Facebook Twitter RSS

சிரியாவில் போராளிகள் கை ஓங்கியதால் அல்யாரவுபியா எல்லையை மூட ஈராக் உத்தரவு

 


 
சிரியாவில் போராளிகள் கை ஓங்கியதால் அல்யாரவுபியா எல்லையை மூட ஈராக் உத்தரவு

சிரியாவின் அதிபர் பஷீர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 65 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக் கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
சிரியாவில் தற்போது போராடி வரும் போராளிகள், முஸ்லிம்களில் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் துருக்கி, வளைகுடா மற்றும் அரபு நாடுகள் போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. சிரியா அதிபர் பஷீர் அல் அசாத் சிறுபான்மைச் சமூகமான அல்வைட் இனத்தை சேர்ந்தவர் என்பதால் ஷியாக்களின் மேலாதிக்கத்தில் உள்ள ஈரான் அரசு பஷீர் அல் அசாத்தை ஆதரிக்கிறது.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி போராளிகளின் கை ஓங்கி வருகிறது. சிரியா - ஈராக் எல்லைப்பகுதி வரை போராளிப் படைகள் கைப்பற்றியுள்ளன. அவர்கள் அடுத்ததாக ஈராக்கிற்குள் நுழைந்து அசம்பாவிதங்கள் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இரு நாட்டிற்கிடையிலான அல்யாரவுபியா எல்லை வழியை அடைக்கும்படி ஈராக் அரசு நேற்று உத்தரவிட்டது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: