Facebook Twitter RSS


"விளம்பரங்களில் நடிப்பவர்கள் மீதும் வழக்கு தேவை"




விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மீது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் மற்றும் நிறுவன சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் வழக்கு தொடுக்கலாம் என்று தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர் ரகுபதி ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.
விளம்பரங்களில் நடிப்பவர்கள் மீது இன்றைய நிலையில் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இப்படியான வழக்கு தொடுப்பதற்கு சாத்தியமில்லை என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய உறுப்பினர் வாசுகி ரமணன். அதேசமயம், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.
வர்த்தக விளம்பரங்களில் நடிப்பவர்கள் தங்களின் பெயரை, புகழை, பிரபல்யத்தை பயன்படுத்தி, தாங்கள் தோன்றும் விளம்பரங்கள் மூலம், குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது பொருட்களையோ வாங்கும்படி நுகர்வோரை தூண்டுகிறார்கள் என்று கூறும் வாசுகி, இவர்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பொருட்களின் முகவர்களாகவே செயற்படுகிறார்கள் என்கிறார்.
அப்படி முகவராக தோன்றி நுகர்வோரை தூண்டும் இவர்களுக்கு தாங்கள் ஊக்குவிக்கும் நிறுவனம் அல்லது பொருட்களின் தரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும், தராதரம் தெரியாமல் நிறுவனங்களுக்கோ அல்லது பொருட்களுக்கோ முகவராக செயற்படக்கூடாது என்கிற பொறுப்புணர்வு இந்த நடிக, நடிகை மற்றும் பிரபலங்களுக்கு உருவாக வேண்டும் என்றும் கூறுகிறார்.
விளம்பரங்களில் நடிப்பவர்கள் தங்களின் வருமானத்தில் செலுத்தும் அக்கறையை, தாங்கள் ஊக்குவிக்கும் பொருள் அல்லது நிறுவனத்தின் தராதரம் பற்றி தெரிந்துகொள்வதிலும் செலுத்தவேண்டும் என்பதே நுகர்வோர் பாதுகாப்புக்காக குரல்கொடுக்கும் தன்னைப்போன்றவர்களின் கோரிக்கை என்கிறார் வாசுகி.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: