“எமது ராணுவ தளபதிகளின் விரல்கள் ஏவுகணை ட்ரிக்கர்களில் உள்ளன!
சிரியாவின் பிரதமர் வாயெல் அல்-ஹல்கி |
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ள நிலையில், “சிரியா ராணுவமும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. எமது விரல்கள் ஏவுகணை ட்ரிக்கரில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார், சிரியாவின் பிரதமர் வாயெல் அல்-ஹல்கி.
சிரியா பிரதமர் வெளியிட்ட அறிக்கை, நேற்று (சனிக்கிழமை) முழுவதும் திரும்ப திரும்ப சிரியா அரசு தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகியது. “எமது நாட்டின்மீது அமெரிக்கா உட்பட எந்தவொரு வெளிநாடு தாக்குதல் நடத்தினாலும், நாம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கப் போவதில்லை. எந்த சக்தியையும் திருப்பி தாக்கும் வல்லமை, சிரியா ராணுவத்துக்கு உண்டு” என்பதே அவரது அறிக்கையின் பிரதான பாயின்ட்டாக உள்ளது.
“நம் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முறியடிக்கும் விதத்தில், எமது ராணுவத் தளபதிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டு விட்டது. அவர்களது விரல்கள், ஏவுகணைகளின் ட்ரிக்கர்களில் உள்ளன.
சிரியாவை நோக்கி ஏவுகணைகள் எப்போது புறப்படுகின்றனவோ, அடுத்த விநாடியே, சிரியாவில் இருந்தும் ஏவுகணைகள் சீறிக்கொண்டு கிளம்பும்” என்று முடிகிறது அவரது அறிக்கை.
மற்றொரு புறமாக, சிரியா மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய புரட்சிப்படை (Iran’s elite Revolutionary Guards) தளபதி மொஹமெட் அலி ஜஃபாரி, “அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தினால், அது சிரியாவின் எல்லைக்குள் முடிந்து போகும் யுத்தமாக இருக்காது. சிரியாவுக்கு வெளியே உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீதும் ஏவுகணைகள் போய் விழும்” என்கிறது நேற்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கை.
0 comments: