Facebook Twitter RSS


ஆப்கானிஸ்தானில்


நேட்டோ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்....

காபுல் : ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் படை வீரர்கள் மீது போராளிகள்  அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.    அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில், அமெரிக்க ரோந்து வாகனம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் உடையுடன் மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் அந்த வாகனத்தின் மீது திடீரென பாய்ந்து, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். 

இந்த தாக்குதலில் 3 நேட்டோ படை வீரர்கள், 4 போலீசார் மற்றும் அருகில் இருந்தவர்கள் என 20 பேர் இறந்தனர். மேலும், 37 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் போராளிகள்  பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: