முதலில் தன் நாட்டை சுத்தம் செய்யட்டும் பிறகு மற்ற நாட்டை சுத்தம் செய்யவும்.....
இது தான் அமெரிக்காவின் லச்சணம்
அமெரிக்க விமான படையில் 50 பெண்களை கற்பழித்த அதிகாரிக்கு 20 ஆண்டு சிறை!
லேக்லாண்ட்: அமெரிக்க விமான படையில் பயிற்சிக்கு வந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிகரிக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லேக்லாண்ட் என்ற இடத்தில் விமான படை பயிற்சி தளம் உள்ளது. விமான படைகளுக்கு தேர்வான நபர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பயிற்சிக்கு வந்த பெண்களிடம், பயிற்சி கொடுக்கும் அதிகாரிகள் தவறாக நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாரி ஒருவர் 35 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பயிற்சி பிரிவின் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பல கட்ட விசாரணையில் இதுவரை 50 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேசிய பயிற்சி துறை தளபதி எட்வர்ட் ரைஸ், விமான படையில் பாலியல் வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். பயிற்சிக்கு வந்த பெண்களை சீரழித்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல பெண்களை கற்பழித்த லூயிஸ் வாக்கர் என்ற அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments: