Facebook Twitter RSS


கஷ்மீரியாக இருப்பதால் குற்றவாளி என்பது அரசின் வரைவிலக்கணம்!-சி.ஆர்.பி.பி குற்றச்சாட்டு!...


கஷ்மீரை சார்ந்தவர் என்றால் குற்றவாளி தான் என்று அரசு வரைவிலக்கணம் வகுத்துள்ளது என்பதற்கு ஆதாரம் தான் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கு என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபடும் சி.ஆர்.பி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சி.ஆர்.பி.பியின் செயல் தலைவர் எஸ்.ஏ.ஆர் கிலானி, பொது செயலாளர் அமீத் பட்டாச்சார்யா, மக்கள் தொடர்பு செயலர் ரோணா வில்ஸன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 10 கஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஊடகங்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் நடந்து கொண்டன. ஆனால், இவ்வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரின் மரண தண்டனையை 16 வருடங்களுக்குப் பிறகு டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள செய்திக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று சி.ஆர்.பி.பி குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்களின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டோருக்கு தண்டனை வழங்கியது. மூன்று பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இதர இரண்டு நபர்கள் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அதே வேளையில் இவ்வழக்கில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நான்கு பேரை 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலை செய்துள்ளது. 14 ஆண்டுகள் இவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது நீதிபீடம் மற்றும் அரசின் கிரிமினல் குற்றமாகும். தற்பொழுது 16 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 2 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஒருவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. குண்டு வெடிப்பு வழக்கை போலீஸ் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்றும், போதிய ஆதாரங்களை சேகரிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது புலனாய்வு ஏஜன்சிகள் சட்டத்தை மீறுகின்றார்கள் என்பதற்கான ஆதாரமாகும். கஷ்மீரியாக இருப்பதே குற்றம் என்ற அரசின் வரைவிலக்கணத்திற்கு இதனை ஆதாரமாக கருதலாம். இவ்வாறு கஷ்மீர் இளைஞர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. கஷ்மீரிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களும், அரசும் பிரச்சாரம் செய்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக சீர்திருத்தவாதிகளும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரும் குரல் எழுப்ப வேண்டும். வகுப்புவாதமயமாக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சிகளும், ஊழலில் மூழ்கிய நீதிக் கட்டமைப்பும், அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் ஊடகங்களும் கஷ்மீரிகளுக்கு கொடுமை இழைக்கின்றன. மரண பீதியில் 2 ஆண்டுகள் சிறையில் இருப்பது ஒரு சித்திரவதையாகும். முன்னர் அமல்படுத்திய மரண தண்டனைகள் தவறானது என்று உச்ச நீதிமன்றமே ஒத்துக்கொண்டது. முன்னேற்றமடைந்த நாடுகள் தடை செய்த மரண தண்டனை காரியத்தில் இந்தியா, எதிரான முடிவை எடுத்துள்ளது. மரண தண்டனை ரத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அங்கீகரிக்க இந்தியா தயாரில்லை. இந்த தீர்மானத்தில் கையெழுத்திட இந்திய அரசை நிர்பந்திக்கும் பொறுப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு உண்டு என்று சி.ஆர்.பி.பி கூறியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: