Facebook Twitter RSS



ஈரானின் நாணய மதிப்பு 40 வீதம் வீழ்ச்சி!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின், பொருளாதார தடை காரணமாக, ஈரான் நாட்டின், கரன்சி மதிப்பு 40 சதவீதம் சரிந்துள்ளது. ஈரான் நாடு, அணு ஆயுதம், தயாரிப்பதாக கூறப்படும் புகாரையடுத்து, அந்நாட்டின் மீது, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை விதித்துள்ளன. இதன் காரணமாக அந்நாட்டிலிருந்து, கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஈரான் நாட்டு வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கிடையே அந்நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துள்ளது. கரன்சியின் மதிப்பு சரிந்து வருவதால், ஈரான் மக்கள், தங்களிடம் உள்ள ரியாலை, டாலர்களாக மாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையால், ஈரான் அரசிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து விட்டது. டாலர் பரிமாற்றம் செய்யும் வர்த்தகர்கள் மீது, ஈரான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: