Facebook Twitter RSS

அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலைக் கண்டித்து இம்ரான்கான் போராட்டம்...

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான்கான் பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான தலைநகர் இஸ்லாமாபாத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தெற்கு வஜிரிஸ்தான் நோக்கிய பேரணியை தொடங்கி வைத்தார். ஆனால் எல்லைப் பகுதியில் தலிபான்கள் இந்தப் பேரணியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டிருக்கும் அமெரிக்கப் படைகள் ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தான் எல்லையோர மாகாணங்களில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரின் இந்த ஆளில்லா விமானங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதாக புகார் இருந்து வருகிறது.
இதனடிப்படையிலேயே மேற்குலநாடுகளின் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார்.

 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: