நாட்டை தாக்கக்கூடிய
அச்சுறுத்தல் உள்ளது என அடிக்கடி கூறத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில்
அமைந்துள்ளது இன்று (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேலிய உள்ளக பாதுகாப்பு அமைச்சர்
கிலியாட் எர்டனின் பேச்சு.
இஸ்ரேலிய பாதுகாப்பு தொடர்பாக இன்று பர்-இலான் பல்கலைக்கழகத்தில் நடந்த
கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எர்டன், “எமக்கு கிடைத்துள்ள
உளவுத் தகவல்களின்படி, ஹிஸ்புல்லா இயக்கத்திடம் கையிருப்பில் 200,000
ராக்கெட்டுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் சேர்த்து வைத்திருக்கும்
ராக்கெட்டுக்களின் எண்ணிக்கை, இந்த அளவுக்கு வந்துள்ளது.
இவற்றை அவர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவினால், இஸ்ரேலின் அனைத்துப் பகுதிகளிலும்
உள்ள அனைத்து வீடுகளையும் தாக்க முடியும். இதைத் தடுப்பதற்காக அடுத்த சில
வாரங்களில் கடுமையான உள்ளக பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளோம்”
என்று கூறியுள்ளார்.
ஹிஸ்பொல்லாவிடம் 2 லட்சம் ராக்கெட்டுகள் உள்ளனவோ, இல்லையோ என்று தெரியாது.
ஆனால், இவர்கள் (இஸ்ரேல்) ஏதோ வில்லங்கமான பாதுகாப்பு சட்டம் ஒன்றை
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போகிறார்கள் என்பது மட்டும் நன்றாகப்
புரிகிறது.
0 comments: