இஸ்ரேலை நோக்கி எகிப்தில் இருந்து லட்சக் க்ணக்கில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக் கிளிகள்!
கெய்ரோ: எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி லட்சக்கணக்கான பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுத்துச் செல்கின்றன. இதனால் விமானம் மூலம் அவற்றை தாக்கி அழிக்கும் மருந்துகளை தெளிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. எகிப்தில் பாலைவன வெட்டுக் கிளிகள் பயிர்களை நாசம் செய்து மிகப் பெரும் துயரை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருந்தன. தற்போது இவை எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் லட்சக் கணக்கில் படையெடுத்து சென்றிருக்கின்றன. சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் இஸ்ரேலை தாக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் வெட்டுக் கிளிகள் நுழையும் போதே விமானத்தில் இருந்து மருந்து தெளித்து அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் முடிவெடுத்திருக்கிறது. பாலைவன வெட்டுக்கிளிகளே இதற்கு முன்னரும் இஸ்ரேலில் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்தியிருக்கின்றன.
0 comments: