சிரிய போராளிகளினால் இஸ்ரேலிய இராணுவ சாவடி கைப்பற்றப்பட்டுள்ளது!
சிரியாவில் சண்டையிடும் முஜாஹித்களின் அணியொன்று சினாயில் கொடியை
நாட்டியது பற்றி நாம் ஏற்கனைவே தெரிவித்திருந்தோம். இப்போது அவ்வணியினர்
எகிப்து இஸ்ரேல் எல்லையான, இஸ்ரெலினால் கைப்பற்றப்பட்ட கோலான் குன்று
பகுதியில் உள்ள disengagement line-ஐ கடந்து இஸ்ரேலிய இராணுவத்தின் சோதனை
சாவடியை கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னர் இஸ்ரேலிய எல்லை ரோந்து காவல்
படையணியை இடை மறித்து தாக்கியுள்ளனர். இதனால் பரஸ்பரம் துப்பாக்கி
பிரயோகம் இரு தரப்பினரிற்கும் இடையில் நடந்துள்ளது. இஸ்ரேலினுள் சென்று
அதன் சோதனை சாவடியை கைப்பற்றிய இந்த முஜாஹிதா அணி யார் என்பது
உறுதியாக தெரியவில்லை.
இந்த சோதனை சாவடியானது இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் நிரந்தர மையமல்ல.
ரோந்தில் ஈடுபடும் யூத படையினர் சற்று தரித்திருந்து அவதானிப்புக்களை மட்டும்
மேற்கொள்ளும் ஒரு தளமாகும். போராளிகள் இதனுள் சென்ற போது அங்கே இஸ்ரேலிய
படையினர் இருந்திருக்கவில்லை.
துப்பாக்கி சண்டைகளில் இரு தரப்பினரிற்கும் இழப்பு ஏற்படவில்லை. மேலதிக
இஸ்ரேலிய தாக்குதல் படையினர் அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் போராளிகள்
அந்த ஆர்மி போஸ்டை கைவிட்டு மீண்டும் சிரிய எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
இந்த நிகழ்வை இஸ்ரேல் ஆத்திரத்துடன் கண்டித்துள்ளது. சிறப்பு படையின் கோலான்
எல்லை பகுதிக்குள் அனுப்பப்படுவர் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. “எமது மண்ணில்
முஸ்லிம் பயங்கரவாதிகளின் சப்பாத்துக்கள் நுழைய அனுமதியில்லை. மீறினால்
அவர்கள் அழிக்கப்படுவார்கள்” என அது முழங்கியுள்ளது.
எல்லாம் சரி. அது என்ன “எமது மண்”?. முஸ்லிம்களின் மண்ணையல்லவா
இஸ்ரேல் அத்துமீறி அபகரித்துள்ளது. இப்போது அந்த மண்ணின் சொந்தக்காரர்கள்
வந்துள்ளார்கள். அவ்வளவுதான்.
0 comments: