அமெரிக்காவின் சிரியா மீதான தாக்குதல் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பமாகலாம் !!
இஸ்ரேலிய பத்திரிகையில் அமெரிக்கா சிரியா மீதான தனது நீண்ட நாள் தாக்குதல் கனவை இன்று முதல் (08/31/2013) ஆரம்பிக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது. அதனையடுத்து தொடர்தாக்குதல்கைள அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபரை சந்திக்கும் புதன்கிழமையின் (4/9) பின்னர் தொடர் தாக்குதலாக நீடிக்கலாம் என இன்போ வோர் எனும் இஸ்ரேலிய நாளேடு தெரிவித்துள்ளது. இன்போ வோர் எனும் நாளேடானது அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளுடனும் இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரிகளுடனும் மிக நெருங்கிய உறவுகளை கொண்டுள்ள நாளேடாகும். ஈராக்கிய யுத்தம், லெபனான் சண்டைகள், லிபிய விவகாரம் போன்ற பலவற்றில் இது குறிப்பிட்டது போன்றே அமெரிக்க தாக்குதல்கள் அமைந்திருந்தன. அந்த வகையில் இந்த நாளேட்டின் கணிப்புக்களை புறந்தள்ள முடியாத நிலையுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டு தேசங்களும் சிரியா மீதான தாக்குதலிற்கான முழு அளவு தயாரிப்புக்களை செய்துள்ளன. இந்த தாக்குதலின் முதற் கட்டமாக சிரியாவினுள் தரைப்படைகளை நகர்த்தி உள் நுழையாமல் போர்க்கப்பல்களில் இருந்தும், நீர்மூழ்கிகளில் இருந்தும் Tomahawk cruise ஏவுகணைகளை வீசி சிரியாவின் இனங்காணப்பட்ட முக்கிய இலக்குகளை தகர்த்தழிப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மொஸாட்டின் முன்னாள் இயக்குனர் Danny Yatom இது பற்றி தெரிவிக்கையில் எல்லாம் தயாராகவே உள்ளது. பச்ச சமிக்ஞை மட்டும் எஞ்சியுள்ளது. அதுவும் கூட காட்டப்பட்டு விடும்,ஆனால் பஸர் அல்-அஸாத் சிரியாவில் உள்ள ஐ.நா.வின் இரசாயன பரிசோதகர்கள் குழுவை ஹியூமன் சீல்ட்டாக பிடித்து வைத்து விடாத வரை. அவர்கள் சிரியாவில் இருந்து வெளியேறிய எந்த நிமிடமும் எமது ஏவுகணைகள் சிரியாவை நோக்கி சீறிப்பாயும் என்கிறார்.
அமெரிக்க தாக்குதல்களிற்கு பதிலாக அமெரிக்காவை தாக்க வல்லமை கொண்டில்லாத சிரியா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி சண்டையை இன்னொரு களம் நோக்கி நகர்த்த முற்படும். அவ்வாறு இஸ்ரேல் மீது விழும் ரஷ்ய ஏவுகணைகள் இஸ்ரேலில் அழிவுகளை உருவாக்கினால் மூன்றாம் அணியாக அமெரிக்க பிரித்தானிய படைகளுடன் இணைந்து சிரியாவை தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் கொண்டுள்ளது.
0 comments: