சிரியாவில் போராளிகள் கை ஓங்கியதால் அல்யாரவுபியா எல்லையை மூட ஈராக் உத்தரவு |
சிரியாவில் போராளிகள் கை ஓங்கியதால் அல்யாரவுபியா எல்லையை மூட ஈராக் உத்தரவு
சிரியாவில் தற்போது போராடி வரும் போராளிகள், முஸ்லிம்களில் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் துருக்கி, வளைகுடா மற்றும் அரபு நாடுகள் போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. சிரியா அதிபர் பஷீர் அல் அசாத் சிறுபான்மைச் சமூகமான அல்வைட் இனத்தை சேர்ந்தவர் என்பதால் ஷியாக்களின் மேலாதிக்கத்தில் உள்ள ஈரான் அரசு பஷீர் அல் அசாத்தை ஆதரிக்கிறது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி போராளிகளின் கை ஓங்கி வருகிறது. சிரியா - ஈராக் எல்லைப்பகுதி வரை போராளிப் படைகள் கைப்பற்றியுள்ளன. அவர்கள் அடுத்ததாக ஈராக்கிற்குள் நுழைந்து அசம்பாவிதங்கள் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இரு நாட்டிற்கிடையிலான அல்யாரவுபியா எல்லை வழியை அடைக்கும்படி ஈராக் அரசு நேற்று உத்தரவிட்டது. |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: