Facebook Twitter RSS

ஹோம்ஸை இழந்தமையும் F.S.A.யின் துரோகமும்!!


சிரியாவின் வரலாற்று சண்டைக்களமான ஹோம்ஸின் பல பகுதிகளை அரச படையினர் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் 20 இற்கும் அதிகமாக ஹோம்ஸ் நகரை நோக்கி சிரிய ஏவுகனை படைப்பிரிவினரால் ஏவப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் பல டன்கள் எடையுடையவை. ஹோம்ஸின் வடமுனையில் 70 யுத்த டாங்கிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பீரங்கி தாக்குதல்களை நடாத்தியுள்ளன.


60 இற்கும் அதிகமான ஆட்டிலறிகள் விடாமல் ஷெல்களை ஏவியுள்ளன. இவற்றிற்கும் மேலதிகமாக ரஷ்ய பைலட்டுக்களால் ஓட்டப்பட்ட தாக்குதல் விமானங்கள் வானிலிருந்து ஏவுகனை தாக்குதல்களையும் வெடிகுண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளன. இதன் பின்னரே சடுதியாக சிரிய படையினர் இஸ்லாமிய போராளிகளின் அரண்களை உடைத்து கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

உள்நுழைந்த சிரிய படையினருடன் ஹிஸ்புல்லாஹ் கெரில்லா படையணியினர் 2000 பேர் நகர் சண்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.

காப்பரண்களை இழந்த நிலையில் இரண்டாம் நிலை காப்பரண்களில் நிலை கொண்ட போராளிகளால் ஏவுகணைகள் வந்து விழ ஆரம்பித்தவுடன் தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தற்காப்பு தாக்குதல் நடாத்தி அழிவதா அல்லது பின்வாங்கி விடுவதா என்ற இரண்டு தேர்வுகள் அவர்கள் முன் எழுந்துள்ளன.

ஹோம்ஸின் சிரிய படைகள் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 13 நிலைகளில் 9 நிலைகள் F.S.A. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

எனைய 04-ல் 03 நிலைகள் அல் பாரூக் படையணியிடமும், ஒரு நிலை உள்ளூர் போராளிகளின் வசமும் இருந்தன. பெரும் வெடிப்புக்களை சிரிய அரச படையினர் நிகழ்ந்த ஆரம்பித்த போது தான் அந்த துரோக நாடகமும் அரங்கேறியது.

விமானத்தாக்குதலிற்கு முன்னதாகவே  F.S.A. அணியின் 06 முனைகளில் இருந்த படைப்பிரிவுகள் ஹோம்ஸை விட்டு  பின்வாங்க ஆரம்பித்து விட்டன.

இரண்டாம் நிலை காப்பரண்களிற்கு பின்வாங்கிய அல்-பாரூக் அணியினர்  F.S.A. போராளிகளிடம் உதவி கோரிய போது அவர்கள் அதற்கு இணங்கவில்லை. முன்னேறும் ஹிஸ்புல்லாக்களை உள்வாங்கி அழிக்கும் தாக்குதல் திட்டத்தை வழங்கிய போது அந்த திட்டம் சிரிய படையினரிற்கு  F.S.A. அணியினரால் கடத்தப்பட்டுள்ளது. 

ஹோம்ஸ் இழக்கப்பட்ட வரலாறு இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஷியாக்களின் இலக்கான ஹோம்ஸின் காலித் இப்னு வலீத் மஸ்ஜித் இருந்தது. அதனை தரைமட்டமாக்குவோம் என சூளுரைத்தபடியே ஹிஸ்புல்லாக்கள் முன்னேறினர்.

குசைரில் வாங்கிய அடிகளிற்கு பகரமாக ஹோம்ஸில் தங்கள் வெறித்தனத்தை ஆட ஆரம்பித்தனர் சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து தங்கள் ஆத்திரங்களை தீர்க்க முற்பட்டனர்.

கையில் கிடைத்த பொது மக்களை தங்கள் துப்பாக்கிகளால் சல்லடை போட்டு தீர்த்ததுடன் கத்திகளால் உடலின் ஓகன்களை குத்தி குதறி தங்கள் ஷியா குணத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

 F.S.A. கொமாண்டர் ஜபாஃ அல் நுஸ்ராவின் சோதனை சாவடியில் சுட்டுத்தள்ளப்பட்டதன் எதிரொலியாகவோ அல்லது பழிவாங்களாகவோ இது இருக்கலாம் என்பதே வலிதான ஊகங்களாகும்

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: