Facebook Twitter RSS

வேதனைக்குள்ளாக்கப்படும் 'மேலப்பாளையம்' முஸ்லிம்கள் : அ.மார்க்ஸ்


வடநாட்டில் "ஆசம்கர்" போல, தமிழ்நாட்டில் மேலப்பாளையம் ஆகிவிட்டது, நாட்டில் எங்கு எது நடந்தாலும

 மேலப்பாளையத்திற்கு வந்துவிடுகிறது போலீஸ்.

பெங்களூரு சம்பவத்தின்போது ஊரிலேயே இல்லாத "கிச்சான் புகாரி" இன்று கன்னடச் சிறையில்.

தமிழ்நாடு போலீசின் ஒத்துழைப்புடன். கடும் சித்திரவதைகள் வேறு.

இப்போது அத்வானி வருகை.

அத்வானி தமிழ்நாட்டுக்கு வந்தாலே போதும். அவர் பத்திரமாகத் திரும்பிப் போகும்வரை முஸ்லிம்களின் பாடு பரிதாபம்தான்.

அதுவும் இப்போது இந்துத்துவவாதிகள் கொலை செய்யப்படுவதற்கு (உண்மைக் காரணம் ரியல் எஸ்டேட்டாக இருந்தாலும் கூட) முஸ்லிம்கள் தான் காரணம் என்கிற கருத்தை அவர்கள் பரப்பிவருவதும்,

அதற்குத் தமிழ்ப் பத்திரிக்கைகள் ஒத்தூதுவதும் இன்று மேலப்பாளையம் முஸ்லிம்களின் தலையில் விடிந்திருக்கிறது.

"கையில் வெடிகுண்டுகளுடன் திரியும் தீவிரவாதிகள்" எனக் கொஞ்சமும் இரக்கமின்றி அட்டைப்படக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது 'நக்கீரன்'.

எந்தக் கருத்துச் சுதந்திரவாதிகளும் அதைக் கண்டிக்கவில்லை.

அவர்களைப் ஒருத்தவரையில் இப்படியெல்லாம் எழுதுவது பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரம். 'விஸ்வரூபம்' பிரச்சினையில் அப்படித்தானே நடந்துகொண்டனர்.

இன்று பெரிய அளவில் சோதனை என்கிற பெயரில் மேலாப்பாளையம் முஸ்லிம்கள் துன்புறுத்தப் படுவதாகச் செய்திகள் வருகின்றன.

போலீஸ் சொல்வதை அப்படியே
பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

வெடிமருந்துகள் வீடுகளில் கைப்பற்றப்பட்டால், முறையாக சாட்சிகள் முன்னிலையில் அவற்றைக் கைப்பற்ருவது அவசியம். வீடியோகிராஃப் செய்வதும் முக்கியம். அப்படியெல்லாம் செய்யப்படவில்லை, என அங்கிருந்து செய்திகள் வருகின்றன.

(ஊடகங்கள், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அறிவிக்கப்படாத போரை சத்தமில்லாமல் செய்து வருகிறதோ என்று ஐயம் கொள்ளுமளவிற்கு ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை பரப்பரப்பிற்காக பரப்பி வருவது வேதனையளிக்கிறது.

இந்த புலனாய்வு பத்திரிக்கைகளின் தரமும் உள் நோக்கமும் அறிய, பழைய இதழ்களை வாசித்தாலே போதும். கடந்த கால குண்டுவெடிப்புகளை ஒட்டிய செய்திகளையும் கட்டுரைகளியும் நோக்கும் போது,

இவர்கள் எவ்வாறு மேம்போக்காக கற்பனைகளையும் புனைவுகளையும் புரட்டுகளையும் கொண்டு கட்டுரை வடிக்கிறார்கள் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகிறது.

சிறுபான்மை சமூகம் என்பது பாரபட்சத்தையும் அநீதங்களையும் அடக்குமுறைகளையும் சகித்து சகித்து நடை பிணமாகி விடுமோ என்கிற அளவிற்கு இங்கு நிலைமை இருக்கிறது.)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: