Facebook Twitter RSS

சினாயின் முஜாஹித்களை சுட மறுத்த எகிப்திய படையினரை சுட்டுக்கொன்றது ஜெனரல் சிசியின் உளவுப்படை!!


எகிப்தின் 24 பொலீஸாரை நிற்க வைத்து சுட்டுக்கொன்றது - அல்காயிதா
 என்ற தலைப்பில் நாம் இருதினங்களிற்கு முன்னர் (கடந்த செவ்வாய்கிழமை)
செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி
அல்-காயிதா போராளிகள் அதனை செய்யவில்லை என்றும், எகிப்தின்
 இன்றைய இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் சிசியின் உளவுப்பிரிவினரே
இந்த கொலையினை செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

சினாயில் அல்-காயிதா போராளிகள் தளமமைத்து செயற்படுவதன் காரணமாக
 அவர்களை அழித்தொழிக்கும் நோக்கில் எகிப்தின் முப்படைகளும் சினாய்
நோக்கி நகர்த்தப்பட்டன. பல இடங்களில் சினைப்பர் தாக்குதல்கள், வான்
தாக்குதல்கள் போன்ற நடைபெற்றுள்ளன. போராளிகள் தப்ப முடியாதபடி
“ஹியூமன் சீல்” அமைத்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன எகிப்திய
படையினர்.

இஸ்லாமிய போராளிகளை தாக்குவதற்கும், அவர்களிற்கு எதிரான
 நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மறுத்த எகிப்தின் பொலீஸார், இராணுவ
 அதிகாரிகள் என மொத்தமாக 24 பேரை ஒரு பஸ்ஸில் கொண்டு சென்று
 வீதயருகில் நிறுத்தி அவர்களின் தலைகளில் சுட்டுத்தள்ளியுள்ளது ஜெனரல்
 சிசியின் உளவமைப்பு. அடால்ப் ஹிட்லிரின் இரகசிய பொலீஸார் போன்றே
இவர்களும் செயற்பட்டுள்ளனர்.

24 பேர் என்பது ஒரு கணக்கு மட்டுமே. கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு
படுகொலை செய்யப்பட்ட படையினர் பல நூறு பேர் வரையுள்ளனர்
எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இவர்கள் அனைவரும் சினாயின்
 முஜாஹித்களிற்கு எதிரான தமது துப்பாக்கிகளை இயக்க மறுத்தமையினால்
அதே துப்பாக்கிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளுன்னர்.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: