இட்லிப்பின் Ariha நகர் போராளிகள் வசம் வீழ்ந்தது!! - மரபு படையணிகளாக மாற்றம் பெறும் முஜாஹிதா அணிகள்
சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் Ariha நகர் இப்போது சிரிய போராளிகளால் மீட்கப்பட்டுள்ளது. இட்லிப் சமர்களில் சவால் மிக்கதும் மிக மோசமான எதிரியை சந்திக்க நேர்ந்ததுமான இந்த சண்டைகளில் போராளிகள் முழு Ariha பிரதேசத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். FSA போராளிகளின் கடும் முற்றுகைக்கும் தாக்குதலிற்கும் கடந்த இரண்டு வார காலமாக முகம் கொடுத்திருந்த இந்த நகரை சிரிய அரசு இழந்துள்ளது.
ஈரானிய ஷியா புரட்சி படையின் ஒரு தொகுதியினர் இங்கு சிரிய அரசு சார்பில் சமராடியிருந்தனர். அது போலவே லெபனானிய ஹிஸ்புல்லாக்களும், ஈராக்கிய ஷியாக்களான Fadhl Abu al-Abbas படையணியும் சிரிய ஆட்சியாளர்களின் இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத்தும் விதத்தில் இந்த நகரில் தரித்திருந்தனர்.
FSA போராளிகள் தங்கள் இறுதி கட்ட தாக்குதலின் போது முஜாஹித்களின் உதவியையும் கோரியிருந்தனர். ஈராக்கிய பதுல் அல்-அப்பாஸிகளும், லெபனானின் ஹிஸ்புல்லாக்களும் இந்த சண்டைகளில் ஆக்ரோஷமான பதில் தாக்குதலை நடாத்தியிருந்தனர். இவர்களது கர்ண கடூரமான தாக்குதல்களின் முன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் FSA கட்டளைத்தலைமை முஜாஹித்களின் உதவியை அவசரமாக வேண்டி நின்றனர். இவர்களிற்கு உதவும் பொருட்டு Ahrar Movement ash-Sham al-Islamiya தனது முஜாஹித்களை களமிறக்கியது. அல்ஹம்துலில்லாஹ் இறைவன் அவர்களிற்கு வெற்றியை நல்கினான்.
இந்த தாக்குதலில் சோவியத் தயாரிப்பான BMP panser இன்பன்ட்ரி பைட்டிங் வெகிகில், டாங்கிகள், கனரக இயந்திர துப்பாக்கிகள், கயூட்ஷா ரக மல்டி பரல் லோஞ்சர்கள், ஜீ.பீ.எம்,ஜீ. நடுத்தர இயந்திர துப்பாக்கிகள், ஒலிகன் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் போன்றவற்றை தம் வசப்படுத்தியுள்ளனர். இதனை விட இலட்சக்கணக்கான ரவைகளையும், மல்டி பரல் ரொக்கெட்களையும், பல டன் எடையுள்ள வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
Ariha நகர் மீதான தாக்கதல்களில் போராளிகள் வீதிகள் ஊடாக நகர்ந்து பிரான செக் போஸ்ட்களை சேஜரி செய்து அதன் பின்னர் அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இரண்டு இந்த நகரிற்கான பிரதான நெடுஞ்சாலை சந்திகளில் உள்ள அரண்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பின்னர் அந்த பாதைகள் வழியாக நேரடி சமரிற்கு போராளிகளை கொண்டு வந்து குவித்துள்ளனர்.
சிரிய போராளி அமைப்புக்கள் தங்களை மரபு நிலை கட்டமைக்கப்பட்ட படைகளாக வடிவமைத்து வருகின்றனர். சண்டையிடும் அணிகள் பின்னகர்த்தப்பட்டு வேறு அணிகள் களங்களிற்கு அனுப்பும் அளவிற்கு அனுபவமும், போர்ப்பலமும் அவர்களிடம் வந்துள்ளது. இது அமெரிக்காவிற்கு அலர்ஜியான விடயம். அவர்களை எப்போதும் கெரில்லா போராளிகளாக பராமரிக்கவே பென்டகன் விரும்புகிறது. இஸ்லாமிய போராளிகள் மரபணிகளாக கட்டமைக்கப்பட்டால் அவர்களது பயணம் அடுத்ததாக சவுதி அரேபியாவை நோக்கியும், இஸ்ரேலை நோக்கியும் இருக்கும் என்பது அமெரிக்காவிற்கு தெரியாதா பின்னே!!
0 comments: