அலெப்போ நகரில் விமானப்படை தாக்குதல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு
சிரியாவில் அதிபர் ஆசாத் குடும்பத்தினர் 40 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வருகின்றனர். இவரது ஆட்சிக்கு எதிராக போராளிக்குழுக்கள் கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் படையினர் பின்னடைவை சந்தித்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போராளிகள் வசமுள்ள வர்த்தக நகரான அலெப்போவின் மீது நேற்று விமானப்படையினர் 25 பேரல் (பீப்பாய்) குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு பேரல் குண்டில் 100 கிலோவுக்கு மேலான வெடிப்பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளில் போடப்பட்ட இந்த குண்டுகளால், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் 125 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலெப்போ நகரின் 10 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இடிபாடுகளில் இன்னும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதனால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டன என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் முதல் முறையாக ஐ.நா. வின் உணவுப்பொருட்கள் விமானம், ஈராக் வழியாக சிரியாவின் வடக்கு பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
6 ஆயிரம் சிரியா அகதிகள் குடும்பத்தினர் தங்கியுள்ள அங்கு கடும் குளிர் நிலவுவதால் கம்பளி ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்களை இன்னும் 12 நாட்களில் வழங்குவது குறித்து ஐ.நா. அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
- See more at: http://tamilnews.cc/news.php?id=49089#sthash.0RMDZTgI.dpuf
0 comments: