Facebook Twitter RSS

இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள்

இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள்

"ன்று முஸ்லீம்களின் நிலை இப்படி இ
ருக்கிறது ; சுலபமாக இருக்கின்ற 
இஸ்லாமியச் சட்டங்களை அவர்கள் 
மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் 
கொள்கிறார்கள். ஆனால் இஸ்லாத்திற்கும் குஃப்ருக்குமிடையில் அடிப்படையான மோதல் 
ஏற்படும் கட்டத்தில் தமது முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் . தாம் இஸ்லாத்தில் தாம் பூரணமாக இருக்கிறோம் என
 கூறிக்கொள்ளும் பெரிய ,பெரிய ஆசாமிகளிடமும் இந்தப்
 பலவீனம் இருக்கிறது .

         'இஸ்லாம் ,இஸ்லாம் என அவர்கள் உரத்து சத்தம் போடுவார்கள் .
 அதற்கு விளக்கம் கொடுத்து கொடுத்து அவர்களின் நாவு வறண்டு போய்விடும் .
இதற்காக அவர்கள் சிறிது பகட்டான வேலைகளும் செய்வார்கள் ! 
ஆனால் அவர்களிடம் "இஸ்லாத்தின் சிறப்பை நீங்கள் இவ்வளவு 
பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் , அதற்குள் உங்களையும் நம்மையும்
 பூரணமாக உட்படுத்தும் ஒரு செயல் திட்டம் பற்றி நாம் சிந்திக்கலாமா ?"
 என்று கேட்டுப் பாருங்கள் ! உடனே அவர்கள் ,"இதில் தற்போது பாரிய 
சிரமம் இருக்கிறது !? இப்போதைக்கு விடயங்கள் அப்படியே இருக்கட்டும்"
என்று கூறி விடுவார்கள் !?

           இதன் கருத்து என்ன ? பூரண இஸ்லாம் என்பது ஒரு கவர்ச்சி
 கரமான பொருள் ;அதனை முகட்டின் மேலே தனியாக (கடந்த வரலாறாக 
)வைத்து விடுங்கள் ; (அதன் தவிர்க்க முடியாத சொந்தக்காரர்களாக
  ரசித்து ருசித்து) அதற்கு தூரத்தில் இருந்து கொண்டு) பாராட்டிக்
 கொண்டிருக்கலாம் . நம்மீது அதனை சுமத்த முயற்சிப்பது ( ஏதோ
 தற்கொலைத் தனமானது ) சிரமமானது (அல்லாஹ்வே விடயத்தை
 சுலபமாக்கித் தரும் வரை ) இந்த பேச்சுக்கே இடமில்லை என்பதா !? ......
                                                                        (ஒரு இஸ்லாமிய அறிஞர் )

                                                                     வஹி வரைந்த பாதை ,அதை
 நடைமுறைப் படுத்த எம் முன்னோர்கள் கண்ட சோதனைகள் என்பவற்றை
 மறந்து ,எதோ பேச்சளவில் இஸ்லாம் என்றும் பொருந்தும் எனக் கூறி
 தற்போது வாழ்வியலில் 'ஜாஹிலீயத்தின்' மேலாதிக்கத்தை ஒரு
 'அட்ஜஸ்ட்மண்டாக ' சரிகண்டு அவர்களின் விருப்பப் படி எமது
 இஸ்லாம் மார்க்கத்தை வெறும் மதமாக பூஜிக்கும் எம்மவர்கள்
 சற்று சிந்திக்க வேண்டும் .

                                தனது மூக்கு நுனிவரை (பெயரளவில் ) எமக்கு
 சுதந்திரத்தை வழங்கியுள்ள குப்ர் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு மாற்று 
 சித்தாந்தம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .அது அதன் பிரத்தியோகமான
 அரசியலில் இருந்து அதிகாரத்தையும் , அதற்கான வாழ்வியல்
 நோக்கிய ஒரு தெளிவான நாகரீகத்தையும் மனித வாழ்வியலுக்காக 
வரிந்து கட்டிக் கொண்டு வாழ விரும்பினால் வாழு என்பது தான் குப்ரின் 
முடிவு .

                    இறைவன் எமக்களித்த பிரதி நிதித்துவ (கிலாபா ) 
அரசியலையும் , முழு முஸ்லீம் உம்மாவுக்குமான பிரதி நிதித்துவ (கலீபா )
 ஓர் தலைமை அதிகாரத்தையும் ,அதன் மூலம் எல்லாம் வல்ல
 இறைவன் பூரணமாக அவன் விரும்பிய பிரகாரம் வாழ வஹி
 மூலம்  கட்டமைத்து தந்த இஸ்லாமிய நாகரீகத்தையும்
 முஸ்லீம்களாகிய நாம் கைவிட வேண்டும் என்பதே குப்ர்
 எம்மீது தொடுத்துள்ள போர் ஆகும் .

                       இந்தப் போரை நாம் எவ்வாறு எதிர் கொள்வது !? 
இதுதான் இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை . ஏறத்தாழ
 கீழ்வரும் தீர்வுகளே எம்மவர்களால் முன்வைக்கப் படுகின்றது . 

 1. நாங்கள் சில அடிப்படை இபாதாக்களையும் ,அஹ்லாக்குகளையும்
 பேணுவோம் காலத்தால் அல்லாஹ் (எதோ மந்திரத்தால் பறிக்கும் 
மாங்காய் போல) எமக்கு வெற்றியை தருவான் எனக் கூறி கீழ்வரும்
 அல்குர் ஆன் வசனத்தையும் ஆதாரம் காட்டுகிறார்கள் 

   "உங்களில் ஈமான் கொண்டு நற்செயல்கள் (அமலுஸ் சாலிஹாத் )
 புரிகிறார்களோ அவர்களை , அவர்களுக்கு முன்னிருந்தவர்களை
 ஆட்சியாளர்கள் ஆக்கியபோல் ,  இவர்களையும் நிச்சயமாக  பூமியில்
 ஆட்சியாளர்களாக ஆக்குவதாகவும் ,இன்னும்   அவர்கள் பொருந்திக் 
கொண்ட(இஸ்லாம் ) மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக   நிலைப்படுத்துவதாகவும் , அமைதியையும் ,பாதுகாப்பையும் கொண்டு அவர்களுடைய  பயத்தை
 மாற்றி விடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் "       
                                                                             ( சூரா அல் நூர் : வசனம் 55)

    
   
                                                                     அமலுஸ் சாலிஹாத் என்பது
  வெறும் அடிப்படை இபாதாக்கலான( தொழுகை , நோன்பு ) போன்ற
 சிலவிடயங்களையும் ,இன்னும் சில அஹ்லாக்குகளையும் செய்வது
 மட்டுமல்ல ,வஹியின் திட்டமிட்ட எல்லா நகர்வுமே ஆகும் . (அது 
'அர்க்கம் (ரலி)யின் வீட்டை தேடிச் சென்றது முதல் அபீசீனிய நகர்வு ,
 அகபா ,பையதுர் ரிள்வான் போன்ற ஒப்பந்தங்கள் , ஜிஹாதியக் களங்கள் ,
அதில்  கொல்லுதல் ,கொல்லப்படுதல் இப்படித் தொடரும் ) இப்படிதான் எம் 
முன்னோர்கள் மார்க்கத்தை விளங்கி இருந்தார்கள் விளக்கினார்கள் , 
நடைமுறையில் காட்டினார்கள் . சுன்னாவை புறக்கணித்து இஸ்லாம் பேசும்
 இந்தத் தவறை விட்டு விடுவோமா !?

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: