காங்கோ: போராளிகள் மீது ஐ.நா. விமானப்படை தாக்குதல் |
காங்கோ நாட்டில் கடந்த ஒரு மாதமாக எம்.23 போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த 15-ம் தேதி வடக்கு கிவு மாகாணத்தில் நடந்த மோதலில் 113 போராளிகள் கொல்லப்பட்டனர். காங்கோ தலைநகர் கோமாவில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ருகாரி என்ற இடத்தில் நேற்ற போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே வெடித்த நேரடி மோதலில் 151 போராளிகள் கொல்லப்பட்டனர். 2 ராணுவ உயர்அதிகாரிகள் பலியாகினர். எம்.23 போராளிக் குழுவை உகாண்டாவும், ருவாண்டாவும் ஆதரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டி வருகின்றது. இதனை அந்நாடுகள் மறுத்து வருகின்றன. நேற்று நடைபெற்ற மோதல்களை தொடர்ந்து ஐ.நா. படையின் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 'மோனுஸ்கோ' என பெயரிடப்பட்டுள்ள ஐ.நா. படையின் தாக்குதல் ஹெலிகாப்டர்கள், இன்று காலை கிகும்பா என்ற இடத்தில் உள்ள போராளிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் குறித்து வடக்கு கிவு மாகாண கவர்னர் கூறுகையில், 'ருவாண்டா ராணுவத்தில் ஆதரவு பெற்ற 3 ஆயிரத்து 500 எம்.23 போராளிகள் இன்று அதிகாலை ராணுவத்தளம் மீது ஆவேச தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக, மோனுஸ்கோ ஹெலிகாப்டர்கள் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளன' என்றார். |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: