நவ சிலுவை யுத்தமும் பேஸ்புக் முஸ்லிம்களும் (மீள்பதிப்பு)
இதை எழுதுகின்ற வேளை முஸ்லிம்களின் பெரிய தேசங்களில் ஒன்றானசூடான் துண்டாடப்பட்டிருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுச் சதியில் பிரிக்கப்பட்ட தென் சூடான் ஒரு கிறிஸ்தவ தேசமாக மலர்ந்திருக்கும். இனியென்ன. வட சூடானாகிய முஸ்லிம் தேசத்தில் வாழும் கிறிஸ்தவர்களிற்கு எதிரான அபாண்டமான ஒடுக்குமுறைக்கும், சித்திரவதைகளிற்கும் எதிராக மீண்டும் இந்த மேற்குலகு ஓலமிடத்தொடங்கும். நெதர்லாந்து சூடானிற்கு செல்லும் அமைதி காக்கும் படையில் தானும் பங்கு கொள்வதாக முன்வரும்.சூடானிய முஸ்லிம்களின் இரத்தம் ஸஹாரா பாலைவனத்தை குளிர வைக்கும்..
இது தானே இன்று உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகள். முஸ்லிம் தேசங்களிற்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் செய்யும் யுத்தங்கள் தான் இன்றைய தலைப்புச் செய்திகள். இஸ்லாமோஃபோபியா எனும் மேற்குலகின் நயவஞ்சக சொல்லின் கீழ் தாங்கள் செய்யும் அனைத்து விதமான மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரவாதங்களையும் மறைக்கப் பார்க்கின்றார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் அடிப்படைவாதம்எனும் சொற்களும் இவர்களி்ன் பாதகச் செயல்களை மறைக்க வெகுவாக உதவுகின்றன.
நெதர்லாந்தில் நபியை கேவலப்படுத்தி கார்டூன் வரைகிறான். அதை அந்நாட்டு நீதித்துறையும் பாராளுமன்றமும் வேடிக்கை பார்க்கிறது. ஹலால் இறைச்சிகளை தடை செய்கிறது. நிகாபை நீக்கச் சொல்கிறது. நிகாபை நிரந்தரமாக நீக்க பிரான்ஸ் சட்டம் கொண்டுவரப்பார்க்கிறது. அவுஸ்திரேலியா முஸ்லிம்களிற்கு எதிராக சகலவிதமான வார்த்தை பிரயோகங்களையும் பாவிக்க சட்ட ரீதியாக பொதுமக்களிற்கு அங்கீகாரம் அளிக்கிறது. இப்படி பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆப்கான், பலஸ்தீன், செச்னியா, ஈராக், மியன்மார் என முஸ்லிம்கள் மீது கூட்டு படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. முஸ்லிம் நாடுகள் பலவீனப்படுத்தப் படுகின்றன. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறான நிகழ்வுகளில் இருந்து நமக்கு அவர்கள் சொல்லும் செய்தி இதுதான். முஸ்லிம்களிற்கு கிறிஸ்தவ மண்ணில் இடமில்லை. நீங்கள் உங்கள் தேசங்களில் போய் உறையுங்கள் என்பதே.
இதிலிருந்து ஒரு தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.நவ சிலுவைப்போரை மேற்குலகு முஸ்லிம்கள் மீது எப்போதோ ஆரம்பித்து விட்டது. அதன் நிகழ்ச்சி நிரலின் அங்கமே இப்போது நடைபெறும் நிகழ்வுகள்.
போர் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது இரு அணிப்படைகளும் பரஸ்பரம் மோதிக்கொள்வது. பழைய சிலுவை யுத்தங்களும் அவ்வாறே நிகழ்ந்தன. ஆனால் உண்மை அப்படியல்ல. இன்றைய போரில் இராணுவம் எனும் வரையறைக்குள் எதையும் பார்க்க முடியாது. பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, வர்த்தகம் என ஆரம்பித்து ஒரு கடையின் விற்பனையாளர் , வாடிக்கையாளர் வரை இந்த சிலுவை யுத்தம் விசாலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லி்ம் வீதியில் இறங்கியது முதல் மீண்டும் தனது இல்லம் வந்து சேரும் வரை விதவிதமான சிலுவை யுத்த வீரர்களையும் பலதரப்பட்ட களங்களையும் சந்திக்கின்றான். ஆனால் இதன் பரிணாம வீச்செல்லைகளை இந்த முஸ்லிமால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. கொக்கோ கோலா கல்சரில் மூழ்கிய முஸ்லிமாக அவன் வாழ்க்கை நகர்கிறது.
மொங்கோலிய ஜெங்கிஸ்கானின் வருகையை அன்றைய உலமாக்கள் சிலர் இவன் தான் தஜ்ஜாலா என அஞ்சினர். அவ்வளவு கொடூரமானது அவனதும் அவனது படையினரதும் அனுகுமுறை. இப்போது பல்லாயிரக்கணக்கான ஜெங்கிஸ்கான்கள் உலகில் முஸ்லிம்கள் மீது முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளனர். ஆனால் அவர்களது தாக்குதலும் அதனால் ஏற்படும் அழிவுகளும் முஸ்லிம்களால் உடன் உணரப்படக்கூடிய ஒன்றாக இல்லை.
இன்றைய ஜெங்கிஸ்கான்களும், கிங் ரிச்சர்ட்களும் மென்மையாகவே முஸ்லி்ம்களை அழிக்கின்றனர். ஒரு போராளி முஸ்லிமின் பேஸ்புக்கே அவனையும் அவனுடன் தொடர்புடைய ஏனைய போராளிகளையும், போராட்ட அமைப்புக்களையும் துல்லியமாக காட்டிக்கொடுக்கிறது. முஸ்லிம்களை முஸ்லிம் நாடுகளிற்கு விரட்டும் இவர்களது இந்த நடவடிக்கை கேன்சர் போன்றது. உடன் உணரப்பட முடியாதது. உணரும் போது எதுவுமே மிச்சமிருக்காது.
லண்டனிலும், பாரிஸிலும் இஸ்லாத்தை முழங்கும் முட்டாள்களாகவே நாம் இன்றும் இருக்கின்றோம். தனது சொந்த நாட்டில் தஃவா செய்ய துப்பில்லாமல் வெளிநாடுகளில் சென்று தஃவா செய்யும் தாயிகளே நாளை இந்த ஜெங்கிஸ்கான்களை எதிர்கொள்ளப்போகிறார்கள். இஸ்லாமிய சூழல் என்றும் இகாமத்தே தீன் என்றும் முழங்கும் இந்த காட்போர்ட் போராளிகள் தங்கள் குடும்பங்கள் சகிதம் ஜாஹிலிய சூழல் குறைந்த யெமனின் சில பிரதேசங்களிலோ அல்லது சூடானிய வெளிகளிளோ வாழ தயாரா?. இல்லை. இல்லவே இல்லை. மேற்குலகின் அதீத சமூக சேவையின் ஊடாக இனாமாக கிடைக்கும் ஊதியம் இவர்களிற்கு இலாஹியத்தை விட முக்கியம். இலவச கொடுப்பனவுகளை பெற்றக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியின் மகிமை பற்றி பேசும் தாயிகள் இருக்கும் வரை மேற்குலகு வெற்றிபெற்றுக் கொண்டே தான் இருக்கும்.
கிலாபா கோட்பாட்டை முழங்கும் இன்னொரு கூட்டமும் லண்டனில் தான் முகாமிடுகிறது. அன்றைய முஸ்லிம் சாம்ராஜ்யங்கள் சோமாலியா மற்றும் எதியோப்பியாவில் இவர்களால் கிலாபாவை கட்டியெழுப்ப முடியாது. இவர்கள் கனவு காணும் கிலாபா அன்றைய உமையாக்களின் எச்சங்களே.
சில தனி நபர்களிற்கு அல்லது குழுக்களிற்கு அவர்களது அடைவுகளை மேற்கொள்ள கிலாபா கோஷம் தேவைப்படுகிறது. ஜிஹாத் வேண்டும் என்பதற்காக ஜிஹாத் களங்களை திறக்கும் மார்க்க முட்டாள்கள் இவர்கள்.
நவீன சிலுவை யுத்தம் ஆரம்பமாகி பல வருடங்களாகி விட்டன. அதை முகம் கொடுக்க நாம் தயாராகவில்லை. யுத்தத்தின் கட்டங்கள் மாறும் பொழுது முஸ்லி்ம்கள் மீதான நெருக்கடிகளும் படிப்படியாக அதிகரிக்கின்றன.
டொனி பிளேயர் குர்ஆனை தினமும் ஓதுவது தான் இன்றை முஸ்லிம் மீடியாக்களின் தலைப்பு செய்தி. முஸ்லி்ம்கள் பரஸ்பரம் பகிர்வதும் இதைத்தான். நேற்றைய குத்பாவில் (இலங்கையில்) ஒரு முல்லா மிம்பரில் ஏறி நின்று முழங்குகி்ன்றது. டொனி பிளேயரின் தனித்துவங்களை பற்றி. அது மேலும் சொல்கிறது ”அவரிற்காக நாம் பிரார்த்திப்பது கடமையென்று”. கடைசியில் அவரிற்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் வேண்டி பிரார்த்திக்கிறது. அட முல்லா தான் இப்படி என்றால் அங்கு வந்திருந்த முஸ்லிம்களும் ஆர்வமாக ஆமீன் சொல்கிறார்கள். எவ்வளவு கேவலமான நிலை. இந்த பிளேயரின் கட்டளையால் பஸராவிலும், கந்தஹாரிலும் நுழைந்த பிரித்தானிய இராணுவ மிருகங்கள் செய்த கொலைகள், கற்பழிப்புக்கள், சித்திரவதைகள், அழிவு நாச வேலைகள் ஆயிரம் ஆயிரம். இந்த அநியாயங்களை பற்றி பேசாத முல்லா அவன் குர்ஆன் ஓதுவதை இஸ்லாத்தின் வெற்றியாக பிரகடனப்படுத்துகிறது.
இது தான் இன்றைய நிலை. கிறிஸ்தவ வெறியர்களை களம் கண்ட சலாஹீதீன் அய்யூபியை மக்களிற்கு இனங்காட்ட வேண்டியவர்கள் ஸெய்ன்பிகாவை அறிமுகப்படுத்துகிறார்கள். காஸாவின் பட்டிணியை பற்றி பேச வேண்டிய முல்லாக்கள் மைக்கல் ஜக்ஸனின் ஜனாஸாவை பற்றி கவலைப்படுகிறார்கள்.
சிலுவை தயார். சிலுவை யுத்தமும் தயார். சிலுவை வீரர்களும் தயார். நாம் என்ன செய்யப் போகிறோம்? மஹ்தியும் தயார். ஈஸாவும் தயார். மறுமையும் தயார். என பதில் சொல்லப்போகிறோமா என்ன?!!
0 comments: