சிரியாவின் Lattakia மாகாண தலைமை முஃப்திக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது ஜபாஃ அல் நுஸ்ரா!
சிரிய படைகள் டமஸ்கஸ் மாகாணத்தில் உள்ள East Ghautah பகுதியில் அஹ்லுல் சுன்னாவில் உள்ள முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொண்ட கொடூரமான விஷவாயு தாக்குதலில் 1700 பேர் துடிதுடித்து மரணித்தனர். மேலும் 6000 பேர் இதன் பாதிப்பிற்கு உள்ளாகினர். இன்று வரை மயக்க நிலையில் இருந்து மீளாதவர்களும் உள்ளனர். சுவாச தொகுதி பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிற்காக பலர் போராடி வருகின்றனர். இந்த படுகொலைக்கு பதிலடியாக ஜபாஃ நுஸ்ரா பஸர் அல்-அஸாதின் விசுவாசியும் சிரிய அரசிற்காக செயற்பட்டவருமான Lattakia மாகாண தலைமை முஃப்தி Badr Wuhaib Ghazal-இற்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஜபாஃ அல் நுஸ்ராவின் அமீர் Sheikh Abu Muhammad al-Jaulani இந்த மரண தண்டனைக்கான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரது உத்தரவில் பிரகாரம் பத்ர் வுஹைப் கஸலிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுஸ்ராவின் அமீர் ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளார். “இஸ்லாத்தின் எதிரியும், இன்றைய கொடிய தாகூத்களில் ஒருவனுமான பஸர் அல்-அஸாதினை ஆதரித்ததுடன் அஹ்லுல் சுன்னாவில் உள்ள முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை சரியென வாதிட்டவருமான இஸ்லாத்தின் துரோகிக்கு கண்ணுக்கு கண் என்ற தீர்வினடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்” என்பதே அது.
0 comments: