லோரன்ஸ் ஒப் அரேபியாவும் பந்தர் பின் சுல்த்தானின் அரேபியாவும் !!
பந்தர் அல் சுல்தான் |
வேல்சில் பிறந்த லாரன்ஸ், தன்
இளமைக் காலத்தில் களத் தொல்லியளாராக பணி புரிந்தார். மத்திய
கிழக்காசியாவின் பல மொழிகளை லாரன்ஸ் அறிந்திருந்ததால், பாலஸ்தீனத்தின்
நெகேவ் பாலைவனத்தை ஆய்வு செய்ய பிரிட்டானிய ராணுவத்தால்
வேலைக்கமர்த்தப்பட்டார். முதல் உலகப் போர் மூண்டபின் முறைப்படி பிரிட்டானிய
தரைப்படையில் சேர்ந்தார். உதுமானிய கிலாபாவுக்கு எதிராக பிரிட்டனும் ஏனைய நேச நாடுகளும் அரபுக் பழங்குடியினரை புரட்சி செய்ய்த் தூண்டினர். அப்படி உருவான அரபுப் புரட்சியின் போது பிரிட்டனின் சார்பாக அரபு குடிகளுக்குத் தூதுவராகவும் ஆலோசகராகவும் லாரன்ஸ் அனுப்பப்பட்டார்.
உதுமானிய கிலாபாவின் முக்கிய
நகரங்களான ஆக்வபா மற்றும் தமாஸ்கஸ் போன்றவற்றை கைப்பற்றும் முயற்சிகளில்
அரபுப் படைகளுடன் இணைந்து பங்கேற்றார். முதலாம் உலகப்போரில் அவர் ஆற்றிய
அரும்பணிகளுக்காக பிரிட்டானிய அரசு அவருக்கு பல உயரிய பதக்கங்களை வழங்கி
லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு அளித்தது.போர் முடிந்த பின்னர் ஒரு
சுதந்திர மன்னரிச அரபி தேசியம் அமைப்பதற்காக அரபுத் தலைவர் எமிர் ஃபைசலின்
ஆலோசகராகப் பணியாற்றினார்.
இக்காலகட்டத்தில் வெளியான
இவரது செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம் என்ற நூலும், அமெரிக்கப்
பத்திரிக்கையாளர் லோவல் தாமசின் மிகைப்படுத்தப் பட்ட செய்திக்
குறிப்புகளும் மேற்குலகில் லாரன்சுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
அவருக்கு அரேபியாவின் லாரன்ஸ் என்ற பெயர் உருவாகி வெகுஜன நினைவில் ஆழமாகப்
பதிந்து விட்டது. லாரன்ஸ் 1922ல் பிரிட்டானிய வான்படையில் சேர்ந்து பல
ஆண்டுகள் பணிபுரிந்தார். லாரன்ஸ் தனது பெயரை டி. ஈ. ஷா என்று மாற்றிக்
கொண்டார். விசையுந்து (மொட்டார் சைக்கிள்) ஆர்வலரான லாரன்ஸ் 1935ம் ஆண்டு
ஒரு விசையுந்து விபத்தில் மரணமடைந்தார். )
லாரன்ஸ் இவன்
யாரென்றால் உதுமானிய கிலாபா அரசில் இருந்து ஒரு மன்னர் ஆதிக்க சுயாட்சியாக
பிரிவினை அடைய உறுதுணையாக இருந்த பிரித்தானியாவின் கிறிஸ்தவ உளவாளி ! இந்த
பந்தர் பின் சுல்தான் யாரென்றால் அந்த கிறிஸ்தவ உளவாளி அமைக்க உதவிய அந்த
'கிங் டோம் ஒப் சவூதி அரேபியாவின் ' மன்னராட்சி மரபை பாதுகாக்கும்
மன்னரின் விசேட உளவுப்பிரிவின் இன்றைய தலைவர் .லாரன்ஸ் ஒரு கிறிஸ்தவன்
இந்த பந்தர் பின் சுல்தான் ஒரு முஸ்லிம் !
கிலாபா அரசு உடைக்கப்படுவதன்
அவசியத்தின் பின்னால் யூத, கிறிஸ்தவர்களுக்கு பல இலாபாங்கள் இருந்தன .
பாலஸ்தீனை பறிகொடுக்க பிரதான காரணமாக இந்த பிரிவினை எனும் வரலாற்றுத்
துரோகம் இருந்தது அதன் பின்னாலும் மன்னராட்சியை தக்கவைப்பதில் இன்றுவரை
முஸ்லீம் சகோதரப் படுகொலைகளை நியாயம் காண்கிறது ! அந்த கேவலமான இரத்தக் கறை
படிந்த கரங்களின் உரிமையை இன்று தன்வசமாக்கியுள்ளவன் தான் இந்த பந்தர்
பின் சுல்தான் !!
முஸ்லீம் உம்மத்
இஸ்லாத்தின் அரசியலான கிலாபா அரசின் நிழலில் வந்துவிடக் கூடாது ;என்ற
மேற்கின் அச்சத்தை தவிர்க்கும் பணியை லாரான்சுக்காக இன்று செய்து
கொண்டிருக்கும் அரேபியக் குள்ளநரிதான் இந்த பந்தர் பின் சுல்தான் !அதாவது
சவூதிக்காக மட்டுமல்ல , அமெரிக்காவுக்காக ,ரஷ்யாவுக்காக , இஸ்ரேலுக்காக
,முழு குப்ரிய ஆதிக்க உலகுக்காக ,இன்னும் அதிர்ச்சிகரமாக ஈரானுக்காக என
தனது பணியை விரிவாக்கி இருக்கும் செல்வச் செழிப்பு மிக்க ஒரு விசுவாசம்
மிக்க கைக்கூலி !!!
ஒரு முஸ்லிம் தனது உலகியல்
வாழ்வை இஸ்லாத்தின் அடிப்படையில் வேண்டி நிற்பதில் இருந்தே அவனது
இஸ்லாத்தின் அரசியல் பரிமாணம் தோற்றம் பெறுகிறது .மறுமைக்காக இம்மையை
பயன்படுத்தல் என்ற கோட்பாட்டின் பிரகாரம் அவனது நடத்தையின் ஒவ்வொரு
விவகாரமும் ஆன்மீக விவகாரமாகின்றது . இத்தகு அவசியத்தில் இருந்துதான்
கிலாபா கோட்பாடு ஒரு அதி முக்கிய கடமையாக தோற்றம் பெறுகிறது .
இஸ்லாம் மனித நடவடிக்கைகளை
உறுதியாகவும் ,தெளிவாகவும் வரையறுத்த நிலையில் ஒரு சித்தாந்தமாக
இருக்கின்றது . அந்த வகையில் அதன் பிரயோக வடிவத்தின் மூலம் நிரூபிக்கப்
பட்டதும் சுன்னாவின் மூலம் அங்கீகரிக்கப் பட்டதும் கிலாபா அரசு மட்டுமே
ஆகும் . அப்படியான ஒரு நிலைக்கான மீள்வருகையை தடுக்கும் ஒரே நோக்கத்தோடு
தொழில்படும் ஒரு உளவு நிறுவனத்தின் தலைவரே இந்த பந்தர் பின் சுல்தான் .
எப்படி இவர் வேலை செய்கிறார் இன்ஷா அல்லாஹ் இன்னொரு தொடரில் .
0 comments: