Facebook Twitter RSS

குப்ரிய ஏகாதிபத்தியமும் முஸ்லீம் உம்மாவும் .(ஒரு சிறப்புப் பார்வை.)


          ஒவ்வொரு ஏகாதிபத்தியத்தினதும் நோக்கமும் பண்பும் ஒன்றுதான் .அது தனது மேலாதிக்க நிலையை காப்பற்றிக்கொள்ளவும் , தனது அழிவைத் தடுக்கவும் அரசியல் ,இராணுவ ,பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்புகளை செய்து தன்னை சாராத அடுத்த மனிதர்களை எவ்வகையிலேனும் கட்டுப்படுத்தும் ,மேலும் தன்னை வளப்படுத்த வளங்களை அளவு கணக்கின்றி சுரண்டும் ,கட்டுப்படுத்தும் .இத்தகு பணிகளுக்காக எந்த ஒரு கொடூரமான அழிவையும் ,அழிப்பையும் செய்யும் .
     எனவே இத்தகு அதிகாரங்களுக்கு எதிராக அநீதியை எதிர்க்கும்  மக்கள் போராட எழுவது இயல்பானது .அந்த வகையில் மனித குல வரலாறு நெடுகிலும் வடிவங்களில் வேறுபட்ட ஏகாதிபத்தியங்கள் தமது அடக்குமுறையை மனித சமூகத்தின் மீது பிரயோகித்து வந்துள்ளது . மனித குலமும் தனக்கு தெரிந்த வழிமுறைகளில் இத்தகு மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியே வந்துள்ளனர் . ஆனால் இந்த போராட்டப் பாதையின் உன்னத வடிவத்தை மிகச் சரியாக வரைவிலக்கணம் செய்தது இஸ்லாம் தான் என்றால் அது மிகையான கருத்தல்ல .

        எப்படி ? மனிதன் மனிதன் மீது அடிமைப்படும் மனோபாவத்தையும் ,சூழ்நிலையையும் முற்றாகவே , தவிர்த்தல் , தடுத்தல் , தவிடுபொடியாக்கல் என்பதில் இருந்துதான் இஸ்லாம் சொல்லும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மூலவடிவம் தோற்றம் பெறுகிறது .

           அது முன்னைய நபிமார்களின் வரலாற்றை வஹி சொல்லவந்து பிர் அவன் , நும்ரூத் போன்றோரை குறிப்பிட்டாலும் சரி ,அல்லது மனித குலத்தின் இறுதி வழிகாட்டியான முஹம்மத் (ஸல் ) அவர்களின் சமகால ஏகாதிபத்தியங்களான ரோம் , பாரசீகமாக இருந்தாலும்  இத்தகு சக்திகளின் கைக்கூலிகளாக இருந்த குரைசிக் காபீர்களாக இருந்தாலும் இஸ்லாம் வேறுபடுத்தாமல் ஒரே பண்புடனே நோக்குகிறது .

           இந்த வகையில் இத்தகு கொடூர சக்திகளுக்கு எதிராக வரலாற்று நெடுகிலும் இஸ்லாத்தின் மோதலும் இயல்பாகியது . இந்தப் போராட்டத்தின்  தவிர்க்க முடியாத போராளிதான் முஸ்லீம் . அவனது பணியும் பார்வையும் மிக உயர்ந்தது .இன்று தவறான வழிகாட்டலாலும் திட்டமிட்ட சதிகளாலும் ,தனது சுய பலவீனங்களாலும் இப்பணியை மறந்தான் . இப்பணிக்காகவே கட்டமைக்கப் பட்ட தனித்துவமான கிலாபத் எனும் ஒரே தலைமையைக் கொண்ட இறைவனின் பிரதி நிதித்துவ ஆட்சியையும் இழந்தான் .

          விளைவு முழு உலகையும் ஆக்கிரமித்த அந்த ஏகாதிபத்திய அதிகாரப் பேய் முஸ்லீம் நிலங்களையும் குடிகொண்டு இரத்தம் குடிக்க கற்றுக் கொண்டது . நர வேட்டையின் குத்தகை களஞ்சியமாக முஸ்லீம் நிலங்களை பாவிக்கும் ஏகாதிபத்தியம் இப்போது 'காசாவில்' சியோனிஸ 'ரெகுலாவாக ' தனது திசை திருப்பும் கோரத் தாண்டவத்தை தொடங்கியுள்ளதாக தெரிகின்றது . எகிப்தின் இரத்தக் கலரியில் கண் கலங்கி நின்ற சுவடுகள் கூட மாறவில்லை !

                   இது ஆணவத்தில் நேற்று  ஆடிய இந்த ஏகாதிபத்திய காட்டேரிகள்  இன்று அச்சத்தோடு நடுங்கிக் கொண்டு  இருக்கின்றார்கள் என்பதன் ஆதாரம் .அதன் காரணம் ஒரே ஒரு வார்த்தை ! அது சிரிய போராளிகளின் உளப்பூர்வமான  வார்த்தையாக வெளிவரும்  'கிலாபா' தேசம் பற்றிய எதிர்வு கூறலே ! இப்போது முஸ்லீம் உம்மத்தை குப்பாரிய ஏகாதிபத்தியம் ஒரு திசை திருப்பும் போர் ஒன்றின் மூலம் அதன் உண்மையான மறுமலர்ச்சி பார்வையை விட்டும் தவிர்க்க பார்க்கிறார்கள் .

                     அழிவுகள் ,அழிப்புகள் மூலம் இந்த முஸ்லீம் உம்மத்தை திசை திருப்பி விட்டு இந்த ஏகாதிபத்தியங்களின் கூட்டு  மீண்டும் கட்டமைக்கப்படும் சத்திய விடுதலையின் கேடயமான கிலாபா அரசின்  மீள் வருகையை இரகசியமாக  குழிதோண்டிப் புதைக்க நினைக்கிறார்கள் . அநியாயக் காரர்களும் அக்கிரமக்காரர்களும் முடிந்தால் எம் உயிரற்ற உடல்களின் மீது ஆட்சியை தொடரட்டும் என இலட்சியத் தெளிவோடு போராடும் அந்த தூய வீரர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் . அல்லாஹு அக்பர் ... அல்லாஹு அக்பர் ....

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: