Facebook Twitter RSS

பெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு ஜாமீன் இல்லை

பெண் சாமியார்  பிரக்யா சிங்குக்கு  ஜாமீன்  இல்லை
போபால்:-- மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர் , தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவரது தந்தை சந்திரபால் சிங் என்பவர் 2 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் எடாவாவில் மரணமடைந்தார்.
அவரது குடும்பத்தார் பிரக்யாசிங் ஜாமீனில் வரும் வரை இறுதிச்சடங்குகள் செய்யப் போவதில்லை எனக்கூறினர். இறந்தவரது உடல் மத்தியபிரதேசத்தில் இருக்கும்  அவரது சொந்த கிராமமான  லஹருக்கு எடுத்துச் செல்லப் பட்டது.
கடந்த 3 ஆம் தேதி பிரக்யா சிங்குக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்  கணேஷ் ஸோவானி மனு செய்திருந்தார். 4ஆம் தேதி நடக்கும் இறுதிச் சடங்கிலும் 13 நாள் துக்கத்திலும் பங்கேற்க ஜாமீன் கோரி மனு செய்திருந்தார்.ஆர் எஸ் எஸ் ஊழியர் சுனில் ஜோஷி கொலையிலும்  பிரக்யாசிங் கைது செய்யப்பட்டிருப்பதால் அதற்காகத் தனியாக மற்றொரு  மனுவும் அளிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் பாண்டே ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டு , இறுதிச்சடங்கில் மட்டும் பங்கெடுக்க ஒரு நாள் அனுமதி வழங்கினார்.  4 ஆம் தேதி இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு இன்று  5 ஆம் தேதி மீண்டும் சிறைக்குத் திரும்பும்படி உத்தரவிட்டார்


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: