போலி ஜனநாயகம் ....
ரோஹிஞ்சா ஆதரவு நிலைப்பாடு எடுக்க முடியாது: சூ சீ
பர்மாவிலே நாட்டின் மேற்குப் பகுதியில் நடந்துவருகின்ற இனக்கலவரங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் மக்கள் சகிப்புத் தன்மையையும் சுயகட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ சீ தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ரோஹிஞ்சா இன முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்கள் தொடர்பில் ஒரு நிலைபாட்டை எடுக்க சூ சீ மறுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினையின் ஊற்று எது என்று ஆராய்வதற்கு முன்பாக ரோஹிஞ்சாக்களுக்கு ஆதரவாக தான் கருத்து கூறினால், தனக்கு இருக்கின்ற தார்மீக தலைமைத்துவத்தை தான் துஷ்பிரயோகம் செய்வதாகப் போய்விடும் என்று பிபிசியிடம் அவர் கூறினார்.பர்மாவில் நடந்துவரும் இன வன்முறைகள் காரணமாக ரோஹிஞ்சாக்கள் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது.
ரக்கைன் மாநிலத்தில் அண்மையில் வெடித்த ஒரு மதக் கலவரத்தில் கிட்டத்தட்ட தொண்ணூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரோஹிஞ்சாக்களும் சரி பௌத்த மதத்தினரும் சரி இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டிருக்கத்தான் செய்கின்றனர், எனவே ஒரு சாரார் பக்கமாக பேசுவது தான் செய்கின்ற வேலையல்ல என்று சூ சீ குறிப்பிட்டார்.
பர்மாவில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சுமார் 8 லட்சம் பேருக்கு பிரஜாயுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இவர்களை பௌத்த மத பர்மீயர்கள் வங்கதேசத்திலிருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகளாகவே கருதுகின்றனர்.
0 comments: