சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் |
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலின் அண்டை நாடான சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. போராளிகளும், ராணுவத்தினரும் ஒருவர் மீது மற்றொருவர் ஏவுகணை வீசி தாக்கிக் கொள்வது அன்றாட வாடிக்கையாகி விட்டது.சில ஏவுகணைகள் இலக்கு தவறி அண்டை நாடான இஸ்ரேல் பகுதிக்குள் விழுவது உண்டு. இது, தற்செயலாக நடந்த விபத்து என கருதி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிரியா மீது இஸ்ரேல், முதன்முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 1967-ம் ஆண்டு சிரியாவுடன் போரிட்ட இஸ்ரேல், சிரியாவிடமிருந்து கோலன் என்ற பகுதியை கைப்பற்றி, தனது நாட்டு எல்லையுடன் இணைத்துக் கொண்டது. இந்த பகுதிக்குள் சிரியாவிலிருந்து ஒரு மர்மப்பொருள் வந்து விழுந்தது. இதற்கு இஸ்ரேல் சிரியா மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: