சிரிய எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இஸ்லாமிய போராளி குழு அறிவிப்பு |
மேற்குலக நாடுகளின் பின்புலத்துடன் இயங்கும் எதிர்க்கட்சியினரை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அலப்பு நகரிலிருந்து இயங்கும் இஸ்லாமிய ஆயுதக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. சிரியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதே தமது நோக்கம் என இஸ்லாமிய போராளி குழுவினர் தெரிவித்துள்ளனர். இணையம் ஊடாக வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரிய எதிர்க்கட்சிக் கூட்டமைப்பிற்கு உலகின் பல நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன. திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் சிரியாவில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: