துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்டோகனின் காஸா பயணத்தை ரத்துச் செய்தது எகிப்து ராணுவ அரசு!
துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்டோகனின் காஸா சுற்றுப்பயணத்தை எகிப்தில்
இயங்கும் ராணுவ அரசு ரத்துச் செய்துள்ளது.
ராணுவப் புரட்சியின் மூலம் அராஜகமாக வெளியேற்றப்பட்ட அதிபர் முஹம்மது
முர்ஸிக்கு ஆதரவாக எர்துகான் இருக்கிறார் என்பதால் எகிப்தின் சட்டவிரோத ராணுவ அரசு,
எர்துகானுக்கான அனுமதியை ரத்துச் செய்துள்ளது என்று அந்நாட்டின் ராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேதி நிச்சயிக்கப்படாவிட்டாலும் இம்மாதம் எகிப்து வழியாக காஸ்ஸாவுக்கு
செல்ல எர்துகான் திட்டமிட்டிருந்தார். காஸ்ஸா செல்வதற்கான அனைத்து வழிகளையும்
இஸ்ரேலும், எகிப்தும் மூடியுள்ளன.
காஸ்ஸாவின் மீது ஏற்படுத்தியுள்ள கடல் வழி தடையை நீக்க இஸ்ரேலுக்கு
எர்துகான் அழுத்தம் கொடுத்து வருகிறார். எகிப்தில் நடந்த ராணுவப் புரட்சிக்கு எதிராக
வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஒரே நாடு துருக்கி ஆகும்.
இந்நிலையில் எகிப்தில் முஹம்மது முர்ஸியை மீண்டும் அதிபர் பதவியில்
அமர்த்தக் கோரி நடக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஏமன் நாட்டைச்
சேர்ந்தவரும் நோபல் விருதுப் பெற்றவருமான தவக்குல் கர்மானை எகிப்தின் சட்டவிரோத அரசு
திருப்பி அனுப்பியுள்ளது.
0 comments: