ஆயுத பரிசோதகர்கள் சிரியாவை விட்டு வெளியேறி லெபனான் சென்றனர் - சீறும் ஏவுகணையும் சிவக்கும் சிரியாவும்!!
ஐ.நா. ஆயுத பரிசோதகர்கள் குழு இன்று காலை சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸில் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளை காலி செய்துவிட்டு புறப்பட்டு விட்டனர். சிரியாவில் இருந்து வெளியேறிய இவர்கள், அருகிலுள்ள லெபனானுக்குள் சென்றுவிட்டதாக தெரியவருகிறது.
இவர்கள் புறப்பட்டு சென்றதையடுத்து, நாளை கூட சிரியா மீது ஏவுகணை தாக்குதல்கள் தொடங்கப்படலாம் என்று பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது என்றால், தமது போர்க் கப்பல்களில் இருந்து தொலைதூர பாலஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் என்றே ராணுவ வட்டாரங்களில் கூறப்படும் தகவல்கள் உள்ளன. அமெரிக்க போர் கப்பல்கள் மெடிட்டரேனியன் கடலில் தயாராக உள்ளன.
பிரிட்டிஷ் அரசு, சிரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பாக கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெறவில்லை என்பதால், பிரிட்டன் ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவுடன் பிரான்ஸ் கைகோர்த்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
பிரான்ஸ் கடற்படையின் ஒரேயொரு போர்க்கப்பல்தான் தற்போது மெடிட்டரேனியன் கடலில் உள்ளது. அதேநேரத்தில் பிரான்ஸ் நினைத்தால், 24 மணி நேரத்துக்குள் வேறு கப்பல்களை சிரியாவுக்கு அருகே கொண்டுவர முடியும்.
0 comments: